’தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பேரினவாதத்தை எதிர்க்கலாம்’

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து நின்றால் மாத்திரம்தான் பேரினவாதத்துக்கு எதிராக முகங்கொடுக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வியட்நாமில் அமெரிக்கா

(Maniam Shanmugam)

அமெரிக்கா தனது வல்லாதிக்க கொள்கைகளை எதிர்ப்பவர்களை மிரட்டி அடிபணிய வைப்பதற்கு “மனித உரிமை மீறல்” என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தி வருகின்றது. ஆனால் இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா உலகம் முழுவதும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் எல்லோரும் அறிந்த சங்கதி.

’ஐ.நா அறிக்கையை நிராகரிக்க இலங்கை தீர்மானம்’

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை அமைச்சர் உதய கம்மன்பில, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

7ஆம் திகதி சென்னை வருகிறார் சசிகலா

கொரோனாவில் இருந்து குணமடைந்த சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை யிலிருந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். தற்போது பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

’பொத்துவில் முதல் பொலிகண்டிக்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்கவும்’

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொறியாக மாறிய ஜெனீவா

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை, எதிர்கொள்ளும் வகையில், சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.

பிள்ளையான், கருணா, இந்திய பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை பெப்ரவரி 02 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலும் 840 பேர் குணமடைந்தனர்….150 குழந்தைகளுக்குகொரோனா தொற்றுக்கு

கொவிட் தொற்று காரணமாக சிகிச்சைப்பெற்று வந்தோரில் மேலும் 840 பேர் இன்று(03) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 59, 883 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமரை அதிரடியாக சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கையின் அதிர்ச்சி அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமரை அவசரமாக சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

இந்திய விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்? இதோ ஓர் எளிய விளக்கம்

(மக்கள் அதிகாரம் – நெல்லை)


விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சிம்லாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
சிம்லாவில் உள்ள ஆப்பிள் பழத்தோட்டங்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து சில்லறை விற்பனையாளர்கள் நேரடியாக ஆப்பிளை விலைக்கு வாங்கி அதை நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தனர். வியாபாரிகளுக்கு அங்கு சிறிய கிடங்குகள் மட்டுமே இருந்தன.