மே பதினேழு இயக்கத் தோழர்களுக்கு

உங்களது வெல்லும் தமிழீழம் மாநாடு பற்றிய விளம்பரம் பார்த்தேன். பிரமிக்க வைத்தது. இலங்கைத் தமிழ் மக்களுக்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உங்கள் இயக்கமும் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களும் இடைவிடாது போராடி வருகிறீர்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்காக உங்களது கரிசனை எம்மைப் புல்லரிக்கச் செய்கிறது.

(“மே பதினேழு இயக்கத் தோழர்களுக்கு” தொடர்ந்து வாசிக்க…)

போய் வாருங்கள் ஜோ!….

இலங்கையில் தோழர் வரதராஜபெருமாள் தலைமையில் அமைந்த வடகிழக்கு மாகாண அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர் தோழர் ஜோ செனவிரத்ன. இவர் பிறப்பால் சிங்களவர். எண்ணத்தால் ஒரு சர்வதேசியவாதி. இடதுசாரிக் கொள்கைகளில்
நாட்டம் பெற்று தொழிற்சங்க இயக்கத்தில்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். பின்னாளில் பத்மநாபா தலைமையிலான  ஈபிஆர்எல்எப் இயக்கத்துடன் இணைந்து
தீவிர அரசியல் செயல்பாடுகளில் களம் கண்டவர். இவர் ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும்கூட. ஓஷோ குறித்த இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார்கள்.
(“போய் வாருங்கள் ஜோ!….” தொடர்ந்து வாசிக்க…)

ஜோ!

(தோழர் சேகர் – பாஸ்கரன்)

சுடரும் தீப்பந்தமாய் எழுந்து, தன் புரட்சிப் பணியை முடிந்தவரை முன்னெடுத்துப், பல உள்ளங்களில் சிந்தனைச் சுடரேற்றிவிட்டு, காலச் சக்கரத்தின் சுழற்சின் தவிர்க்கமுடியாத இயற்கை விதியோடு இணைந்து நிரந்தர ஓய்வெடுத்துக்கொண்ட அன்புத் தோழன் ஜோவுக்கு இதயம் கனிந்த நன்றியறிதலோடு பிரியாவிடையளிப்போம் தோழர்களே!

(“ஜோ!” தொடர்ந்து வாசிக்க…)

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

(கே. சஞ்சயன்)

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா, என்பது முக்கியமான கேள்வி.
ஏனென்றால், நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தாத பல விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருந்தன.

(“சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தலுக்குப் பின்னரான அரசியல் அதிர்வுகள்

(மொஹமட் பாதுஷா)

இலங்கையின் வரலாற்றில், உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றுக்குப் பின்னர், ஒருபோதும் ஏற்பட்டிராத அரசியல் நெருக்கடிநிலை, இம்முறை ஏற்பட்டிருக்கின்றது. ‘குட்டி இராஜாங்கத்துக்கான தேர்தல்’ நாட்டின் ஒட்டுமொத்தமான ‘பெரிய அரசாங்கத்தின்’ அடித்தளங்களிலும் அதிர்வுகளை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் எது நடந்துவிடும் என்று எண்ணி, தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அஞ்சியதோ, அதைவிடவும் பாரதூரமான சிக்கல்கள் தலைதூக்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

(“தேர்தலுக்குப் பின்னரான அரசியல் அதிர்வுகள்” தொடர்ந்து வாசிக்க…)

19 பிப்ரவரி: எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!

19 பிப்ரவரி என் அத்தை எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!

என் அத்தையை நினைவு கூற எத்தனையோ விஷயங்கள் உள்ளன.

என்.எஸ்.கிருஷ்ணன் காலம் தொட்டு திரைப்படங்களில் நடித்து வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, இருவரும் எதிர் எதிரே ஒருநடிகர் கூட்டத்தை வைத்திருந்து படங்களில் நடித்து வந்த காலத்திலேயே, இருவர் படங்களிலும் நடித்து வந்தவர்.

(“19 பிப்ரவரி: எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் ஜோ செனிவிரட்ணா மறைவு

(தோழர் ஜேம்ஸ்)

ஐம்பது ஆண்டுகள் இலங்கையின் சமூகபொருளாதார மறுமலர்ச்சிக்கும் ஜனநயாகம் மனித உரிமைகளுக்குமான இடையறாத சளையாத போராட்டக்காரரும் ஊடகவியலாளாரும் வடக்கு கிழக்கு மாகாண அமைச்சரவையில் அங்கத்தவரும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்கு இடையறாது செயற்பட்டவரும் முற்போக்கு இயக்க பாரம்பரியத்தை சேர்ந்தவரும் தொழிற்சங்கவாதியும் “விகல்பகண்டயம” மாற்று அமைப்பின் முன்னோடிகளில் ஒருவரும் எம்முடன் ஒரு நீண்ட பயணத்தை நடத்தியவருமான தோழர் ஜோ மறைவு.தயான் ஜயத்திலகா இற்கு பின்பு இவர் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் அமைச்சர் ஆக செயற்பட்டார்.

(“தோழர் ஜோ செனிவிரட்ணா மறைவு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்

(க. அகரன்)

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது. இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டுச் செல்லக்கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஒரு சில தேர்தல்களே அமைந்துள்ளன.

(“தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தலில் யார் தோற்றார்கள்?

(Gopikrishna Kanagalingam)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித் தான், இவ்வாறு அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட தேர்தலொன்று, நாட்டின் தேசிய அரசியலையே மாற்றியமைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்றால், யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது.

(“தேர்தலில் யார் தோற்றார்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

Justice for Missing and Murdered Indigenous Women and Girls

This February 14th, as in past years, marches will be held across Canada to commemorate the thousands of missing and murdered Indigenous women and girls. The February 14th marches demanding justice have been being held for almost three decades, but the current need for action is as great as ever before.

(“Justice for Missing and Murdered Indigenous Women and Girls” தொடர்ந்து வாசிக்க…)