நினைவுத்தூபி விவகாரம்: ’துணைவேந்தரிடம் ஆதாரம் உள்ளது’

மேலிடத்தின் உத்தரவிலேய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதெனவும். அதற்காக ஆதாரமுள்ளது எனவும் இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் தன்னிடம் தெரிவித்தாதாக, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழரசுக் கட்சி இடறிய இடத்தில் வெற்றிபெற்ற மணிவண்ணன்

(புருஜோத்தமன் தங்கமயில்)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக, விஸ்வலிங்கம் மணிவண்ணன், டிசெம்பர் 30ஆம் திகதி தெரிவானார். மேயருக்கான போட்டியில், முன்னாள் மேயரான இம்மானுவேல் ஆர்னோல்டை, ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்திருந்தார்.

கொவிட்-19 கதையாடல்-5: சடலங்களில் அரசியல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பெருந்தொற்று எம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும் இலங்கையில் அதைவிடப் பெரிய பிரச்சினை, இறந்தவர்களைத் தகனம் செய்வதா, அடக்கம் செய்வதா பற்றியது. கொவிட்-19 முழு உலகுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் மட்டும் இந்தப் பெருந்தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில், பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், சடலங்களை வைத்துச் செய்யப்படும் அரசியல் நீண்டது. அது பாரிய அழிவுகளையும் இனப்பகையையும் உருவாக்கியிருக்கிறது.
கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி, மரணித்தோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்து வருகிறது. இதற்கான அறிவியல் காரணங்களுக்கு அப்பால், அரசியல் காரணங்களே பிரதானமானவை.

’இனவெறியர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ – திருமா

யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர். கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தில் கலந்துகொள்பவர்களை கலைந்து செல்லுமாறும், மீறுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர். எனினும், நான்கு மாணவர்கள் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுத் தூபி இன்று (08) இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது.

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார். இதனையடுத்து, இம்மாதம் 20ஆம் திகதி பைடன், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியும்.

‘பைடனிடம் முறையான விதத்தில் ஆட்சி கையளிக்கப்படும்’

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனாதிபதியாக இம்மாதம் 20ஆம் திகதி பதவியேற்கும்போது முறையான விதத்தில் ஆட்சி கையளிக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் விடயத்தில் இந்தியாவை நம்பி இருக்கலாமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு, சிறுபான்மை மக்களைச் சீண்டாமல் இருக்கவே முடியாது. பெரும்பான்மை மக்கள் மத்தியில், தமக்கு இருக்கும் ஆதரவை, சரியாமல் தக்கவைத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை.