வடக்கும் கிழக்கும்

இந்திய அரசின் ஆதரவுடன். உருவாக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபை மகிந்த ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.இதன் பின்னணியில் மகிந்த அரசும் செய்ற்பட்டது. இப்போஅது இதை மீண்டும் இணைப்பது தொடர்பாக வட பகுதி அரசியல்வாதிகளும் தமிழர்களில் ஒரு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இதை கிழக்கு வாழ் இஸ்லாமிய மக்களும் சிலகிழக்கு வாழ் தமிழர்களும் எதிர்கின்றனர்.

(“வடக்கும் கிழக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!

அண்மையில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு, பேரவையா? கூட்டமைப்பா? என்ற தேர்தல் கால முடிவுக்கான வெள்ளோட்ட நிகழ்வாக மாறியதை, அதன் முக்கிய பேச்சாளர்களின் அறைகூவல் மூலம் அறிய முடிந்தது. குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரன் சம்மந்தருக்கு விடுத்த பகிரங்க கோரிக்கை. தன்னை முன்பு நிராகரித்த மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்தி, மீண்டும் தான் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குகளாக அவை மாறவேண்டும் என்ற, அவரின் தீராத ஆசையை பறை சாற்றியது. விட்டதை எப்படியும் விரட்டிப்பிடிக்க வேண்டும் என்ற அவரின் விருப்பு, முன்பு அவர் முன் ஜாக்கிரதை இன்றி நடத்திய நெருப்பு தினம், சகதோழர்களை பிரபாகரன் சினத்துக்கு இரையாக்க, தான் தப்பிய நிகழ்வை நினைவூட்டுகிறது.

(“தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!” தொடர்ந்து வாசிக்க…)

ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் ஒற்றுமை

ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் உள்ள‌ அதிச‌ய‌ப் ப‌ட‌த்த‌க்க‌ ஒற்றுமை ஒன்றுள்ள‌து. இர‌ண்டையும் உருவாக்கிய‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள். சிங்க‌ள‌த் தேசிய‌ பிதாம‌க‌ர்க‌ளான‌ அந‌காரிக‌ த‌ர்ம‌பாலா, டி.எஸ். சேன‌நாய‌க்க‌, ப‌ண்டார‌நாய‌க்க‌, ஜெய‌வ‌ர்த்த‌ன‌ எல்லோரும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள். அத்துட‌ன், சிங்க‌ள‌த்தை விட‌ ஆங்கில‌த்தில் ச‌ர‌ள‌மாக‌ பேச‌த் தெரிந்திருந்த‌ன‌ர்.

(“ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் ஒற்றுமை” தொடர்ந்து வாசிக்க…)

தாய்மை அன்பு கொண்டு கோயில் கட்டிய சோழன்-கவனிப்பாரற்று கிடப்பது ஏன்

(டி. சக்திய சிவா)

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில்…

தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

பளிங்குக் கல்லில் தாஜ்மஹால் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்….வழி….என்று இழுத்ததும், அந்த பேரில் இங்க எந்த கோயிலும் இல்லீங்களே..

(“தாய்மை அன்பு கொண்டு கோயில் கட்டிய சோழன்-கவனிப்பாரற்று கிடப்பது ஏன்” தொடர்ந்து வாசிக்க…)

India and Pakistan Teeter on the Brink of War: Bellicosity Encouraged by Washington…

(By Keith Jones)

Four days after India conducted “surgical” military strikes inside Pakistan-held Kashmir, South Asia’s rival nuclear-armed states continue to teeter on the brink of war. There have been hours-long artillery and gun-fire exchanges across the Line of Control (LoC) that separates Indian- and Pakistani-held Kashmir each night since India sent troops and helicopters into Pakistan and inflicted “double-digit” casualties.

(“India and Pakistan Teeter on the Brink of War: Bellicosity Encouraged by Washington…” தொடர்ந்து வாசிக்க…)

என் மாமா…

(கமலாகரன்)

 

ஈழவிடுதலைப் போராட்டம் தந்த ஒப்பற்ற உறவு.
தேசத்தின் அனர்த்தங்கள் விளைவித்த நாசம்… நேசம் துறந்து உறவுகளைப் பிரிந்து தமிழகம் வந்தேன்.
வாராது வந்த மாமணியாய் வந்தாள் என் வாழ்வில் ஒரு சமூகவிடுதலைப் போராளிப் பெண்.
எல்லாம் இழந்த மனோ நிலையில் ஒரு மன நோயாளிபோல் வாழ்ந்து திரிந்த என்னை தன் துணையாய் ஏற்க முன் வந்தாள்.
நான் யார். என் நிலை என்ன என்பது பற்றி எல்லாம் நான் சொல்லாமலே எல்லாம் அறிந்திருந்தாள் முன்கூட்டி என்னைப் பற்றி.
திருமணம் வரை நகர்ந்த எம்முறவில் முதன் முதலில் என் மாமனாரை பார்த்தது என் திருமணத்தன்றுதான்.

(“என் மாமா…” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 1)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

சிவகாமிக்கு தான் பிறந்த தன் குக்கிராமத்தைப் பற்றி நிறையவே பெருமை தான்.இயற்கையானவளின் அற்புதப் படைத்தலின் கைவண்ணம் அந்தக் கிராமத்தில் நிறையவே உண்டு.அடிப்படை வசதிகள் மிக மிக குறைந்த ஓர் கிராமம் அது. மரங்கள் ,வயல்கள் ,காடுகள், தென்னம் தோப்புகள் ,தோட்டங்கள் ஆறுகள் ,சிறிய குளங்கள் ,கடல் என்று அந்தக் கிராமத்தை சுற்றி அண்டையில் காணப்படும் இயற்கை தந்த கொடை. அதே போல் அங்கு வாழ்ந்த மக்களும் எந்தக் கள்ளம் கபடமுமின்றி தாமும் தம்பாடும் உண்டு என்று வாழ்ந்தார்கள்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 1)” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்கம் நடத்தும் கலாசார விழாவில் கலந்து கொண்டபோது…

 

தெற்கிலிருந்து இந்தக் கலாசார விழாவுக்காக லால் ஹாகொட, ரோஹன பொதுலியத்த உள்பட சுமார் பத்துக் கவிஞர்கள் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றனர். கவிஞர்கள் மட்டுமில்லை, அசோக ஹந்தகம, பிரசன்ன விதானகே, கிங்ரத்னம் போன்ற புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், ஒப்படக்கலைஞர்கள் எனப் பல சமாதான விரும்பிகளும் வந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஏறக்குறைய 300 பேருக்கும் மேல்.

(“யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்கம் நடத்தும் கலாசார விழாவில் கலந்து கொண்டபோது…” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் கனடாவில் எழுமா.???

நான் எனது சமுத்துவமற்ற, சகோதரத்துவமற்ற, சமுதாயத்திற்கு என்னென்னவோ சொல்ல முயல்கிறேன். அவை புத்திமதிகள் அல்ல, அவை எச்சரிக்கையுமல்ல, அவற்றால் எந்தப்பயனுமில்லை என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் நமது மக்கள் நம்மைப் பற்றி அறியவேண்டிய பல உண்மைகள் நிறைய உள்ளன என்பதை ஆணித்தரமாக அடித்துச்சொல்ல ஆசைப்படுகிறேன்..

(“எழுக தமிழ் கனடாவில் எழுமா.???” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு அனுபவப் பகிர்வு: இன்றைய நாள் பத்து வருடங்களுக்கு முன் 30.09.2006

வாழ்வில் எல்லோருக்கும் மறக்க முடியாத நாள் ஒன்றிருக்கும் ஆனால் ஒரு சிலருக்குத்தான் இப்படியான மறக்க முடியாத நாள் வரும். என் வாழ்வு திசை மாறிய நாள்.மரண பயம் என்பதை அறிந்த நாள். என் மகள் சுனாமியில் இறந்தபின் மகன் பிறப்பில் மகிழ்ச்சியயை சுவாசிக்க தொடங்கிய நாட்கள். மட்டக்களப்பில் நடந்த விழா ஒன்றில் பிரதம அதிதியாய் கலந்து சிறப்பித்து விட்டு வீட்டில் மகனோடு இரவு சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது.வீடு முழுவதும் விருந்தினர்களால் நிறைந்திருந்தது.மூதூரிலிருந்து அகதியாய் வந்த என் உறவினர்கள் நூறுக்கு மேல் தங்கியிருந்தனர்.

(“ஒரு அனுபவப் பகிர்வு: இன்றைய நாள் பத்து வருடங்களுக்கு முன் 30.09.2006” தொடர்ந்து வாசிக்க…)