எம் தீராத நோய் பிரிவினை !!!

எல்லா வாதத்துக்கும் மருந்துண்டு அனால் பிடிவாதத்திற்கு? அண்மையில் வரும் செய்திகள் எத்தனை அனுபவப் பட்டும் திருந்தா மன நிலை கொண்டவர் நாம் என்பதை பகிரங்கப் படுத்துகிறது. வாலிபர் காங்கிரஸ் பகிஸ்கரித்த தேர்தல் மீண்டும் நடந்த போது தமிழ் காங்கிரஸ் அந்த நான்கு ஆசனங்களை கைப்பற்றியது. வாலிபர் காங்கிரஸ் செயல் இழந்தது. பின் மலையாக மக்களின் வாக்குரிமை பறிப்பை காரணம் காட்டி தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் அரசு கட்சி உதயமானது. வடக்கு கிழக்கு மக்களை இந்த இரு பெரும் கட்சிகளும் நீண்ட காலமாக பிரித்தே வைத்திருந்தன.

(“எம் தீராத நோய் பிரிவினை !!!” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர் சி.வியை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சம்பந்தன் முயற்சி: சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த காலத்தில் கொண்டிருந்த கொள்கையிலிருந்து தற்போது விலகியுள்ளமையினால் பொதுமக்கள் தமது பிரச்சினைகள் மீது அதீத அக்கறை கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தலைமையேற்குமாறு கோருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

(“முதலமைச்சர் சி.வியை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சம்பந்தன் முயற்சி: சுரேஸ்” தொடர்ந்து வாசிக்க…)

கொல்வது பயம்!

(சமஸ்)

 

இந்தியப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ‘லைஃப் ஆஃப் பை’. எழுத்தாளர் யான் மார்ட்டலின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஒரு சின்ன குடும்பம் கதாநாயகன் பையினுடையது. அம்மா, அப்பா, அண்ணன், பை. வாழ்க்கைச் சூழல்களால் பாண்டிச்சேரியைக் காலிசெய்துவிட்டு புறப்படுகிறது பையின் குடும்பம். கப்பலில் பயணம். கடலில் கடும் புயலில் கப்பல் சிக்குகிறது. அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரையும் பையின் கண் முன் கடல் காவு கொள்கிறது. பை மட்டும் உயிர் தப்புகிறான் ஒரு படகில். கூடவே ஒரு வரிக்குதிரை, ஒரு ஓநாய், ஒரு குரங்கு, ஒரு புலி. யாவும் கப்பலிலிருந்து தப்பியவை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவர்கள். எல்லோருக்கும் பசி. முதலில் வரிக்குதிரையை ஓநாய் கொல்லும். அடுத்து குரங்கைக் கொல்லும். அப்புறம் அந்த ஓநாயைப் புலி கொல்லும். இப்போது மிச்சம் இருப்பது புலியும் பையும். கடும் பசி. இருப்பது நடுக்கடலில். அடிக்கடி அவரவர் இருப்புக்கான சண்டை. இதனிடையே மீண்டும் ஒரு புயல். அந்தப் பயணம் எப்படி முடிகிறது?

(“கொல்வது பயம்!” தொடர்ந்து வாசிக்க…)

மதுரை மாவட்டம் திருவாதவூர்,அனையூர் முகாம் ஈழத் தமிழ் மக்கள் வெள்ள நிவாரண உதவி வழங்கினர்.

 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர்.”திருவாதவூர் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருபவர் மாணிக்கவாசகர்”;.அவர் பிறந்த திருவாதவூரில் அமைந்துள்ள முகாமில் 539 குடும்பங்கள் வரை தங்கியிருக்கின்றனர்.இவர்கள் அன்றாடம் உழைத்து கஸ்டமான ஜீவனமே நடாத்தி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலும் முகாமில் உள்ள மக்கள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,57,000 வரையிலான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினர். இந்தப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள்,முகாhம் மக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் மதுரையில் உள்ள ஆனையூர் முகாம் மக்களும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.இந்த முகாமில் 485 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள்.இவர்களும் கஸ்டமான ஜீவனமே நடாத்தி வருகிறார்கள்.இந்த நிலையிலும் இவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,02,160 வரையிலான நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

ஆனையூர் முகாமில் மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை முகாம் தலைவர் அன்ரனி,ஒருங்கிணைப்புக்குழு றீகன்,பாரதி மற்றும் கல்லூரி மாணவர்கள் சங்கீதன்,திலிப்,பிரகா}ஸ் இவர்களுடன் மணிகண்டன் எனபவரும் கலந்து கொண்டார்.
நிவாரணப் பொருட்கள் 9.12.15 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வெள்ள நிவாரண சேமிப்பு நிலையத்தில,; தாசில்தார் புஸ்பா,உதவி தாசில்தார் கே.சுரேஸ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

கஸ்டமான வாழ்க்கை நடத்திவரும் அகதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கியதுகண்டு நிவாரணப் பொருட்கள் சேமிப்பு நிலைய ஊழியகள்; அதிகாரிகள் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
என்னைப் மிகவும் கவர்ந்த நிவாரணப் பணிகளில் முஸ்லீம் மக்கள் தம்மை மீண்டும் (இந்துவத்துவா) மக்களுடன் இணைந்துகொள்ள தமது சகோதரத்துவத்தை தொடர்ச்சியாக எடுத்துக்காட்டிய மனிதாபிமானச் செயற்பாடுகள். தமது எத்தனையோ செயற்பாடுகளினால் நாமும் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க முயன்ற முஸ்லீம்மக்களின் மன உணர்வுகளை மன உழைச்சல்களை என்னால் புரியக் கூடியதாக இருந்தது. 1980 களில் சென்னையின் திருவல்லிக்கேணிப் பகுதியில் தம்மை முஸலீம் என்று பிரகடனப்படுத்தாத வரைக்கும் தமிழர் – முஸ்லீம்கள் என்று பிரித்து அறிய முடியாக வெளிப்பாடுகள் முஸ்லீம் தமிழ் மக்களுக்கிடையே இருந்தது. இது அத்வானின் பாதயாத்திரையும் பாபர் மசூதி இடிப்புடனும் இந்தியாவில் இல்லாமல் செய்யப்பட்டது. இந்துவத்துவா வெறியர்கள் இதனை செவ்வனவே செய்தும் இன்றும் வருகின்றனர் விநாயகர் சதுர்ச்சி அன்று திட்மிட்ட கலவரங்களை ஏற்படுத்தி தமிழ் முஸ்லீம்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்திவருகின்றனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபினமான செயற்பாடடில் எனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் முஸ்லீம் சகோதரர்கள் வணங்கும் அல்லாவை நான் ஒவ்வொரு முஸ்லீமிடமும் கண்டேன்.

(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)

வன்னியிலும் வெள்ளம்…….?

 

தொடர்ச்சியாகப் பெய்து வரும் பெருமழையினால் வன்னிப்பகுதியில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும்பாதை முழுமையாகச் சேதமடைந்திருக்கிறது. நாங்கள் இப்பொழுது வளவுகளுக்குள்ளால்தான் போய் வருகிறோம். வண்டி, வாகனங்கள் எதுவும் வர முடியாது. இப்படித்தான் பெரும்பாலான உள்வீதிகள் சேதமாகியிருக்கின்றன. பலவும் சேறாகி விட்டன.

(“வன்னியிலும் வெள்ளம்…….?” தொடர்ந்து வாசிக்க…)

இஸ்லாமியரே, உங்க‌ள் தெய்வத்தைத் தெரியாது; உங்களைத் தெரிந்துகொண்டோம்!

 

உதவுவாரில் எங்கே பார்த்தாலும்…
குல்லாக்கள்… SDPI, TNTJ, TMMK
பாதிக்கப்பட்டோரில் யாரைக் கேட்டாலும்…
“பாய்கள்”, “முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க”,
“சாய்புகள்தான் சாப்பாடு போட்டுகிட்டிருக்காங்க”.
‘தொடக்கி விட்டுவிட்டார்கள்’ என்றில்லை;
‘இடையில்தான் வந்தார்கள்’ என்றில்லை;
‘திணறி நின்றார்கள்’ என்றில்லை;
‘சோர்ந்து விலகிவிட்டார்கள்’ என்றில்லை!
தங்கள் மனிதத்தை தங்கள் கடவுளுக்கும்,
தங்கள் ஆண்மையை தங்கள் எதிரிகளுக்கும், தங்களுக்கும் உணர்த்திக்கொண்டஇவர்களது அதிரவைக்கும் அற்பணிப்பு!
உடல்நலம், வீடு மறந்து – ஒருவார ஓட்டத்திற்குப் பின்னும்
முகத்தில் அயர்ச்சியில்லை! பேச்சில் கடுப்பில்லை!
இன்னும் ஓயந்ததாயில்லை… – இன்னும்
பெரிதாக அரவணைக்கிற திட்டங்களோடு!
இது போன்ற பேரிடரில் மக்களுக்காக
மக்கள் மத்தியில் திட்டமிட்டே கடவுள்
வைத்துவைத்த இரக்கத்தின் விதைகளின்
விஸ்வரூபங்களாக தெரிகின்றனர்!
இஸ்லாமியரே, உங்க‌ள் தெய்வத்தைத் தெரியாது;
உங்களைத் தெரிந்துகொண்டோம்!
உள்குத்து இல்லாத ஒரு பெரிய நன்றி…
உங்களுக்கும் – உங்களை
இப்படி அனுப்பிய உங்கள் கடவுளுக்கும்!

(REALATIVES உறவுகள்)

மசூர் மௌலானா மறைந்தார் !!!

வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையில் நான் பெற்ற அறிமுகம் மசூர் மௌலானா. அரசியல் மேடைகளில் அவரை தூர நின்று பார்த்து, அவர் பேசும் தமிழ் கேட்டு கவரப்பட்டு அவர் போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்ட வேளையில் அரசியல் விபத்தாக அதுவும் நடந்தது. கட்டை பனையில் நெட்டை பனை போல் யாரோ அமரவேண்டிய பேரவை தலைவர் ஆசனத்தில் நான் அமர்ந்த அரசியல் விபத்து 1988 மார்கழி 5ல் நிகழ்ந்தது. ஈபிஆர்எல்எப், ஈஎன்டிஎல்எப் முஸ்லிம் காங்கிரஸ் உடன் அம்பாறையில் யுஎன்பி யில் இருந்து ஒரு சிங்கள பிரதி நிதி மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் 1989 மார்ச்சில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்றதால் அந்த அம்பாறை பிரதிநிதியின் இடம் காலியாக அதற்கு யுஎன்பி உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் தான் மசூர் மௌலானா.

(“மசூர் மௌலானா மறைந்தார் !!!” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸ் – வெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி !

வெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி ! பிரான்சின் பிரதேச சபைத் தேர்தலில் ஏனைய அனைத்துக் கட்சிகளிலும் அதிகமான வாக்குகளைப் பெற்று முதலாவது சுற்றில் வெற்றிபெற்றுள்ளது.  ஜோன் மரி லூ பென் என்ற இரணுவ அதிகாரியால் உருவாக்கப்பட்ட தேசிய முன்னணி தனது ஆரம்பம் முதலே வெளிநாட்டவர்களுக்கும் இடதுசாரித்துவத்திற்கும் எதிரான அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகிறது.
தமிழனை கடலுக்குள் தள்ளிக் கொலை செய்யவேண்டும் என சிங்கள பௌத்த வெறியர்களும், தமிழனின் காலில் செருப்புத் தைப்போம் என ஆரம்பித்து சுயநிர்ணைய உரிமைக்கான போரட்டத்தை இனவாதமாக மாற்றிய தமிழ் இனவாதிகளும் இலங்கையின் பின் தங்கிய சூழலில் மட்டும் காணப்படுவதில்லை.

(“பிரான்ஸ் – வெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி !” தொடர்ந்து வாசிக்க…)

மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
(முதற்கண் சென்னையின் வெள்ள அவலங்களில் சிக்கித் தவிக்கும் சகல மக்களின் துயரங்களுடனும் நானும் இணைந்து கொள்கின்றேன். இவர்களுக்கான நிவாரணப் பணிகளில் உள சுத்தியுடன் ஈடுபடும் அனைவரின் அர்பணிப்பு உணர்வு, மனித நேயத்திற்கு தலை வணங்குகின்றேன். ஆனாலும் என் மன உணர்வுகளை இவ்விடத்தில் பதிவிடவே விரும்புகின்றேன்…….!)

(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)