(எம். காசிநாதன்)
‘பஞ்சாப் தேசிய வங்கி’ மோசடி, இந்திய வங்கிகளின் அத்தியாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு எதிராக, தங்கள் தாக்குதலைத் தொடுக்க, எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான ஆயுதமாக, பஞ்சாப் வங்கி ஊழல் அமைந்திருக்கிறது. ‘லெட்டர் ஒப் அன்டர்டேங்கிங்கை’ பயன்படுத்தி, 110,400 மில்லியன் ரூபாயை அபகரித்துள்ள வைரவியாபாரி நிராவ் மோடி, பிரதமர் நரேந்திர மோடிக்குப் பெரிய தலைவலியைக் கொடுத்திருக்கிறார்.
(“பஞ்சாப் வங்கி ஊழல்: பா.ஜ.கவின் பிரசார ஆயுதம் பறி போகிறதா?” தொடர்ந்து வாசிக்க…)