உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்

சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், உலகில் வேறெந்த நாட்டிலும் வாழும் மக்கள் அறிந்திருக்காத வசதி வாய்ப்புகள், சோவியத் பிரஜைகளுக்கு வழங்கப் பட்டன. மேற்கத்திய நாடுகளில் கூட, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் அவை நடைமுறைக்கு வந்தன. அந்த வகையில், இன்றைக்கு மேற்குலகில் வாழும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சோவியத் யூனியன் தான் முதன் முதலாக அறிமுகப் படுத்தியது.

(“உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்” தொடர்ந்து வாசிக்க…)

அஷ்ரபும் வடக்கு – கிழக்கு இணைப்பும்

‘எழுக தமிழ்’ பேரணியின் மூலமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக மற்றொரு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றார்.

(“அஷ்ரபும் வடக்கு – கிழக்கு இணைப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

சோவியத் பாடசாலைகளில் மதக் கல்வி போதிக்கப் படவில்லை.

சோவியத் யூனியனில் “தத்துவார்த்தம் ஊட்டப் பட்ட சமூகம்” இருந்ததாக சிலர் கற்பனை செய்து கொள்கிறார்கள். அதாவது, மாணவர்கள், மக்கள் எல்லோரும் “சித்தாந்தத்தால் மூளைச் சலைவை” செய்யப் பட்டனர் என்பது தான் அவர்கள் சொல்ல விரும்புவது. அது சுத்த அபத்தமான கற்பனை. முதலில் சோவியத் யூனியன் மட்டுமல்ல, உலகில் எந்த நாடாக இருந்தாலும் பெரும்பாலான பாடங்கள் பொதுவானவை. வரலாறு, சமூகவியல் போன்ற பாடங்கள் மட்டும் தான் நாட்டுக்கு நாடு மாறுபடும்.

(“சோவியத் பாடசாலைகளில் மதக் கல்வி போதிக்கப் படவில்லை.” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

என்னையும் ஆசிரியராக்கிய எனது ஆசிரியர்களின் நினைவுகளை மனத்தில் மீட்டுப் பார்க்க வைக்கும் இந்த ஆசிரியர் தினத்தை நான் நினைவு கூர்வதில் மகிழ்ந்து நிற்கின்றேன். புலம் பெயர் தேசத்து பட்டமும் இதனைத் தொடர்ந்த பயிற்சிகளும் என்னை கணணித்துறையில் வாழ்க்கையிற்கு தேவையான பொருளீட்டுதலுக்கான பணத்தைத் தேடுவதில் ஈடுபடுத்தியிருந்தாலும் நான் ஆசிரியராக என்னை அடையாளப்படுத்துவதில் மகிழ்ந்திருக்கின்றேன். மகிழ்ந்திருக்கின்றேன் என்பதையும் விட எனது அடையாளமாக ‘மாஸ்ரர்” என்பதே பொது வெளியில் அதிகமாக இருக்கின்றது தெரிகின்றது. தொடரந்தால் போல் 40 வருடங்களாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தில் ஈடுபடுவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

(“ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்

சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 01, 2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒரு நூல் வெளியீட்டு விழா என்கிற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், ‘புவிசார் அரசியலில் கைதிகளாய் இருக்கின்ற ஈழத் தமிழர்கள்’ என்கிற விடயத்தினை முன்னிறுத்திய திறந்த கலந்துரையாடலாகவும் அந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.

(“யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் தொழிலாளர் போதியளவு வருமானம் பெறுகின்றார்கள் இல்லை

நெத‌ர்லாந்தில், பொருளாதார‌ நெருக்க‌டி கார‌ண‌மாக‌, வேலையில்லாப் பிர‌ச்சினை நில‌விய கால‌த்தில், இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் த‌பால்கார‌ர் வேலை செய்து வ‌ந்தேன். அப்போது என்னுட‌ன் ஒரு க‌ன‌டிய‌ (வெள்ளையின‌ப்) பெண்ணும் வேலை செய்தார். க‌ன‌டா ப‌ற்றி அவ‌ர் சொன்ன‌ த‌க‌வ‌ல்க‌ள் ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌ன‌.

(“கனடாவில் தொழிலாளர் போதியளவு வருமானம் பெறுகின்றார்கள் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

உலகத் தமிழாராய்ச்சிக் கழகமும் அதனை மீளமைப்பதற்கான தேவையும்.

உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association for Tamil Research, IATR) முதல் கூட்டம் தில்லியில் 1964 சனவரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன், பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டனர். மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 1964 சனவரி ஜனவரி மாதம் 7 ஆம் நாள் ஆரம்பித்து வைத்தனர். அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்சு நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் தொமஸ் பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாடசிசந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் செக்கோசெவவாக்கியா, பிராக் பல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளராளர்கவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

(“உலகத் தமிழாராய்ச்சிக் கழகமும் அதனை மீளமைப்பதற்கான தேவையும்.” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!

முதலமைச்சருக்காக நடத்தப்பட்ட வேண்டுதலில், ஏழை எளிய இளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் அலகு குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி, அதிமுக கட்சித் தொண்டர்கள் எந்தவிதமான வேண்டுதல்களை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால், சின்னஞ்சிறிய ஏழை குழந்தைகளுக்கு அலகு குத்தியிருப்பது ஒரு கொடூர நிகழ்வாகும். இந்த மோசமான மனித உரிமை மீறல் கண்டிக்கப்பட வேண்டும். இதனை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

(“முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கும் கிழக்கும்

இந்திய அரசின் ஆதரவுடன். உருவாக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபை மகிந்த ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.இதன் பின்னணியில் மகிந்த அரசும் செய்ற்பட்டது. இப்போஅது இதை மீண்டும் இணைப்பது தொடர்பாக வட பகுதி அரசியல்வாதிகளும் தமிழர்களில் ஒரு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இதை கிழக்கு வாழ் இஸ்லாமிய மக்களும் சிலகிழக்கு வாழ் தமிழர்களும் எதிர்கின்றனர்.

(“வடக்கும் கிழக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!

அண்மையில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு, பேரவையா? கூட்டமைப்பா? என்ற தேர்தல் கால முடிவுக்கான வெள்ளோட்ட நிகழ்வாக மாறியதை, அதன் முக்கிய பேச்சாளர்களின் அறைகூவல் மூலம் அறிய முடிந்தது. குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரன் சம்மந்தருக்கு விடுத்த பகிரங்க கோரிக்கை. தன்னை முன்பு நிராகரித்த மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்தி, மீண்டும் தான் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குகளாக அவை மாறவேண்டும் என்ற, அவரின் தீராத ஆசையை பறை சாற்றியது. விட்டதை எப்படியும் விரட்டிப்பிடிக்க வேண்டும் என்ற அவரின் விருப்பு, முன்பு அவர் முன் ஜாக்கிரதை இன்றி நடத்திய நெருப்பு தினம், சகதோழர்களை பிரபாகரன் சினத்துக்கு இரையாக்க, தான் தப்பிய நிகழ்வை நினைவூட்டுகிறது.

(“தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!” தொடர்ந்து வாசிக்க…)