பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
உட்பட குழு மரணம்
இந்தியா, புனே மாவட்டத்தில் புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற விமான விபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். விமானம் பாராமதியில் தரையிறங்க முயன்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
