நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பெசில் ராஜபக்ஷவுக்கு கீழிருந்த நிறுவனங்கள் சில, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழிருக்கும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான, சட்ட கட்டமைப்பை திருத்தி சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சராக பெசில் ராஜபக்ஷவும், பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், நேற்று முன்தினம் (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள்
அரசாங்கத்துக்கு எதிராக யாழில் இன்று கவனயீர்ப்பு
இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை
மொட்டை கைவிடுகிறது ‘கை’
இது இலங்கை அரசியல் வரலாற்றில முதல்தடவை;
இலங்கை: கொரனா செய்திகள்
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்
முருகனுக்கு அமைச்சர் பதவி?
நான்கு நாள் வாரம் வெற்றி
ஐஸ்லாந்தில் நான்கு நாள் வாரம் ஒன்றுக்கான சோதனைகள் பாரியளவில் வெற்றியடைந்துள்ளதாகவும், இதனால் பல பணியாளர்கள் குறைந்தளவு மணித்தியாளங்கள் நகருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சோதனைகளின்போது குறுகிய மணித்தியாலங்களுக்கு அதேயளவான ஊதியத்தை பணியாளர் பெற்றிருந்தனர்.
‘பந்துல கூறுவதை மனைவியே கேட்பதில்லை’ – அநுரகுமார
அமைச்சர் பந்துல குணவர்தன கூறாதது ஒன்றுமே இல்லை, அவருடைய கூற்றை அவரது மனைவியே கேட்பதில்லை எனத் தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, குடும்பமொன்றை நடத்துவதற்கு 2,500 ரூபாய் மாதமொன்றுக்கு போதுமென்றார், நிவாரணம் வழங்கப்படும் என்றார். உரமானியம் வழங்கப்படும் என்றார் ஒன்றுமே நடைபெறவில்லை. ஆகையால், கொஞ்சம் அமருங்கள் என்றார்.