தஷ்ரத் மஞ்சி.

2007இல் கேன்சரால்
செத்துப்போன இந்த மனிதன்
தஷ்ரத் மஞ்சி.

ஒரு பிஹார்க்காரக் கூலித் தொழிலாளி.

1960இல் காயமடைந்த தன் மனைவியின் உயிரைக் காப்பாற்ற
– கிராமத்தின் எல்லையிலிருக்கும் அந்த – கெலூர் மலைக்குன்றுகளைச்
சுற்றிக் கடந்து 70 கிலோமீட்டர் தூரம் ஆஸ்பத்திரிக்குப் பயணித்த துயரம் தஷ்ரத்தின் நெஞ்சை உலுக்கியது.

(“தஷ்ரத் மஞ்சி.” தொடர்ந்து வாசிக்க…)

கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது?” என்று வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவர் இந்தப் பத்தியாளரிடம் கடந்த வாரம் கேட்டார். (“கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்” தொடர்ந்து வாசிக்க…)

கற்றலினால் ஆன பயன்தான் என்ன ??

(விஜயன் சி)
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது…
எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும்
நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..??

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?

(“கற்றலினால் ஆன பயன்தான் என்ன ??” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்!

கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஹிஸ்புல்லா – ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு சந்தோசமான செய்தியாகும். கூடவே, மேல் மாகாணத்துக்கான ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு இரட்டைச் சந்தோசத்தை நிச்சயம் கொடுத்திருக்கும். (“இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்!” தொடர்ந்து வாசிக்க…)

வெளிச்சத்தை நோக்கிய இளைஞர்களின் பயணம்

2018ம் ஆண்டிற்கான வெளிச்சத்தை நோக்கிய இளைஞர்களின் பயணம் அமைப்பின் செயற்பாடுகள்

12/02/2018:- நிலாவெளி பிரதான வீதி இலுப்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள வடிகான் துப்பரவு செய்யப்பட்டது.

28/07/2018:- புளியங்குளம் நாகம்மாள் ஆலயத்தில் சரிந்து வீழ்ந்திருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது.

(“வெளிச்சத்தை நோக்கிய இளைஞர்களின் பயணம்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிமோ ,தமிழரோ கிழக்கு ஆளுநராக நியமிக்கப்படுவது அந்த மாகாண வாழ் மக்களின் அரசியல் உரிமையாகும்

முஸ்லிமோ ,தமிழரோ கிழக்கு ஆளுநராக நியமிக்கப்படுவது அந்த மாகாண வாழ் மக்களின் அரசியல் உரிமையாகும்.மைத்திரியை அதிகாரத்திற்கு கொண்டு வந்ததில் கிழக்கு வாழ் தமிழ் ,முஸ்லிம்களின் வாக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கி உள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியின் வெற்றியை உறுதிப்படுத்தி ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்தியது தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளே. இது மைத்திரி வழங்கிய பிச்சை அல்ல, மைத்திரியை இம்மக்களே அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள் . இன்று இம்மக்களின் பெரும்பாலான அரசியல் பிரதிநிதிகள் மைத்திரியின் அரசியல் குழறுபடிகளை ஆதரிப்பதாக இல்லை. மைத்திரியை சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசியல் தலைவராக பார்க்கவும் ஒரு சிறு வாய்ப்பும் இல்லை .அதிருக்க கிழக்கு மாகாணம் என்பது தமிழரும் முஸ்லிம்களும் சமமாக வாழும் பிராந்தியமாகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த மோசமான இரந்தம் சிந்தல், அழிவுகள், வளப்பங்கீடு தொடர்பாக எழுந்த முரண்பாடுகள் தமிழ் முஸ்லிம்களிடையே ஆழமான வடுக்களை ஏற்படுத்தி உள்ளது . இரு இனங்களின் சக வாழ்வு இப்பிராந்தியத்தில் அவசியமானதாகும். இப்பிராந்தியத்தில் பகை முரண்பாடுகளை இன்னும் ஆழமாக்க முடியாது.

(“முஸ்லிமோ ,தமிழரோ கிழக்கு ஆளுநராக நியமிக்கப்படுவது அந்த மாகாண வாழ் மக்களின் அரசியல் உரிமையாகும்” தொடர்ந்து வாசிக்க…)

”போய் மரம் ஏறு!”- சாதியரீதியிலான தாக்குதலை பினராயி விஜயன் எதிர்கொண்டது எப்படி?

(எம்.குமரேசன்)
கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘திய்ய’ என்கிற சாதியைச் சேர்ந்தவர். திய்ய சாதியைச் சேர்ந்தவர்கள் தென்னை, பனை மரம் ஏறுவது, கள் இறக்குவதை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். பினராயி விஜயனின் தந்தையும் கள் இறக்கும் தொழிலாளிதான். குடும்ப வறுமை காரணமாக, விஜயன் சிறு வயதில் பீடி சுற்றும் வேலைபார்த்துள்ளார் .சிறு வயதில் கள்ளும் பீடியும்தான் தனக்கு சோறு போட்டதாக சொல்லிக்கொள்வார் பினராயி விஜயன். மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி, தற்போது கேரள முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். (“”போய் மரம் ஏறு!”- சாதியரீதியிலான தாக்குதலை பினராயி விஜயன் எதிர்கொண்டது எப்படி?” தொடர்ந்து வாசிக்க…)

2019….. புத்தாண்டு தினத்தில்…..

பெண்களின்
உரிமைக்கு எதிரான தாக்குதலுக்கெதிராக
கேரள பெண்கள் சமூகம்
சாதி மதம் பாராமல் திரண் (“2019….. புத்தாண்டு தினத்தில்…..” தொடர்ந்து வாசிக்க…)

இயக்குநர் ம்ருணாள் சென் மரணமடைந்துவிட்டார்.

2018.
ஆண்டின் கடைசி நாள்.

புத்தாண்டைப் பார்க்க விரும்பவில்லை அவர்.

எல்லா நேரிய கலைஞர்களையும்போலவே-
குமைந்த மனோநிலையில்
இருந்திருக்கக்கூடும் .

இல்லாமலிருந்திருந்தால்தான் வியப்பு.

இடதுசாரிச் சிந்தனைகளைத் திரையில் கோர்த்த இயக்குநர் ம்ருணாள் சென்
நேற்று மரணமடைந்துவிட்டார்.

தரமான இந்திய சினமா என்றாலே
சத்யஜித் ரே, ம்ருணாள்சென் என்று
எவர் வாயும் முணுமுணுக்கும் வரலாற்றை நிறுவியவர்களுள் ரெண்டாமவரும் விடைபெற்றுச் சென்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி
மேற்கு வங்க சமூகத்திலும், அரசியலிலும்
மார்க்சியத் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞன்…

உலக சினமாவின் ஓர் இந்திய முகம்…

வங்காளம்,ஹிந்தி, தெலுங்கு, ஒடிசா மொழிகளில் ஏறக்குறைய 30 திரைப்படங்கள்…

மேலும் குறும்படங்கள், ஆவணப்படங்கள்…

சிறந்த திரைக்கதை – சிறந்த படம் – சிறந்த இயக்கம் என
18 தேசிய விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள்….

தாதாசாகேப் பால்கே,பத்மபூஷண்,
சோவியத்நாட்டின் நேரு சோவியத் விருதுகளுடன்…….

பிலிம்பேர் விருதுகள்….
1975 மாஸ்கோ திரைப்பட விழா விருது…
1979 மாஸ்கோ திரைப்பட விழா விருது…
1977 கர்லோவை வரை திரை விழா சிறப்பு விருது…
1979 பெர்லின் Interfilm விருது…
1981 பெர்லின் Interfilm விருது…
1981 பெர்லின் – Grand Jury விருது…
1983 கேன்ஸ் திரைப்பட விழா விருது…
1983 வல்லாடோலிட் Gold spike விருது…
1984 சிகாகோ திரைப்பட விழா விருது…
1984 மான்ட்ரியல் திரைப்பட விழா விருது…
1989 வெனிஸ் திரைப்பட விழா விருது…
2002 கெய்ரோ திரைப்பட விழா விருது…

– என்று பெருமைகள் சூழ்ந்த பெருமகன்.

2002இல் வெளியான அவரது
கடைசித் திரைப்படத்துக்கு
இப்படிப் பேர் வைத்தார் :

‘இது என் பூமி’.

அது நிலைபெறும். ஆமாம்.

வருத்தமுடன் அல்ல.
வாழ்த்தி வழியனுப்புகிறோம்
தோழர் ம்ருணாள்.

(Rathan Chandrasekar)

இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்?

(எம். காசிநாதன்)

புத்தாண்டு 2019 நாளை பிறக்கப் போகிறது. இந்தியாவில், புதிய ஆட்சியை மத்தியில் அமைக்க, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும், இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷாவும் ‘பம்பரமாக’ இயங்கத் தொடங்கி விட்டார்கள். (“இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்?” தொடர்ந்து வாசிக்க…)