“குமுதம் ரிப்போர்ட்டர்” மற்றும் அதன் அல்லக்கைகளுக்கு இதோ இந்தப் படம் சமர்ப்பணம்…….

 

லெகின்ஸ் அணிந்து பெண்கள் பொது இடங்களில் நடக்கும் போது கலாச்சாரம் நாசாமாகி போனது என்றும்….ஜீன்ஸ், T ஷர்ட் அணிந்து பெண்கள் நடமாடுவது தான் உலகத்தில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றும் கூறி, அறிவுரைகள் கொடுக்கிறோமென்ற சாக்கில், பெண்களை பின் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தெரியாமல், அனிச்சையாக ஆடைவிலகும் நேரத்தில் படமெடுத்து அதை பத்திரிகையில் அச்சடித்து விநியோகம் செய்து கல்லா கட்டும், அலப்பரைகளுக்காகவும் அதை வாங்கிப் படித்துவிட்டு கலாச்சாரம்…கலாச்சாரம்…என்று தலைகீழாகக் குதிக்கும் அந்த பத்திரிக்கைகளின் அல்லக்கை ரசிகர்களுக்கும்….இதோ இந்தப் படம் சமர்ப்பணம்…அவனவன் வேலை என்னவோ அதை செய்யுறதவிட்டுட்டு அடுத்தவன் வீட்டு படுக்கையறையில் உற்று பாக்குறவங்களுக்கு தான் இந்தக் கலாச்சாரப் பிரச்சனை எல்லாம்…வெனிசூலாவின் முன்னாள் அதிபர் தோழர். ஹியுகோ சாவேஸ் ஜானதிபதியாக இருந்தபோது மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக ஒரு கிராமத்திலுள்ள பெண்ணுடன் உரையாடும் காட்சி…அந்தப் பெண்மணி வெகு இயல்பாக குழந்தைக்கு பாலூட்டிகொண்டே தோழர் சாவேசுடன் உரையாடுகிறார்…இதனால் தோழர். சவேசுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை…அந்தப் பெண்மணிக்கு, தன்னுடைய பெண்மை அவமானப்படுத்தப்பட்டதாக எந்த அவமான உணர்வும் இல்லை…! ஆடை அணிவதால் ஏற்படும் பிரச்சனை என்பது பார்க்கும் பார்வையிலேயே உள்ளது…!தோழர். சாவேசின் செயல்பாடு, ஒருவர் தன்னுடைய இளைய சகோதரியிடம் பாசத்துடன் காண்பிக்கும் செயல்பாடு…இதுவே கலாச்சாரம்…!அதன்றி ஆடை எப்போது விலகுமென்று காத்திருப்பதும் அல்லது ஏதாவது மறைந்து புகைப்படமெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கண்கொத்திப் பாம்பாக அலைவதுமோ அல்ல காலச்சாரம்…!

நன்றி….
படம் மற்றும் கருத்து உபயம் Sadan Thuckalai
(Kani Oviya)

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (4)

பிரச்சனையை தீர்ப்பதா அல்லது வளர்ப்பதா என்றால் அதில் தனக்கு எது லாபமோ அதைத்தான் பிரேமச்சந்திரன் செய்வார். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது தான் அவரின் வரலாறு. தமிழரசு கட்சியின் கோட்டை என கூறப்படும் கோப்பாய் கோமகன் வன்னிய சிங்கத்தின் தொகுதியில் கட்டைப்பிராயில் இருந்து பதவிக்காக இணைந்த இந்த புலியடி பயனாளி, புலிகளின் அனுசரணையிலும் பின்பு முள்ளிவாய்கால் பேரவல அனுதாபத்திலும் தான் கடந்த இரு தடவையும் பாராளுமன்றம் செல்ல முடிந்தது.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (4)” தொடர்ந்து வாசிக்க…)

எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ?

(மாதவன் சஞ்சயன்)

கல்லூரி நாட்களில் கல்விச் சுற்றுலா காதல் சுற்றுலாவாக மாறுவது போல, கடந்த சில வாரங்களாக அமைந்து விட்ட எனது தல சுற்றுலா, தகவல் சுற்றுலாவாக மாறிவிட்டது. பஞ்ச ஈஸ்வரங்கள் உட்பட கதிர்காமம் வரை புண்ணியம் தேடச் சென்ற எனக்கு தலைவரின் பாவச் செயல்களை அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாழைக்கு குழி தோண்ட அதில் எச்சங்கள் கிடைத்தது போல அருள் வாங்க சென்ற எனக்கு முக்கியமானவரின் அசிங்கமான பின்னணி பற்றி அவர் பதவியில் இருக்கும் வரை கூறாதவர் அவரின் சரிவினால் கூற முன் வந்தனர். தன் இரகசிய குடும்பத்தை சிங்கப்பூரில் சந்திக்கும் அவரின் முன்னாள் நெருக்கமான மற்ற உறவுகளில் ஒன்று மகாதேவா என துறவு வாழ்வு வாழ்வது வரை கேள்விப்பட்ட செய்திகளை எழுதுவதற்கு முன் இன்றைய அரசியல் நிலையை பார்ப்போம்.

(“எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழருக்காக கட்சியா…? கட்சிக்காக தமிழரா?

தமிழரைஆதரிப்பதாஅல்லதுகட்சியைஆதரிப்பதாஎன்றகேள்விமீண்டும் கனடியதமிழ் வாக்காளர்கள் முன் வைக்கப்படுகின்றது. நடைபெறவுள்ளகனடாவின் 42ஆவது பொதுத் தேர்தலில் கனடாவின் மூன்றுபிரதானதேசியஅரசியல் கட்சிகளின் சார்பிலும் ஜந்துதமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கனடியபொதுத் தேர்தலில் மூன்றுதேசியகட்சிகளின் சார்பில்தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்குவதும்,அதிகஅளவில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதும் இதுவேமுதல் தடவையாகும். லிபரல் கட்சிசார்பில் சத்தியசங்கரி (கரி)ஆனந்தசங்கரி(ஸ்காபுரோரூச்பார்க்),கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் ரொசான் நல்லரட்ணம்(ஸ்காபுரோதென்மேற்கு),புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் ராதிகாசிற்சபைஈசன்(ஸ்காபுரோவடக்கு), செந்திசெல்லையா(மார்க்கம் தோன்கில்) மற்றும் காந்தரட்ணம் மில்ரோய் சாந்தகுமார்(ஸ்காபுரோரூச்பார்க்) ஆகிய ஜவரும் இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்களாவார்கள்.

(“தமிழருக்காக கட்சியா…? கட்சிக்காக தமிழரா?” தொடர்ந்து வாசிக்க…)

சிரியாத் தாயும், ஈழத் தாயும்!

தமிழ் நாட்டில் ஜெயலலிதா அம்மையார் “ஈழத் தாய்” அவதாரம் எடுத்து, தமிழ் உணர்வாளர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். அதே போன்று, ஜெர்மனியில் தற்போது அங்கெலா மெர்கல் “சிரியாத் தாய்” அவதாரம் எடுத்து, அரபு உணர்வாளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். அரசியல்வாதிகள் எங்கிருந்தாலும் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கிறார்கள். இருப்பினும் இருவருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. தனது நாட்டிற்கு வந்து சேர்ந்த சிரிய அகதிகளை சந்தித்து, அவர்களுடன் செல்பி படம் எடுக்கும் அளவிற்கு, அங்கெலா மெர்கல் எளிமையாக நடந்து கொண்டுள்ளார். ஆனால், நமது “ஈழத் தாய்” தமிழ்நாட்டு அகதி முகாம்களில் உள்ள ஈழ அகதிகளை சந்தித்ததாக அறியவில்லை. (Kalaiyarasan Tha)

முன்னாள் புலி உறுப்பினர்களின் இந்நாள் செயற்பாடுகள்

(அசோக்)
சில வாரங்களுக்கு முன், தமிழ்ஈழவிடுதலைப் புலிகளின் ஆரம்பகால தீவிர ஆதரவாளரும், புலிகளுக்கு பல வகைகளிலும் உதவி புரிந்த ஒருவரோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் எல்லாக்காலங்களிலும் ஒரு குறிப்பிட்ட நபர்களை கடுமையாக நம்பி மோசம்போன மனிதர் என்றார். அவர் அதற்கு பல உதாரணங்களையும் சொன்னார். இப் பேச்சில் லண்டனில் இருக்கும் புலிகளின் மூத்த உறுப்பினர் என சொல்லிக் கொள்ளும் “அண்ணாச்சியைப் ” பற்றியும் கதை வந்தது.

(“முன்னாள் புலி உறுப்பினர்களின் இந்நாள் செயற்பாடுகள்” தொடர்ந்து வாசிக்க…)

மகாபாரதம் சீரியல் பற்றி……!

நடத்தட்டும். பாஞ்சாலி 5 வரை மணந்தது சரியே என்று சொல்லி நடத்தட்டும். குந்தி தேவி மணமாகும் முன்பே தாயானது நாம் வணங்கும் சூரிய தேவன் அருளால் என சொல்லி நடத்தட்டும்.
மாடு மேய்ப்பவன் நாடும் ஆள்வான் என சொல்லித் தரட்டும். கடவுளே கண்முன் இருந்தாலும் , பகை , பொறாமை, நில அபகரிப்பு, சூழ்ச்சி இவைகளை அவரால் தடுக்க இயலாது என்பதை சொல்லித் தரட்டும்.
ராமன் சிவனை வழிபட்டான் என சொல்லித் தரட்டும். அப்படியானால் அவன் கடவுள் அல்ல என்ற உண்மையை சொல்லித் தரட்டும். பெண்ணை மானபங்கப்படுத்திய கதை தெரியப்படும் . பெண்ணை சந்தேகிக்கும் சராசரி ஆண் என்பது தெரியட்டும்.
பகுத்தறிவு உள்ள ஆசான் இவைகளை மறைக்க இயலாது.
மாணவன் மேலும் மேலும் முட்டாள் ஆகாமல்
இந்தக் கதைகளை அறிந்து ஆராய்ந்து புறந்தள்ளுவான்.(Kanniappan Elangovan)