நகரசபைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் வீழ்ந்து விட்டன

 

“ஓயாத அலைகள்” நடவடிக்கையில் புலிகளிடம் படபடவென இலங்கை இராணுவத்தின் படைத்தளங்கள் வீழ்ந்ததைப்போல அல்லது 2008, 2009 களில் இலங்கைப் படையினரிடம் புலிகளின் பிரதேசங்களில் கடகடவென வீழ்ச்சியடைந்ததைப்போல யாழ்ப்பாண மாநகர சபை, சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் வீழ்ந்து விட்டன.

(“நகரசபைகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் வீழ்ந்து விட்டன” தொடர்ந்து வாசிக்க…)

மக்களின் நிலம் நிச்சயம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்

(கவிநயா)
மக்களின் நிலங்கள் மக்களிடம் நிச்சயம் கையளிக்கப்பட வேண்டும், அல்லது அந்நிலங்களுக்கான நஷ்ட ஈடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டே ஆக வேண்டும், இது தொடர்பாக முறையான பொறிமுறை ஒன்று நடைமுறையில் இருக்க வேண்டியது அத்தியாவசியமான விடயம் ஆகும் என்று ஞாயிறு தினக்குரலுக்கு
வழங்கிய சிறப்பு பேட்டியில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

(“மக்களின் நிலம் நிச்சயம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பக்கம் – ‘Page Tamil’ இன் Who is the Black sheep? என்பதற்குப் பதில்

(Janaki Karthigesan Balakrishnan)

நேற்றைய தினம் யாழ். நகரசபை மேயர் தெரிவில் இணக்க அரசியலை நடைமுறைப்படுத்தியதைப் போற்றி எழுதிவிட்டு, இன்று இக்கட்டுரையை எழுதுவதற்கு தயக்கமாக இருந்தாலும், அதில் ஒரு கட்டாயம் இருக்கிறது என்பதை தீர்க்கமாக உணர்கிறேன். இன்றைய அரசியல் பல வயதினரும், குறிப்பாக இன்றுவரை அதிக ஜனநாயக தேர்தல்முறை அரசியலில் பங்கேற்காத இளைஞரும், யுவதிகளும் கூட, ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் இணக்க அரசியல் என்பதை கடந்த காலங்களில் அறிய வாய்ப்பிருந்திருக்காததுடன், அதை யாழ். நகரசபை மேயர் தெரிவில் நடைமுறைப்படுத்தின் காரணம், பயன்கள் என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு, இதை நடைமுறைப்படுத்திய தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைப் போல் வயதிலும், அறிவிலும் முதிர்ச்சியும், அரசியல் அனுபவமும் போதாது. இது அதில் ஈடுபட்ட சில மூத்த அரசியல்வாதிகளுக்கும், வயதைத் தவிர்ந்த ஏனைய விடயங்களில் பொருந்தும். இந்தக் கட்டுரை ஒரு யதார்த்தமான அரசியலில் என்னவெல்லாம் நடக்கலாம், அதை ஒவ்வொருவர் எவ்வாறு கையாளுவர் என்று எதிர்பார்க்கலாம் என்பதைத் தெரிவிக்குமுகமாக எழுதப்படுகிறது.

(“தமிழ் பக்கம் – ‘Page Tamil’ இன் Who is the Black sheep? என்பதற்குப் பதில்” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

(டி.எஸ்.எஸ்.மணி)
24 -03 -2018 சனிக்கிழமை தூத்துக்குடி நகரமே இதுவரை கண்டிராத மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. தூத்துக்குடி நகரம், ஸ்ரீவைகுண்டம் நகரம், புதியமுத்தூர் நகரம், தருவைகுளம் என எல்லா இடத்திலேயும் கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்பு என்றே அறிவிக்கப்பட்டது. ‘ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்ற முழக்கத்துடன் கடையடைப்பு செய்யப்பட்டது.

(“ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!” தொடர்ந்து வாசிக்க…)

மேஜர் எழிலன்

சின்னத்துரை சசிதரன் என்கிற எழிலனின் பல கொடுமையான நடவடிக்கைகளுள் மோசமான மூன்று முக்கியமான சம்பவங்கள், ஒரு நெருக்கடியான நிலமையில் ஒருவர் இறங்கக் கூடிய சீரழிவின் ஆழத்தை விளக்குவதற்கான உதாரணமாக உள்ளன. முதலாவது சம்பவம் புதுமாத்தளனில் நடைபெற்றது. காயம் பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்காக ஒரு ஐசிஆர்சி கப்பல் அங்கு நிறுத்தப்பட்டபோது வழக்கம் போல காயம் பட்டவர்களினது ஆபத்தான நிலைக்கு முன்னுரிமை வழங்குவதற்குப் பதிலாக எல்.ரீ.ரீ.ஈ, தனது காயம்பட்ட அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள்,புலி அங்கத்தினரது குடும்ப அங்கத்தவர்கள் ஆகியவர்களுக்கு முதலில் செல்வதற்கு அனுமதி வழங்கியது.

(“மேஜர் எழிலன்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். மாநகர சபை விவகாரத்தில், மக்கள் முன்னணியினர்

காலம் – 23 ஆம் திகதி மார்ச் மாதம் 2018

நேரம் – மாலை 5 மணி

டுபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானசேவையின் EK 654 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை தட்டியது. வோஷிங்டனில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் இரண்டு நாள் பேச்சுக்களை முடித்துக்கொண்டு வந்திறங்கினார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் சர்வதேச விவகாரங்களை கையாள்பவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

(“யாழ். மாநகர சபை விவகாரத்தில், மக்கள் முன்னணியினர்” தொடர்ந்து வாசிக்க…)

ஆனந்தசுதாகரனின் மகள்…….!

ஆயுள்தண்டனை பெற்ற அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் தனது மனைவியின் இறுதி நிகழ்வில் சமூகமளிப்பதற்காக பொலீஸாரால் அழைத்துவரப்பட்டார். மூன்று மணி நேரம் மாத்திரம் அவகாசமளிக்கப்பட்ட அந்த இடைவெளியில் ஆனந்தசுகாதரன் தனது மனைவியின் உடலுக்கான இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டார். மனைவியின் உடலத்துக்கு சூடம் காண்பிக்கும்போதுகூட காவல்துறையினர் கடமை தவறாமல் அவரது காலுக்குள்ளேயே நிற்கிறார்கள். தப்பித்தவறி, ஆனந்தசுதாகரன் அவரது மனைவியின் உடலத்தோடு சேர்ந்தழுது அவரது உயிர் பிரிந்துவிட்டால் நல்லாட்சி அரசின் நீதிக்கட்டுமானம் சரிந்து விழுந்துவிடும் என்ற பயம்தான் அந்த காவலாளிகளின் கண்களில் தெரிகிறது. (“ஆனந்தசுதாகரனின் மகள்…….!” தொடர்ந்து வாசிக்க…)

பறிக்கப்படுமா ரணிலின் பதவி?

(கே. சஞ்சயன்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சமர்ப்பித்திருக்கிறது ம ஹிந்த ராஜபக்ஷ ஆதரவு, ஒன்றிணைந்த  எதிரணி.
இந்தமாத முற்பகுதியில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.   இப்போது அதை அவர்கள், சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள்.

(“பறிக்கப்படுமா ரணிலின் பதவி?” தொடர்ந்து வாசிக்க…)

பங்களாதேஷ்: அறிவுத்துறையை தாக்கும் மதவாதம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள, வலுவற்றோர் மலிந்த உலகில் வாழ்கிறோம் என, அங்கும் இங்குமாக உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் நிகழ்வுகள் விடாது நினைவூட்டுகின்றன. சகிப்பின்மையும் மதவாதமும் கருத்துகளை ஒடுக்கும் பிரதான கருவிகளாயுள்ளன. தென்னாசியாவில் கடந்த ஒரு தசாப்தமாக மதவெறி ஒரு வலிய நோயாக வடிவெடுத்துள்ளதோடு, பொதுப்புத்தி மனநிலையை வசப்படுத்திக் காரியங்களைச் சாதிப்பதைக் காண்கிறோம். மதங்கள் வேறுபடினும் அணுகுமுறைகளும் நடைமுறைகளும் ஒரே விதமாக உள்ளன. மதவெறிக்கு மனிதர் புலப்படுவதில்லை. இதை அண்மைய நிலைமைகள் மீண்டும் உணர்த்தியுள்ளன. (“பங்களாதேஷ்: அறிவுத்துறையை தாக்கும் மதவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

உறவுமுறைகள் ஓராயிரம் இருந்தது…??? #இன்று ஒன்றுகூட இல்லையே…!!!

*அண்ணன், தம்பி, அக்கா,* *தங்கை, சின்ன அண்ணன்,* *பெரிய அண்ணன், சின்ன அக்கா,* *பெரிய அக்கா,*
*சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,* *மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,* *தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,*
*பெரியப்பா பையன்,*
*பெரியப்பா பொண்ணு,*
*அத்தை பையன்,*
*அத்தை பொண்ணு,* *மாமன்* *பொண்ணு,*
*மாமன் பையன்,*

(“உறவுமுறைகள் ஓராயிரம் இருந்தது…??? #இன்று ஒன்றுகூட இல்லையே…!!!” தொடர்ந்து வாசிக்க…)