பொங்கல், துக்ளக் விழாக்களில் பங்கேற்கிறார் ஜெ.பி.நட்டா

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஒருநாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். பாஜக சார்பில் நடக்கும் பொங்கல் விழாவிலும், ‘துக்ளக்’ ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார்.

பிள்ளையான் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு–நாளை இறுதி தீர்ப்பு

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் அவர்களின் கொலை தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

எமது தேசத்தின் நிலமை

(Nivetha Sathiyan)

பல்கலைகழகத்தில் படிக்கும் ஒரு மாணவி தனக்கு அறிமுகமில்லாத புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு இளைஞனுக்கு சேரவேண்டிய சிறு தொகைப்பணத்தை தனக்கு தெரிந்த நண்பர் கேட்டார் என்பதற்காக தனது பெயரில் பெற்றுக் கொடுத்ததற்காக பலவருடங்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பூசா சிறையில் அடுக்கப்பட்டு அத்தனை சித்திரவதைகளையும் பெற்றாள். அவள் இயக்கத்துடன் தொடர்புடையவள் அல்ல, ஆயுத பயிற்சி பெற்றவளுமல்ல அமைதியான தானுண்டு தன் படிப்புண்டு என்று இருப்பவள்.

இருட்டில் எடுக்கப்பட்ட குருட்டு முடிவுகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்பலைகள் கடல் கடந்தும் கிளம்பியுள்ளன. அகற்றப்பட்டமைக்கு பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன விளக்கமளித்துள்ளன.

போர்க்காலம் கற்றுத் தந்த சொற்கள்.

(வேதநாயகம் தபேந்திரன்)

இலங்கைத் தீவை ஆட்டிப் படைத்து வாழ்வின் அனைத்துத் தளங்களையும் அசைத்து விட்ட மூன்று தசாப்த காலப்போர் முடிந்து விட்டது. முற்றுப்பெற்று விட்டபோர் சில சொற்களையும் மரபுகளையும் கற்றுத்தந்துவிட்டே போயுள்ளது.

பெரும்பான்மை இனத்தின் பாதுகாப்பின்மை உணர்வு

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கையின் புகழ்பூத்த வரலாற்றியல் ஆய்வாளர்களில் ஒருவர் கே.எம். டி சில்வா. 1998ஆம் ஆண்டு பிரசுரமான, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலொன்றில், ‘இலங்கையின் இனப்பிரச்சினையானது, சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மைக்கும், பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மைக்கும் இடையிலான மோதல் என்று விளிக்கிறார். இதில் இரண்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

மீள இயங்கவுள்ள ரயில் சேவைகள்

கொவிட் 19 பரவலையடுத்து தற்காலிகாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகளை, நாளை (12) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 36 ரயில் சேவைகள் நாளை முதல் மீள சேவையில் ஈடுபடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல், அதே இடத்தில் சற்றுமுன் நாட்டப்பட்டது. இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு சம்மதித்தனர். உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை இன்று (11) அதிகாலை 3 மணியளவில் சந்தித்த சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.

மலையக தியாககிகள் தினம் அனுஷ்டிப்பு

‘மலையக உரிமைக்குரல்’ மற்றும் ‘பிடிதளராதே’ ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ‘மலையக தியாகிகள் தினம்’, கொட்டகலை பத்தனை சந்தியில், இன்று (10) உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.