இலங்கை: கொரனா செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களில்  20 தொடக்கம் 30 சதவீதமானோர் டெல்டா திரிபு தொற்றாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது என பிரதி சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாழ சிறந்த இடம் எது?

1.கேரளாவில் இருந்து வரும் மலையாளிகள், டீ கடை நாயர்கள், படிப்பிற்காக வருபவர்கள், மருத்துவத்துக்காக வருபவர்கள்

2. பிகார் மாநில தொழிலாளர்கள்

3. அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள்

4. ஆந்திராவில் இருந்து வரும் சாலை பணியாளர்கள்

5. சிவகாசி மற்றும் திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க நிரம்பியிருக்கும் வட இந்திய தொழிலாளர்கள்

6. பேங்குகளில் பணியமர்த்தப்படும் வட இந்திய பணியாளர்கள்

7. எல்லா TOLL GATE களிலும் நிற்கும் பக்காவான வேறுமாநில ஊழியர்கள்

8. பெரிய ஊர்களெங்கும் கடை வைத்து வியாபாரத்தை விரிவாகியிருக்கும் வட இந்திய வணிகர்கள் நகை கடை காரர்கள், ஊழியர்கள்

9. பானி பூரி விற்பவர்கள் (அய்யோ ஓஓஓஓ )

10 இவ்வளவு ஏன் சிஃனலில் சுற்றி திரியும் ஏழைகள், பலூன் விற்பவர்கள் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள்

இவர்கள் அனைவரையும் கேளுங்கள் இந்தியாவில் வாழ சிறந்த இடம் எதுவென்று ?

தயக்கமின்றி நம் தமிழ்நாட்டை கை காட்டுவார்கள்

இந்திய நீர்மூழ்கி தூத்துக்குடி வருகை

இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ‘சிந்துஷாஸ்ட்ரா’ தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழுக்கு பிரதமர் விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜூலை 31ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய, 100 நகரங்களை நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

‘250க்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி’

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில் சுமார் 300க்கும் அதிகமான அட்டைப்பண்ணைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் நிருபராஜ்,கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் தற்போது 250க்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு உயர் பதவி

மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் புதன் பேச்சு

அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளை களைவதற்காக, எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமையன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

‘தோட்டத் தொழிலாளர்களைத் தோட்ட அதிகாரி, சர்வாதிகாரமாக நடத்துகின்றார்‘ எனத் தெரிவித்து, குறித்தஅதிகாரியையும், அத்தோட்ட தலைமை குமாஸ்தாவையும் உடனடியாக இடமாற்றம் செய்யகோரி, தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ட்றூப்,கொரின் தோட்ட தொழிலாளர்கள், அத்தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக 3 வது நாளாகவும் நேற்று (14) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

’கடலட்டை பண்ணைகள அமைக்க ஏற்பாடு’

வடமாகாணத்தில், நுற்றுக்கணக்கான கடலட்டை பண்ணை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்: வருவதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இயக்கச்சியில், இயக்கி உணவகத்தை, இன்று(15) திறந்துவைத்தப் பின்னர் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவி;தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் டெல்டா வைரஸ் திரிபு தற்போது வட  மாகாணத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதி சுகாதார சேவை பணிப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் ​ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.