மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், அடுத்த எரிபொருள் விலை திருத்தம் உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் செய்யப்படும் என்று கூறினார்.
எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை
ரெலோ தலைமைக்கு எதிராக போராட்டம்!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்சியின் 12-வது தேசிய மகாநாட்டை உடனடியாகக் கூட்டி புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வலியுறுத்தியும் இன்று (27) திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்க டொலரில் ட்ரம்பின் கையெழுத்து
வினைத்திறனான சேவைக்காக முல்லைத்தீவில் விசேட மாநாடு
ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு
ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் அலிரேசா டங்சிரி! ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
போருக்கு நடுவே தைரியமாக முடிவு எடுத்த ஜப்பான்
மத்திய கிழக்கு மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் விலையுயர்வைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் ஜப்பான் அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இலங்கை – ரஷ்யாவிற்க்கிடையில் எரிசக்தி ஒத்துழைப்பு
பொதுமக்களிடம் அவசர கோரிக்கை
ஒரு நாள் ID சேவை இடைநிறுத்தம்
ஆட்கள் பதிவுத் துறையின் கணினி அமைப்பு இன்று (26) மீண்டும் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அத்தியாவசிய பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணினி அமைப்புச் செயலிழப்பு காரணமாக, ஒரு நாள் மட்டும் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் (NICs) உட்பட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 23-ஆம் தேதி, துறையின் கணினி அமைப்பில் திடீரென ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. தொழில்நுட்பச் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, 24-ஆம் தேதி காலை 11.00 மணி முதல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், சில நாட்களுக்குள் கணினி அமைப்பு மீண்டும் செயலிழந்துள்ளது.

