யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வரதராஜப்பெருமாள்

இன்று யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் யாழப்பாண சர்வதேச சினிமா விழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. தென்னிலங்கை , இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிருந்து பலர் பங்குகொண்டனர். அரங்கு நிறைந்த பர்வையளர்களுடன் நீண்டகாலத் திற்குப் பிறகு பல்கலைக்கழகத்தைப் பார்க்க சந்தோசமாக இருந்தது. விழா அழகாகவும் எளிமையாகவும் நடந்தது. முதல் நாள் காட்சியாக PHOENIX எனும் ஜெர்மானிய திரைப்படம் காண்பிக்கப்பட்டது.இவ்விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முன்னாள் விரிவுரையாளரும் ஈபிஆர்எல்எவ் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு கிழக்கு மகாண சபை முதல்வரும் கலந்துகொண்டார். 2009 இல் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்டுள்ள ஜனநாயக இடவெளி வரதராஜப்பெருமாள் போன்றவர்களையும் யாழ் பல்கலைக்கழகம் வரை சுதந்திரமாக நடமாட வைத்திருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.