(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலம் செய்யும் விந்தையை என்னவென்று சொல்வது? காலம், பொறுத்திருந்து நகைத்துத் திருப்பித் தாக்கும்போது, அதை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறெதையும் செய்ய முடிவதில்லை. தன்னை நகைத்தவர்களுக்கான, உலக இயல்பை ஏளனம் செய்தவர்களுக்கான பதிலை வரலாறு, அதிகாரத்துடன் வழங்கிவிட்டு அமர்ந்திருக்கும்போது, ‘எல்லோரும் வரிசையில வாங்கடா’ என்று அழைப்பது போல் இருக்கிறது. இந்தக் கதை சுவையானது; காலம், சலனமெதுவுமின்றி வரலாற்றை மீள எழுதிச் செல்லும் அழகு, இரசிக்க வைக்கிறது. (“பிரான்சிஸ் புக்குயாமா: வரலாறு பழிவாங்கும் போது…..” தொடர்ந்து வாசிக்க…)