வட கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களின் அழைப்பை ஏற்று பற்குணம் மீண்டும் மாகாண சபைக்குத் திரும்பினார்.பற்குணத்தின் பாதுகாப்புக்கும் அவரே உத்தரவாதம் அளித்தார். பற்குணம் குடியிருந்த வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் புலிகளின் புலனாய்வுத்துறை அள்ளிச் சென்றுவிட்டது.அவருடைய மகளின் சிறுவயது சம்பாசனைகள் பதிவுசெய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாக்கள் கூட புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டது.எதுவும் மிஞ்சவில்லை.
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
பற்குணம் (பகுதி 112 )
நான் 1989 புரட்டாசி மாதம் கனடா வந்துவிட்டேன்.அதன்பின்பாக இலங்கை இந்திய அரசியலில் முறுகல் நிலை தொடங்கியது.புலிகளும் பிரேமதாசாவும் தேன்நிலவு கொண்டாட மாகாண சபை நிலைமை கேள்விக்குறியானது.இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய படைகள் வாபஸ் உறுதியானது.
பேரா. சிவசேகரத்தின் அசிங்கம்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் ஒரு பேரவை உறுப்பினராக சிவசேகரம் தன் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நலன்களை ஒதுக்கி செயற்பட்டுவருவது யாழிலிருந்துவரும் நம்பகரமான செய்திகளாக இருக்கிறது. 2015 சனவரியில் மைத்திரி சனாதிபதியானபின் டக்களசின் கைப்பாவைகளாக இருந்த பேரவை உறுப்பினர்கள் கலைக்கப்பட்டு தமிழரசுக்கட்சி சிபார்சு செய்த பெரும்பாலான படித்த நேர்மையானவர்கள் பேரவை உறுப்பினர்களாக்கப்பட்டார்கள்.
பற்குணம் (பகுதி 111 )
இதை இடைச் செருகலாக எழுதுகிறேன்,
எனது சகோதரன் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர்.இவர் ஒருவர் மட்டுமே அந்தகர கட்சியின் செயற்பாட்டாளர் .இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் தென்மராட்சி பிரதேச சபை உறுப்பினராக இருக்கிறார்.
இவர் 1982 இல் திருமணம் முடித்தார்.இந்த திருமணத்துக்கு சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரத்தினத்துக்கும் அழைப்பு வைத்தார்.ஆனால் அவர் வரவில்லை.இதுஅவருக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்தது.ஆனாலும் நவரத்தினத்தை பகைக்க விரும்பவில்லை.இவரின் அரசியல்போக்கு அப்படி இருந்தாலும் கொஞ்சம் வெளிப்படையாக பேசக்கூடியவர்.
ஒருநாள் தருணம் பார்த்து நவரத்தினத்திடம் தனது திருமணத்துக்கு ஏன் வரவில்லை என வினாவினார்.அதைக் கேட்ட நவரத்தினம் சிரித்துக்கொண்டே ஒரு கடிதத்தை பைலிருந்து எடுத்து என் சகோதரனிடம் கொடுத்து படிக்கக் கொடுத்தாராம்.அதைப் படித்துவிட்டு வந்து சமாதானமான என் சகோதரன் சிரித்துக்கொண்டே சொன்னார் அண்ணை நிற்கிற இடத்தில் எம்.பி வரமாட்டார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இக் கடிதம் பற்குணத்தால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் எழுதப்பட்டது.அதற்குப் பதிலளிக்காமல் ஆனால் பத்திரமாக அவ்வளவு காலம் வைத்திருக்கிறார்.அன்றைய நிலையில் நான் இதைப்பற்றி யோசிக்கவில்லை.
இது 1966-69 காலத்தில் எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.இக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் எம்.பிகளான நவரத்தினம்,அமிர்தலிங்கம்,செல்வநாயகம் ஆகியவர்களின் தொகுதிகளிலேயே தீண்டாமைக்கு எதிரான போராட்டம் உக்கிரமாக நடந்தது.இதன, காரணமாகவே தமிழரசுக்,கட,சியை அதிகம் வெறுத்தார்.அவர்கள் காட்டிய மௌனம் சந்தர்பவாதம் அப்படி.அதன் காரணமாக நவரத்தினத்தை கேள்வி கேட்டு எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.அதுவும் அவ்வளவு காலமும் பத்திரப்படுத்தி வைக்குமளவுக்கு முக்கியம் என்ன? அந்த கடிதம் பற்றி நானும் பற்குணத்திடம் விசாரிக்கத் தவறிவிட்டேன்.
ஆனால் பற்குணம் திருமண வீட்டுக்கு வந்தவரிடம் அரசியல் பேசமாட்டார்.நவரத்தினத்தின் பயம் தேவையற்றது.மேலும் போகவிட்டு புறம் சொல்லும் குணம்கூட அவரிடம் இல்லை.அப்படி யாராவது சொல்வதும் பிடிக்காது.யாரெனினும் நேரே சொல்லவேண்டும் என்பார்.
(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)
வரவேற்போம்.
கேப்பாபுலவு மக்கள் போராட்டம் பிலகுடியிருப்பு (பகுதியாகவோ முழுமையாகவோ) காணிகளை விடுவிப்பதில் வெற்றிகண்டுள்ளது என்பது மகிழ்ச்சி தருகிறது. மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கதைசொல்கிற அரசியல் வாதிகளினது பலத்தை விடவும் தமது பலத்தை நம்பியிருக்கிறார்கள் இந்த மக்கள்.
பற்குணம் (பகுதி 110 )
பற்குணம் மறுநாள் மதியம் போல என்னைக் காணவந்தார்.என்ன வரமாட்டேன் என்றாய் இப்போது வந்திருக்கிறீர்கள் என்றேன்.அந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்திய தூதரக அதிகாரி ஒருவர் அமிர்தலிங்கத்தையும் அந்த கட்சியினரையும் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.அது சம்பந்தமான கலந்துரையாடல்கள் நடத்த வேண்டி இருப்பதால் ரத்து செய்துவிட்டனர் என்றார்.
முன்னாள் போராளிகள் ஐக்கியப்பட்டு தமிழ் மக்களுக்கான தலமையை தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக கொடுப்பார்களா….?
(சாகரன்)
டிரிஎன்ஏ(DTNA), தமிழ் மக்கள் அரங்கம் போன்ற முயற்சிகள் நடைபெற்றதையும் இங்கு கவனத்தில் எடுக்கவேண்டும். இவை பலமான ஐக்கிய முன்னணிகளாக முன்னேறாதற்குரிய காரணங்களையும் இங்கு நாம் இதயசுத்தியுடன் ஆராயவேண்டும் இவை பெரும்பாலும் முன்னாள் விடுதலை அமைப்புக்களின் ஆளுமைக்குள் வளர்ந்து வரக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தன. அண்மையில் நடைபெற்ற தோழமை தின நிகழ்வுகளும் இதற்கான சில சுழிகளே. ஏன் 2009 மே இற்கு பின்னரான காலகட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலை அமைப்புக்களின் ஆளுமைக்குள் வருவதற்கானவாய்புக்கள் நிறையவே இருந்தன.
ஈழத்துப் பாடகர் சாந்தன்
ஈழத்துப் பாடகர் சாந்தன் அவர்கள், காலமான செய்தி கவலை தந்தது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பாடகராகவே அவரை நான் அறிந்திருந்தேன். அவரின் குரலில் வெளிவந்த எந்தவொரு பிரச்சார பாடல்களையும் , நான் முழுமையாகக் கேட்டவன் அல்ல. அவரின் குரல் என்னை கவர்ந்திருந்தபோதிலும், பாடல்களின் பிரச்சார சொல்லாடல்கள் என்னை அந்நியப்படுத்திக் கொண்டே இருந்தது.
சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!
(எஸ். ஹமீத்)
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன்னம் ஜெயலலிதாவின் சமாதியில் ஆக்ரோஷமாகக் கையால் அடித்துச் சபதம் செய்து, அஞ்சா நெஞ்சினளாகத் தன்னைக் காட்டிக் கொண்ட சசிகலாவை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. ஆறு கொலைகளைச் செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சயனைடு மல்லிகாதான். அதுசரி…யார் இந்தச் சயனைட் மல்லிகா…?
(“சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!” தொடர்ந்து வாசிக்க…)
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகள்
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகளாக தெரிவுசெய்யப்பட்டு
சனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ள 3 வரில் அதிக வாக்குபெற்றவரான சற்குணராசா பின்வரும் காரணங்களால் ஆபத்தானவர்.
1. சிங்களமாணவர் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களில் ஒருவர்.
2. சாதிவெறியும் மதவெறியுமுடையவர்.
3. ஊழல் நிறைந்தவர். திறமையான தனதுமாணவர்களை பழிவாங்குபவர். (“யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகள்” தொடர்ந்து வாசிக்க…)