மேலிடத்தின் உத்தரவிலேய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதெனவும். அதற்காக ஆதாரமுள்ளது எனவும் இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் தன்னிடம் தெரிவித்தாதாக, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர அழைப்பு
தமிழரசுக் கட்சி இடறிய இடத்தில் வெற்றிபெற்ற மணிவண்ணன்
கொவிட்-19 கதையாடல்-5: சடலங்களில் அரசியல்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
பெருந்தொற்று எம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும் இலங்கையில் அதைவிடப் பெரிய பிரச்சினை, இறந்தவர்களைத் தகனம் செய்வதா, அடக்கம் செய்வதா பற்றியது. கொவிட்-19 முழு உலகுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் மட்டும் இந்தப் பெருந்தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில், பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், சடலங்களை வைத்துச் செய்யப்படும் அரசியல் நீண்டது. அது பாரிய அழிவுகளையும் இனப்பகையையும் உருவாக்கியிருக்கிறது.
கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி, மரணித்தோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்து வருகிறது. இதற்கான அறிவியல் காரணங்களுக்கு அப்பால், அரசியல் காரணங்களே பிரதானமானவை.
’இனவெறியர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ – திருமா
போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர். கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தில் கலந்துகொள்பவர்களை கலைந்து செல்லுமாறும், மீறுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர். எனினும், நான்கு மாணவர்கள் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுத் தூபி இன்று (08) இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது.