சம்பள கூட்டு ஒப்பந்த மீள் பரிசீலனை விடயம் இதயசுத்தியுடன் செய்யப்படல் வேண்டும்.

நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான உபாயமாக இருக்க கூடாது.

2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பெருந்தோட்ட சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பாகவும் சம்பளத்தை மீள் பரிசீலனை செய்வதற்காகவும் பேச்சுவார்த்தைகளை நடாத்த இ.தொ.கா. தொழில் அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் சார்பாக கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கமொன்று என்ற வகையில் இ.தொ.கா. அதனை மீள் பரிசீலனை செய்ய முயற்சி எடுப்பதை நாம் வரவேற்கின்றோம். எனினும் இந்த அறிவிப்பானது இதய சுத்தியுடனும் நேர்மையும் கொண்டதாக இருக்க வேண்டும். மாறாக கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான உபாயமாக இருக்க கூடாது.

(“சம்பள கூட்டு ஒப்பந்த மீள் பரிசீலனை விடயம் இதயசுத்தியுடன் செய்யப்படல் வேண்டும்.” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 107)

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இந்திய இராணுவம் இலங்கை வந்தது.இதன் பின்னர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.இவரகளில் ஒரு தொகுதியினர் திருகோணமலை வந்தடைந்தனர்.இவர்களை இந்திய உளவுப்படையினர் பயன்படுத்தி ஆயுதங்களை கையில் கொடுத்து நகரையும் நகரை அண்மித்து வாழ்ந்த சிங்கள மக்களையும் விரட்டியடிக்க ஆலோசனை வழங்கினார்கள்.

(“பற்குணம் (பகுதி 107)” தொடர்ந்து வாசிக்க…)

ஈ.பி.ஆர்.எல்.எவ் – புளொட் கட்சிகளுடன் த.தே.ம. முன்னணி இணையத் தயார்!

(இதைவிட சைக்கிள் ஓட்ட இவருக்கும், இவர் அப்பாவிற்கும், என் இவரின் தாத்தாவின் இறுதி கால வாழ்விற்கும் வேறு வழி இருக்கவிலலை எல்லாம் தமது சொந்த வாழ்விற்காகதான், இவரை அரவணைத்து இவரின் பரம்பரை செய்து பாவங்களை யாரும் சுமக்காதீர்கள்  – சாகரன்)

செய்தி:

தாயகம், தேசியம், சுயநிர்ண யம், வடக்கு-கிழக்கு இணைப்பு இவற்றை யார் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்பட முன்வருகின்றார்களோ, அவர்களு டன் இணைந்து செயற்பட தயார் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகளும் இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டால் அவர்களுடனும் இணைந்து செயற்பட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(“ஈ.பி.ஆர்.எல்.எவ் – புளொட் கட்சிகளுடன் த.தே.ம. முன்னணி இணையத் தயார்!” தொடர்ந்து வாசிக்க…)

கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்

தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும் வகையிலான கலகக்குரல்களை எழுப்பியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில், இறுதியாக இணைந்தவர் சி.வி.விக்னேஸ்வரன். 2015 ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அவரின் கலகக்குரல் சற்று பலமாகவே ஒலித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலகக்குரல் எழுப்பியதோடு நின்றுவிடாமல், கூட்டமைப்பிலிருந்து விலகிவந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அமைத்துக் கொண்டார்.

(“கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பந்தாடப்படும் கேப்பாப்புலவு

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரியபுரம், சீனியாமோட்டை மற்றும் பிரம்படி ஆகிய பகுதியில் வசித்த மக்கள், யுத்தம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெயர்ந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதிகளில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினர். இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள், வவுனியா, செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், நலன்புரி நிலையங்களை மூட அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அம்மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

(“பந்தாடப்படும் கேப்பாப்புலவு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 106 )

திரு வின்சன்ட் பெரேரா அவர்கள் ஜே.வி.பி யின் செயற்பாடுகள் காரணமாக அவர்களின் அச்சுறுத்தல்களில் இருந்து தப்பவே மறைவாக அந்த வீட்டில் குடியிருந்தார்.அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாது.நாங்கள் நேரே சந்தித்தால் சிரிப்பார்.அவருடன் உறவாட யாரும் போவதில்லை.அவர் மனைவி என் மனைவியுடன் கதைப்பார்.அவ்வளவு தான்.சில நேரங்களில் மனைவியுடன் பஸ்சில் சந்தைக்கு செல்வது அவருக்குப் பிடிக்கும்.செல்வார்.அப்போது என் திட்டம் நாட்டைவிட்டு வெளியேறுவதாக இருந்தது.இது அவர் மனைவிக்கு தெரியும்.

(“பற்குணம் (பகுதி 106 )” தொடர்ந்து வாசிக்க…)

குழந்தைகளைக் குதறும் கழுகுகள்: அவதானம் மிக அவசியம்!

(எஸ். ஹமீத்)
அண்மைக் காலங்களில் குழந்தைகள் மீதான காமுகர்களினதும் கள்வர்களினதும் வக்கிரங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. ஒன்றுமேயறியாத பச்சிளம் குழந்தைகள் தொடக்கம் பதின்ம வயதுடைய சிறார்களின் மீதான-குறிப்பாகச் சிறுமிகள் மீதான  கொடுமைகளும் கொடூரங்களும் பாலியல் வன்மங்களும் அதன் விளைவான கொலைகளும் எல்லா நாடுகளிலும் ஒப்பீட்டளவில் கூடிக் கொண்டே வருகின்றன. இந்த நிலைமையில் தமது குழந்தைகளின் மீது பெற்றோரும் உடன் பிறப்புகளும் மிக அவதானமாக இருப்பது அத்தியாவசியமாகும்.

(“குழந்தைகளைக் குதறும் கழுகுகள்: அவதானம் மிக அவசியம்!” தொடர்ந்து வாசிக்க…)

மல்கம் எக்ஸ் – நினைவுப் பதிவு.

21 பெப்ரவரி.

அமெரிக்காவில் கறுப்பின மக்களின் எழுச்சியின் குறியீடான “மல்கம் எக்ஸ்” இன் நினைவு தினம்.
*
கடைசிக் காலத்தில் சதா தொலைபேசி மிரட்லுடன் தனது மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மல்கம் எக்ஸ் இதே நாளில் (1965) மேடையில் வைத்து கொடுரமான முறையில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அவரது மூன்று குழந்தைகள், மனைவி முன்னிலையில் அவர் மரணமானார். 40 வயதை எட்டிப்பிடிக்கும் காலத்தில் அவர் வாழ்வு பறிக்கப்பட்டது. 22000 பேர் அவரது உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தினர். 21 வயதில் பூச்சியத்திலிருந்து தொடங்கிய அவரது இனவொதுக்கலுக்கு எதிரான அரசியல் முப்பத்தொன்பது வயதில் இந்தளவு அபரிதமான வளர்ச்சியைக் கண்டது வியப்பூட்டுகிறது. வீதிகள் தொடங்கி பல்கலைக் கழகங்கள் வரை ஒலித்த அந்த கலகக் குரலை மரணம் அடக்கியது.அவர் இன்னும் கொஞ்சக் காலமாவது வாழ்ந்திருக்கக்கூடாதா என கறுப்பின மக்கள் ஒவ்வொருவரும் ஏங்கினர். கதறி அழுதனர்.

(“மல்கம் எக்ஸ் – நினைவுப் பதிவு.” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்(SDPT)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்சியாக கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் இணைந்து செயற்பட்டுவருகின்றனர். தமது கட்சியை மன்னிலைப்படுத்தாது அந்த மக்களுடன் மக்களாக இணைந்து போராட்டத்தில் ஈடபட்டுவருகின்றனர். அங்கிருந்து எமது நிருபருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில்: குடும்பம் ஒன்றிற்கு கால் ஏக்கர் படி வழங்கப்பட்ட காணிகளில் 83 குடும்பங்கள் வசித்து வந்ததாக கேப்பாபுலவு பிலகுடியிருப்பில் வசித்த மக்கள் தெரிவித்தனர். தமது காணிகளை விடுவிக்குமாற கோரி போராடிவரும் இவர்கள் தமது காணிகளுக்கான அனுமதிப்பத்திரமும் சட்டப்படி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

(“கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்(SDPT)” தொடர்ந்து வாசிக்க…)

“அவரது பெயர் கமலேஸ்வரன்…” குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்

96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி

“என்னை சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்”, என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால் தாம் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சற்று முன்னதாக அவரது தலைக்கு மேலாக இரு கைகளையும் கூப்பி கெஞ்சியிருந்தார்.

(““அவரது பெயர் கமலேஸ்வரன்…” குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்” தொடர்ந்து வாசிக்க…)