2019: காலம் கலைத்த கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலம் கனவுகளையும் கற்பனைகளையும் சாத்தியங்களையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. காலத்தின் விந்தையும் அதுவே. கடந்தகாலத்தின் மீதான ஏமாற்றங்களும் நிகழ்காலத்தின் மீதான நிச்சயமின்மைகளும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுகிறது. இது புதிதன்று. ஆனால் மனித மனம் நம்பிக்கையென்னும் பிடியை இறுகப் பற்றியபடி நூலில் நடக்கும் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விடுகிறது. இதன் பலன்கள் நாமறிந்ததே. இதையே கடந்து போகும் இவ்வாண்டும் சொல்லிச் செல்கிறது.

ஈழத்தமிழருக்காக உலகிடம் கையேந்துவோரிடம் சில கேள்விகள்

ஈழத் தமிழருக்கான விடிவு, சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை, நீண்ட காலமாக கட்டி எழுப்பப்பட்ட ஒன்று.

மனதை உறுத்தும் ஒரு சோகம்

இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள பல்வேறு அருட்கொடைகளில் எதையும் நன்றியுணர்வோடு மனிதன் நினைவு கூர்வது குறைவு என்பதை விட இல்லையென்றே கூறலாம். ஆனால், இயற்கையின் சீற்றம் வந்ததும் மனிதன் அப்போது தான் இறை சிந்தனையோடும் அவனை நினைக்கின்றான்.

அமைச்சு ஊடாக வெல்லப்பட உள்ள அகங்கள்?

(காரை துர்க்கா)
தமிழர்களின் மனங்களை வெல்ல, விசேட அமைச்சு விரைவில் உருவாக்கப்படல் அவசியம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் (புதிய)குடியுரிமைச் சட்டம் இலங்கை தமிழருக்கு நன்மைகளை ஏற்படுத்துமா…?

(சாகரன்)

மோடி அரசின் மத்திய உள்துறை அமைச்சர் அமிர்த்ஷா இனால் கொண்டுவரப்பட்ட இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய நாடு தழுவிய ரீதியில் எதிர்பலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. குடியுரிமை சட்டத்தில் பொதுமையாக இஸ்லாமியரை தள்ளி வைத்தல், இலங்கை தமிழருக்கு குடியுரிமை வழங்குவதை தவிர்த்தல, மியான்மார் ரோங்கிய முஸ்லீம்களை அகதிகளாகவோ அல்லது குடியுரிமை வழங்கலுக்குள் தவிர்தல் என்ற போக்குகள் உள்ளாகியிருப்பது எதிர்பலைகளுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன.

கொலம்பியா: ஆயுதங்களை கைவிடுவதன் ஆபத்துகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள், அவர்களது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தப் புதிரை எதிர்நோக்குகின்றன. சமாதானத்துக்கான விருப்பு, விடுதலையின் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்திய நிகழ்வுகள், வரலாறெங்கும் உண்டு.

சாதிய வெறி

(Pushparani Sithampari)

இலங்கைத்தமிழர்களிடையே சாதிவெறி ஒழியவில்லை என்பதுபற்றி நானே நிறைய எழுதியிருக்கின்றேன். இன்னும் எழுதுவேன். ஆனால் தமிழ்நாட்டைவிட அதிகம் என்பதை மறுக்கின்றேன். தமிழ்நாட்டில் இன்னும் நடந்துகொண்டிருப்பதுபோல சாதிவெறியில் படுகொலைகள் செய்வது இப்போது நினைத்தே பார்க்க முடியாத காரியம்.

இராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல; அதில் பதியப்படுவனவும் விடுபடுவனவும் திரித்தோ, புனைந்தோ எழுதப்படுவனவும் எவையெவை என்பது, அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. அண்மையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல; இருண்டகாலம் என்றும் அவருடைய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்த கருத்து, மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.

தாது வருடப் பஞ்சம்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது –

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது –