அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங்(1942 – 2018)!

– வ.ந.கிரிதரன்

ஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர் தனது 76ஆவது வயதில் இன்று காலை (மார்ச் 14, 2018) தன்னியக்கத்தை நிறுத்தி விட்டார். இவரது அறிவு மட்டுமல்ல இவரது வாழ்க்கை கூட அனைவரையும், மருத்துவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியதொன்று. இளமைப்பருவத்தில் தனது இருபத்தியிரண்டாவது வயதில் ‘மோட்டார் நியூரோன் டிசீஸ்’ என்னும் ஒருவகையான நரம்பு நோயால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியே வாழ்வாக அமைந்து விட்ட நிலையிலும், சிறிது காலமே வாழ்வார் என்று மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையிலும் இவற்றையெல்லாம் மீறி இத்தனை ஆண்டுகள் இவர் வாழ்ந்திருக்கின்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்.ஐசக் நியூட்டன் வகித்த பதவியினை வகித்திருக்கின்றார். திருமண வாழ்வில் ஈடுபட்டு தந்தையாக வாழ்ந்திருக்கின்றார். இவர் மூன்று குழந்தைகளுக்குத்தந்தை.

(“அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங்(1942 – 2018)!” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.

ஐன்ஸ்ட்டின் பிறந்தநாளில் இவர் இறந்தார்
என்றொரு பதிவைப் பார்த்தேன்.

கார்ல் மார்க்ஸ் பிறந்தநாளில் இவர் இறந்தார்
என்றொரு பதிவைப் பார்த்தேன்.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.

புதிதாய் என்ன சொல்ல?

(“ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.” தொடர்ந்து வாசிக்க…)

மார்ச் 14 ம் நாள்: அறிவியலை பொதுவுடமையாக்கிய…..

(Saakaran)

அறிவியல் வளர்சியை பொதுவுடமையாக்கி எல்லோருக்கும் இலகுவில் கிடைக்கக் கூடிய மாதிரியாக செய்திருந்தால் இன்று உலகம் இன்னும் முன்னேற்றகரமான பாதையை நோக்கி சென்றிருக்கும். சிறப்பாக மருத்துவத்துறை இன்னும் சதாரண அடிமட்ட மக்களை சென்றடைந்து ஒரு பலமான ஆரோக்கியமான நிறைவான சமூக அமைப்பை நாம் உருவாக்கியிருக்க முடியும். மாறாக இவ் அறிவியல் தற்போது மேலும் மேலும் தனி உடமையாக்கப்பட்டு ஒரு மிகக் குறுகிய மக்களுக்கு மட்டும் முழுமையாக கிடைக்கும் வகையில் சந்தைப் பொருளாகி லாபம் ஒன்றே நோக்கான பண்டமாக மாறி இருக்கின்றது.

(“மார்ச் 14 ம் நாள்: அறிவியலை பொதுவுடமையாக்கிய…..” தொடர்ந்து வாசிக்க…)

VPN தொழில்நுட்பம்

(தங்கராஜா தவரூபன்)

கண்டியில் கடந்த வாரம் எழுந்த இன ரீதியிலான பிரச்சினைகளின் பின்னணியில், ஒரு கட்டத்தில் கண்டியில் 3G, 4G இணைய சேவையில் மட்டுப்படுத்தலை செய்தது மட்டுமல்லாது நாடுமுழுவதிலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் ஆகிய வலைப்பின்னல்களை அரசாங்கம் தடை செய்தது.

(“VPN தொழில்நுட்பம்” தொடர்ந்து வாசிக்க…)

இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்!

கடந்த சில நாட்களாக அம்பாறையில் மற்றும் பண்டாரவளையில் ஏற்படவிருந்த சம்பவங்களின் சூடு தனிவதற்கு முன்பே தெல்தெனிய பற்றி எரிகின்றது. இதற்கு முன்பு கின்தோட்டையிலும், அதற்கும் முன்பு அளுத்கமவிலும் இனவாதத் தீப்பிளம்புகள் கிளர்ந்தெழுந்தன. இந்த மோதல்களின் சமீபத்திய சம்பவமானது பெற்றோல் நிலையமொன்றிற்கு அருகாமையில் நடந்த கருத்து மோதலின்போது ஒருவர் தாக்கப்பட்டு மரணமடைந்துதான். இறந்த இளைஞர் சிங்களவர் என்பதனாலும் தாக்கியவர்கள் முஸ்லிம்களாக இருப்பதாலும் பிரச்சினை இனவாதத் தீயாக பற்றி எரியத் தொடங்கியது. சில தசாப்தங்களாக இனவாதத் தீப்பொறி அடிக்கடி தோன்றுவது தற்செயலானதல்ல. அது பல தலைமுறைகளுக்கு பகைமையின் தீப்பொறியை எடுத்துச் செல்லக் கூடியதும் அதனால் மீண்டும் மீண்டும் அவலங்கள் நிர்மாணிக்கப்படக் கூடியதுமான நிலைமையின் வெளிப்பாடுதான். (“இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்!” தொடர்ந்து வாசிக்க…)

சிலையை தகர்க்கலாம், சித்தாந்தத்தை அல்ல! – பிருந்தா காரத்

திரிபுராவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாஜக அரசாங்கம் லெனினின் சிலையைச் சரிசெய்து, அதனை அகற்றிய இடத்திலேயே திரும்பவும் வைக்க வேண்டும். இடதுசாரி ஆதரவாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

(“சிலையை தகர்க்கலாம், சித்தாந்தத்தை அல்ல! – பிருந்தா காரத்” தொடர்ந்து வாசிக்க…)

மனோவின் கூற்று முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவாதத்துக்கான தலைப்பு

‘நாங்கள் சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் எங்களோடு படித்த முஸ்லிம் பெண்கள் சாதாரணமாக சல்வாரும் முக்காடும் அணிந்துதான் படித்தார்கள். இப்படிக் கறுப்பால் மூடிக்கொண்டு, முழுமையாக மறைத்துக் கொண்டு யாருமே இருக்கவில்லை. இப்போது ஏன் திடீரென்று இப்படி மாறி விட்டார்கள் என்ற அச்சமும், மத்திய கிழக்குக் கலாச்சாரம் இங்கு ஏன் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற சந்தேகமும் ஏற்படுவது நியாயம்தானே?’

(“மனோவின் கூற்று முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவாதத்துக்கான தலைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சக்தி கதற கதற கற்பழித்த அந்த சோகக்காட்சியை பார்த்து……

(ப. தெய்வீகன்)

எயார்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சாகுபடி ஆரம்பமாகிவிட்டது. அடுத்த வருடமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடங்கிவிடும். நாங்களும் எத்தனை லட்சம் கொடுத்தாவது கொள்முதல் செய்வதற்கு தயாராகிவிடுவோம். ஒவ்வொரு தடவையும் தொலைக்காட்சி நிர்வாகம் ஒரு போட்டியாளரை வெற்றிபெற வைப்பது என்று போட்டி ஆரம்பத்திலேயே தீர்மானித்துவிடுவார்கள். அதைச்சுற்றித்தான் அனைத்து பஜனை நிகழ்வுகளும் நடைபெறும். இவ்வாறு அவர்களால் முன்கூட்டியயே முதல் பரிசு கொடுப்பதாக முடிவெடுக்கப்பட்டவர்களைவிட அந்த போட்டியில் கலந்துகொண்ட ஏனையவர்கள் திரையிசை களத்தில் பிற்காலத்தில் தூள் கிளப்பிக்கொண்டிருப்பதிலேயே தொலைக்காட்சிக்கு தங்களது சீத்துவம் விளங்கியிருக்கவேண்டும். ஆனால், அவர்களோ விடுவதாக இல்லை.

(“சக்தி கதற கதற கற்பழித்த அந்த சோகக்காட்சியை பார்த்து……” தொடர்ந்து வாசிக்க…)

ராஜிவ் கொலை சதி மிக நீண்டது. அதன் முதல்பாகம் 1991 மே 21ல் நிறைவேற்றப்பட்டது. இறுதிபகுதி 2009 மே19ல் நிறைவேற்றி முடித்து வைக்கப்பட்டது.

(Rajh Selvapathi)
தனது தந்தை சிலரின் தவறான ஆலோசனைகளின்படி நடந்ததால் சிலரை பகைத்துக்கொண்டதாகவும் அதனால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை தாங்கள் அறிந்திருந்ததாகவும் ராகுல் குறிப்பிட்டார். தாம் கொல்லப்படலாம் என ராஜிவுக்கே ஒரு வேளை தெரிந்திருக்கலாம்.

(“ராஜிவ் கொலை சதி மிக நீண்டது. அதன் முதல்பாகம் 1991 மே 21ல் நிறைவேற்றப்பட்டது. இறுதிபகுதி 2009 மே19ல் நிறைவேற்றி முடித்து வைக்கப்பட்டது.” தொடர்ந்து வாசிக்க…)

சக மனிதனைப் புரிந்துகொண்டு – அவனை ஏற்கிற சமூகமே முன்னே செல்லும்.

(Rathan Chandrasekar)

என் பெயர் குமாரசாமி எடிட்டிங்கில்
நான் பிசியாக இருந்த நேரத்தில்-
என் பத்திரிகை உலக சிஷ்யன் ஒருவன்
திடீரென்று போன் போட்டு மூச்சிரைத்தான். அவன் மனைவியின் தம்பி வீட்டிலிருக்கும்போது
புடைவை கட்டிக்கொள்கிறானாம்.
லிப்ஸ்டிக் போட்டுக்கொள்கிறானாம்.

(“சக மனிதனைப் புரிந்துகொண்டு – அவனை ஏற்கிற சமூகமே முன்னே செல்லும்.” தொடர்ந்து வாசிக்க…)