நடிகை ஸ்ரீதேவி மரணம் ஒரு கலாச்சாரத் துயரமாக பாவிக்கப்படுகிறது. அப்படி பாவிப்பதில் அதற்கான நியாயமும் உள்ளது. காரணம் மயிலாக வந்த ஸ்ரீதேவியாகட்டும் அல்லது எண்பதுகளின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவியாகட்டும், அந்த தலைமுறையின் காலாச்சார மறு-ஒப்பனையாக (cultural re-fashioning) குறிப்பாக காதலுறுதலுக்கான அழகியல் பிம்பத்தை சமூக நனவிலியில் கட்டமைத்தவர். அந்த தலைமுறை பெண்களும், ஆண்களும் ஒருசேர விரும்பிய ஒரு தமிழ் முகமாக இருந்தவர். கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், ஸ்ரீதேவி அடித்தட்டு மக்களின் குறிப்பாக விளிம்புநிலையினரின் முகத்தை தனது முக-ஒப்பனைகள் வழியாக ஆள்தள உளவியலிலை வடிவமைத்தவர். ஆனாலும், மேட்டிமையினர் மற்றும் மையத்துவ நடுத்தர வர்க்கத்தினர் ஸ்ரீதேவியால் கவரப்படவில்லை. அவர்கள் அவரை ஒரு மாதிரியாக கொள்ளவில்லை. இது உள்ளார்ந்து நிகழும் ஒரு உளவியல் போராகக் கொள்ளலாம்.
(“நடிகை ஸ்ரீதேவி மரணம் ஒரு கலாச்சாரத் துயரம்” தொடர்ந்து வாசிக்க…)