கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (28) முதல் ஆரம்பித்துள்ளது. இதன்படி, வீடுகளில் தங்க வைக்கப்படும் தொற்றாளர்களுடன் தினமும் தொலைபேசி ஊடாக வைத்தியர்கள் தொடர்புக்கொண்டு, தொற்றாளர்களின் நிலைமையைக் கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் தொற்றுக்குள்ளானோரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Category: செய்திகள்
கனடாவில் மேலும் தேவாலயங்கள் எரிப்பு
மேற்கு கனடாவிலுள்ள பழங்குடியினச் சமூகங்களில் மேலுமிரண்டு கத்தோலிக்கத் தேவாலயங்கள் நேற்றுக் காலையில் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு தேவாலயங்களிலும் ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு கட்டடங்களும் முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும், தீகளை சந்தேகத்துக்கிடமானதாகக் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
’கடல் வளம் சுரண்டப்படும் நிலையில் மாற்றம்’
சட்டவிரோத மணல் அகழ்வு: ’சாதகமான தீர்ப்பை பெற்றுத் தருவோம்’
மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு
’இரட்டை குடியுரிமை தனி நபருகே பயனளிக்கும்’
இரட்டை குடியுரிமையுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பதவிகளை வகிப்பது நாட்டிற்கு அல்லாமல் அந்த நபருக்கே பயனளிக்கும் என, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். தனது விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
‘அமைச்சர் பதவியை நான் கேட்கவில்லை’ – மைத்திரி
தனக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தியை முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, மறுத்துள்ளார். ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அவ்வாறான எந்தவிதமான கோரிக்கையை அரசாங்கத்திடம் தான் முன்வைக்கவில்லை, அது தவறானது. அமைச்சர் பதவி மட்டுமன்றி, அரசாங்கத்திடம் எந்தவொரு பதவியையும் தான் கோரவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.