மக்களை ஓரணியில் பிரதமர் மோடி திரள வைக்கிறார்; ஏராளமானோர் அவரை ஆழமாக வெறுக்கின்றனர், அதைப் போலவே ஏராளமானோர் அவரை விரும்புகின்றனர் – அதிலும் குறிப்பாக இளைஞர்கள். குஜராத்திலும் கர்நாடகத்திலும் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தோல்விகளைக் கொண்டு, ‘2019 மக்களவை பொதுத் தேர்தல் முடிவும் இப்படித்தான் அமையும்’ என்று கணிப்பது மெத்தனமான நடவடிக்கையாகவே அமையும். கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களிலிருந்து நான் அறிந்துகொண்டது, மக்களிடம் ‘அவருக்கு’ தனிப்பட்ட ஈர்ப்பாற்றல் தொடர்ந்து நிலவுகிறது என்பதுதான். மக்கள் எதற்கெல்லாம் கோபப்படுவார்களோ அதற்கெல்லாம் இந்த ஆட்சியிலும் கோபப்படுகிறார்கள். விலை உயர்வு (குறிப்பாக பெட்ரோல் – டீசல்), விவசாயிகளின் துயரங்கள், வேலைவாய்ப்பு இன்மை, தொழில் வளர்ச்சி குன்றுவது, பணமதிப்பு நீக்கம், பொது சரக்கு – சேவை வரி என்று எல்லாவற்றுக்கும் மக்கள் நிச்சயமாகவே கோபப்படுகிறார்கள். அந்தக் கோபத்தின் பெரும் பகுதி பாஜக மீதும் அது ஆளும் மாநில அரசுகள், மத்திய அரசு ஆகியவற்றின் மீதும் தான் இருக்கிறது.
(“தோல்வியை வெற்றியாக்கும் மோடி” தொடர்ந்து வாசிக்க…)