என் பார்வையில்… வட சென்னை (திரைப்பட விமர்சனம்)

(சாகரன்)

வெற்றி மாறன் மீண்டும் தான் ஒரு சிறந்த நெறியாள்கையாளன் என்று நிரூபித்திருக்கும் திரைப்படம் வட சென்னை. நூற்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள்… பல நூறு சம்பவங்கள்.. வசனங்கள்… பல கிளைக் கதைகள் எதிலும் சோடை போக விடாமல் நெறியாள்கை செய்வது என்பது மிகவும் கடினம் அது ஒரு கூட்டுழைப்பால் மாத்திரம் சர்த்தியம். இதற்காக உழைத்த அவரது குழுவினருக்;கு வாழ்த்து தெரிவித்தே ஆக வேண்டும். (“என் பார்வையில்… வட சென்னை (திரைப்பட விமர்சனம்)” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள்

(ஜனகன் முத்துக்குமார்)

ஐரோப்பிய நாடுகள் மத்தியில், குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தை வலிமைப்படுத்துதல் தொடர்பிலான ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் பெருமளவில் இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியாக, ஐரோப்பிய பொருளாதார விடயங்களைப் பொறுத்தவரையில், அத்தகைய ஒத்துழைப்பு நடைமுறையில் இல்லை என்பது, ஐரோப்பியத் தலைவர்களைக் கவலைக்கு உட்படச் செய்துள்ளது. (“பிரான்ஸினதும் ஜேர்மனியினதும் மாறுபட்ட வெளிவிவகாரக் கொள்கைகள்” தொடர்ந்து வாசிக்க…)

பொங்கலுக்குள் பொதி…..?

(சாகரன்)
 
பொங்கலுக்குள் பொதி என்பது இலங்கைத் தமிழர்களுக்கு ஆண்டாண்டு காலமாக தமிழ் மிதவாதத் தலமைகளினால் வழங்கப்படும் வாக்குறுதி இம்முறையும் வழங்கப்பட்டுள்ளது. என்ன இம்முறை அது மாசி 4 இற்குள் என்று இன்றைய புதிய தலமையினால் தேதி தள்ளி வழங்கப்பட்டிருக்கின்றது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்” எனபதை மரபு வழியில் நம்பிய தமிழர்கள் இம்முறையும் இதனை நம்பியே? இருக்கின்றனர். ஆனால் யதார்த்தங்கள் வேறுவிதமாக இருக்கின்றன.

தமிழ் – முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும்

(மொஹமட் பாதுஷா)

பல்லினங்களும் வாழ்கின்ற ஓர் ஆட்புலத்தில், எவ்வாறு சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வது என்ற பாடத்தை, இலங்கையில் இனவாதிகள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களில் சிலரும், இன்னும் பட்டறிந்து கொள்ளவில்லையோ என்ற வலுவான சந்தேகத்தை, அண்மைக்கால சம்பவங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. (“தமிழ் – முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும்” தொடர்ந்து வாசிக்க…)

வில்லியம் பிளம்: உண்மைகளின் குரல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மிகவும் சவாலான பணிகளில் ஒன்று உண்மைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பது. அதை வாழ்நாள் முழுவதும் செய்பவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். குறிப்பாக, உலகில் மிகப் பெரும் சக்திகளுக்கு எதிராகப் பல்வேறு இடர்களையும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி, தொடர்ச்சியாகச் செயற்படுவதென்பது மிகக்கடினமான பணி. அதேநேரம், அவ்வாறானவர்கள் தான், வரலாறு தவறுதலாக எழுதப்படாமல் இருக்கப் பங்களிக்கிறார்கள். எமக்குச் சொல்லப்படும் வரலாறுகளின் பொய்களைத் தோலுரிக்கிறார்கள். வரலாறு என்றும், அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. (“வில்லியம் பிளம்: உண்மைகளின் குரல்” தொடர்ந்து வாசிக்க…)

பெப்ரவரி நான்குக்கு முன் புதிய அரசமைப்பு: முடியுமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

“அடுத்த வருடம் தைப் பொங்கலுக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதற்கு முன்னர் ஓரிரு முறை கூறியிருந்தது. ஆனால், அதையடுத்துப் பல தைப்பொங்கல்கள் வந்து போய்விட்டன. அதேபோல், எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், உத்தேச புதிய அரசமைப்பு, கொண்டு வரப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார். (“பெப்ரவரி நான்குக்கு முன் புதிய அரசமைப்பு: முடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

தஷ்ரத் மஞ்சி.

2007இல் கேன்சரால்
செத்துப்போன இந்த மனிதன்
தஷ்ரத் மஞ்சி.

ஒரு பிஹார்க்காரக் கூலித் தொழிலாளி.

1960இல் காயமடைந்த தன் மனைவியின் உயிரைக் காப்பாற்ற
– கிராமத்தின் எல்லையிலிருக்கும் அந்த – கெலூர் மலைக்குன்றுகளைச்
சுற்றிக் கடந்து 70 கிலோமீட்டர் தூரம் ஆஸ்பத்திரிக்குப் பயணித்த துயரம் தஷ்ரத்தின் நெஞ்சை உலுக்கியது.

(“தஷ்ரத் மஞ்சி.” தொடர்ந்து வாசிக்க…)

கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது?” என்று வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவர் இந்தப் பத்தியாளரிடம் கடந்த வாரம் கேட்டார். (“கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்” தொடர்ந்து வாசிக்க…)

கற்றலினால் ஆன பயன்தான் என்ன ??

(விஜயன் சி)
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது…
எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும்
நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..??

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?

(“கற்றலினால் ஆன பயன்தான் என்ன ??” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்!

கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஹிஸ்புல்லா – ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு சந்தோசமான செய்தியாகும். கூடவே, மேல் மாகாணத்துக்கான ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு இரட்டைச் சந்தோசத்தை நிச்சயம் கொடுத்திருக்கும். (“இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்!” தொடர்ந்து வாசிக்க…)