ஓயும் மோடி அலை; பாயும் ராகுல் அலை: 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் புள்ளிவிவரங்கள் தரும் செய்தி

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை மனிதநேய மக்கள் கட்சி வழிமொழிகிறது. மு.க. ஸ்டாலின் தெளிவான ஒரு பார்வையுடன் இந்த முன்மொழிவைச் செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள் மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வேகமாகப் பாயத் தொடங்கியுள்ளது என்பதையே காட்டுகின்றன. (“ஓயும் மோடி அலை; பாயும் ராகுல் அலை: 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் புள்ளிவிவரங்கள் தரும் செய்தி” தொடர்ந்து வாசிக்க…)

சயந்தன் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி மனந்திறந்து விளக்கமாக பேசியிருப்பது மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வு.

பத்திரிகையாளர்கள் பேசவேண்டிய விடயத்தை ஒரு அரசியல்வாதி பேசியிருப்பது மெச்சத்தக்க நிகழ்வு. எதிரிகளையும் துரோகிகளையும் கொல்லாது மிரட்டல், வசதிவாய்ப்பு மற்றும் பணம் அல்லது Blackmail என்கிற பணையவைப்பு/பொறிவைப்பு மூலம் தங்களுக்கு வேலைசெய்பவர்களாக மாற்றும் தந்திரம் ஒரு பழைய ராசதந்திரம் எனினும் இது ஸ்ராலின்கால சோவியத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட உத்தி. புலிகள் இந்த உத்தியை பயன்படுத்த காரணமாக இருந்தவர் புலிகளின் பல சகுனிவேலைகளுக்கு காரணமாக இருந்த அன்ரன் பாலசிங்கம்தான். (“சயந்தன் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி மனந்திறந்து விளக்கமாக பேசியிருப்பது மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வு.” தொடர்ந்து வாசிக்க…)

மழை வெள்ளமும் வான் பாய்தலும்

(Saakaran)

நேற்றைய தினம் வன்னி என்று பலராலும் அழைக்கப்படும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்குள் பெய்து முடித்த மழை மாங்குளத்தில் அதி உச்சமாக பெய்து சாதனைகளுடன் வேதனைகளையும் 2009 யுத்தத்தில் இருந்து மீண்டுவரும் மக்களை ஆழத்தியுள்ளது. அனைத்து குளங்களும் குளங்களின் கதவுகள் திறக்கப்பட்ட நிலையிலும் தமது அணைக்கட்டிற்கு மேலாக வெள்ளம் கரைபுரண்டோடி மக்கள் குடியிருப்புகள், வயல்கள், கால்நடைகள், வீதிகள் என யாவற்றையும் வெள்ளத்திற்குள் ஆழ்த்தியுள்ளது…. அழித்துள்ளது.

(“மழை வெள்ளமும் வான் பாய்தலும்” தொடர்ந்து வாசிக்க…)

இரணைமடுக் குளத்தையும், அதன் நீர் முகாமைத்துவம் பற்றியும் செய்திகளையும், ஆக்கங்களையும் பதிவிடுவோரின் கவனத்திற்கு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் கடன் நிதி உதவியில் 34அடியாக இருந்த குளத்தை 36அடியாக உயர்த்தி உயர்தர தொழிநுட்பத்தில் பலப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தரப்பட்டுள்ள குளத்தை துறைசார் நிபுணத்துவம் மிக்க பொறியியலாளர்கள் கண்காணித்தும் பராமரித்தும் வருகிறார்கள். (“இரணைமடுக் குளத்தையும், அதன் நீர் முகாமைத்துவம் பற்றியும் செய்திகளையும், ஆக்கங்களையும் பதிவிடுவோரின் கவனத்திற்கு” தொடர்ந்து வாசிக்க…)

பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு

(ஜனகன் முத்துக்குமார்)

ஜேர்மனியின் சான்செலர் இன்னமுமே ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூத்த அதிகாரியின் பங்கை வகிக்க முயலுகின்றமை, தற்போது ​​அங்கெலா மேர்க்கல் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுதல்) மீது பிரித்தானிய அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மூலம் தெளிவாகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் மார்ச் 29 அன்று வெளியேறும் குறித்த நான்கு மாத காலத்துக்குள் மற்றும் மேர்க்கல் தனது சான்செலர் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு நாள் குறித்த பின்னருமான இக்காலப்பகுதியில் ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மேயுடனான பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வை எட்டும் நோக்கிலேயே சான்செலர் மேர்க்கல் முயன்று வருகின்றமை – தன்னை – தனது சான்செலர் பதவியின் காலப்பகுதிக்கு பின்னரான காலத்திலும் ஐரோப்பிய அரசியலில் நிலைநிறுத்துவதற்கான ஒரு செயற்பாடாகவே மேர்க்கல் செயற்படுவதாக பார்க்கப்படுகின்றது. (“பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை

(கே. சஞ்சயன்)

அங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது. இப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவரா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத்தோடு மட்டும் நின்று விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தான். (“மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை” தொடர்ந்து வாசிக்க…)

கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் ஒற்றைச் சிந்தனையோடு, யாழ். மய்யவாத அரசியல் அரங்கு அண்மைய நாள்களில் இயங்கி வருகிறது. தொடர்ந்தும், தூய்மைவாதம் பேசிவரும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும் புதிய கூட்டணிக்குள் தம்மை இணைப்பது தொடர்பில் நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இது, கூட்டணியை உருவாக்குவதற்காக உழைக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு, நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. (“கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைபோர்குற்றங்கள்: வெளிநாட்டுநீதித்துறையின்தலையீடுஅவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில்நடைப்பெற்றயுத்தகுற்றங்கள்தொடர்பாகநீதிகிடைக்கவேண்டுமானால்வெளிநாட்டுநீதித்துறையின்உள்நுழைவுஅவசியம்எனமுன்னாள்நீதியரசரும், வடக்குமாகாணமுன்னாள்முதலமைச்சரும்தமிழ்மக்கள்கூட்டணியின்தலைவருமானசி.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
அவர்ஊடகங்களுக்குஅனுப்பிவைத்துள்ளகேள்விபதில்ஊடகஅறிக்கையில்மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.
இலங்கையின்நீதித்துறைதற்போதுசிறந்ததீர்ப்புக்களைத்தரத்தொடங்கியுள்ளன. எனவே, உள்நாட்டு நீதிபதிகள்குழாம்யுத்தக்குற்றவிசாரணைகளைநடத்தலாம்என்றும்வெளிநாட்டுஉள்ளீடல்கள்தேவையில்லைஎன்றும்கூறப்படுகிறது. ஒருநீதியரசராகஇருந்தஉங்களின்கருத்துஎன்னஎன்றகேள்விக்குபின்வருமாறுவிக்னேஸ்வரன்பதிலளித்துள்ளார். (“இலங்கைபோர்குற்றங்கள்: வெளிநாட்டுநீதித்துறையின்தலையீடுஅவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி

(ஜெரா)

இலங்கையின் கடந்த நாள்கள், மிக பரபரப்பானவை. ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடைப்பட்ட போட்டியில், நாட்டு மக்கள் சிக்கியிருந்தனர். அதேசமநேரத்தில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கின்ற தென்னமரவடிக் கிராமம், அபாயமொன்றை எதிர்கொண்டிருந்தது. ஜனநாயத்தை மீட்பதற்காக, நாட்டின் பிற பாகங்களில் உள்ள மக்கள் பதைபதைத்துக் கொண்டிருந்ததைப்போல, தென்னமரவடிக் கிராம மக்கள், தங்கள் பூர்வீகக் கிராமத்தைக் காப்பதற்குப் பதறிக்கொண்டிருந்தனர். (“இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி” தொடர்ந்து வாசிக்க…)

உருப்பெறுகிறது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு; வலுவிழக்கிறது நேட்டோ

(ஜனகன் முத்துக்குமார்)

ஐரோப்பிய இராணுவமொன்றை உருவாக்குவதற்கான முயற்சியில், ஐரோப்பிய ஒன்றியம் உண்மையில் முனைப்புக் காட்டுவதாகவே உள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெல் இருவரும், ஐரோப்பிய ஒன்றியத் தொடர் கூட்டத்தில், கூட்டு ஐரோப்பிய இராணுவமொன்றை உருவாக்குவதற்கான தேவையை இந்த மாதம் ஆதரித்திருந்தனர். இந்த இரு நாடுகளும், வலுவான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளாவன என்பது ஒரு புறமாக இருக்க, மறுபுறமாக, பொருளாதார – அரசியல் கண்ணோட்டங்களிலிருந்து, அவர்களுடைய வார்த்தைகள் வெறும் அரசியல் சார்ந்தது அல்லாமல், தீர்க்கமான ஒரு விவகாரம் என்பது நோக்கத்தக்கது. (“உருப்பெறுகிறது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு; வலுவிழக்கிறது நேட்டோ” தொடர்ந்து வாசிக்க…)