அலைபேசியுடன் திசைமாற்றி பிடித்த சாரதிக்கு சிக்கல்

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

உட்பட குழு மரணம்

இந்தியா, புனே மாவட்டத்தில் புதன்கிழமை (28)  காலை இடம்பெற்ற விமான விபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான  அஜித் பவார் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.  விமானம் பாராமதியில் தரையிறங்க முயன்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய இந்தியா, ஐரோப்பா

பெரும்பாலான தீர்வைகளை இல்லாமற் செய்யும், இரு வழி வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதை இலக்காகக் கொண்ட, வளர்ச்சியடைந்து வரும் பூகோள வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில் ஐக்கி அமெரிக்காவைத் தங்கியிருப்பதை குறைக்கும் நீண்ட காலம் தாமதமானமொரு ஒப்பந்தமொன்றை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இன்று ஏற்படுத்தியுள்ளன.

காலம் கெட்டுக்கிடக்கிறது : பெற்றோர்களே உஷார்

பெற்றோருக்கு தங்கள் குழந்தைக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் அளித்து வந்தாலும் ஒருசில மாணவர்கள், போதைப்பொருள் வலைக்குள் விழுந்து பாடசாலை பருவத்தை மட்டுமன்றி முழு வாழ்க்கையையும் சீர​ழித்துக்கொள்கின்றனர்.

புதிய அரசியலமைப்பு என்பது கானல் நீரா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

தற்போதைய அரசியலமைப்புக்குப் பதிலாக புதியதோர் அரசியலமைப்பை அறிமுகப்டுத்துவதென்பது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால வாக்குறுதிகளில் முக்கியமானதொன்றாகும். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்டுவதாக தெரியவில்லை.

யாழ். பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது  2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

சமன் ஏகநாயக்க, இரண்டாவது சந்தேகநபர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க,  என்றழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க நீதிமன்றத்தில் புதன்கிழமை (28) அன்று  ஆஜரானார்.

பழக்கவழக்கங்களில்“உணவுப் பாதுகாப்பு ஓர் அங்கமாக வேண்டும்”

உணவுப் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, அவை பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக மாற வேண்டும்  என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ரணிலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மஹிந்தவின் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுக்கும் அனுர

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழர்களின் அடையாளங்கள், சன பரம்பலை குறைக்கும் செயற்றிட்டங்களை ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கங்கள் முன்னெடுத்து வந்தன.