காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மயில்களுக்கு உணவளி க்கும் காணொளியைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் நரேந்திர மோதி சென்ற மாதம் பகிர்ந்திருந்தார்.
செம்மணி புதைகுழியை உலகறியச்செய்த கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு! அறிந்ததும், அறியாததும்
கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலை நினைவுகள் அண்மையில் பல மட்டங்களிலும் மீட்கப்பட்டன. தமிழின படுகொலை வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாக ஒவ்வோராண்டும் பல தரப்புக்களாலும் இது நினைவுகூரப்பட்டு வருகிறது. 1995 யாழ் இடப்பெயர்வின் பின்னர், இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் யாழ்ப்பாணம் இருந்த காலப்பகுதியில் காணப்போன நூற்றுக்கணக்கானவர்களுடன் சேர்த்து கிருஷாந்தியின் நினைவும் இவ்வாறு ஆண்டுதோறும் மீட்கப்பட்டு வருகின்றது.
9/11: 19 ஆண்டுகளின் பின்னர் இலங்கை
20ஆவது திருத்தமும் கொள்கையற்ற அரசியலும்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற, எந்தவோர் அரசாங்கமும் முன்வராத நிலையில், ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் நெருக்குவாரத்தின் பேரில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 2001ஆம் ஆண்டில் 17ஆவது அரசமைப்புத் திருத்தத்தை முன்வைத்தார்.
இந்தியாவை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு….
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற வினாவுக்கான உரிய பதிலை யாராலும் அளித்துவிட முடியாது. ஏனெனில், நிலையான நிலைப்பாடு என்று எதுவும் இருந்ததில்லை. இந்தியாவின் நலனும் மேலாதிக்கமும் விஸ்தரிப்புவாதமுமே இலங்கை தொடர்பான நிலைப்பாடுகளைத் தீர்மானித்து வந்துள்ளன.
35வது ஆண்டு நினைவுதினம்
06.09.1985 அன்று மன்னார் மாவட்டத்திலுள்ள முருங்கன் பரியாரிக்கண்டல் என்னுமிடத்தில் அரசியற்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தோழர்கள் விமல்(அருமைறஞ்சன்), பாலா(றொபின்சன்) தோழர்கள் இருவரும் முருங்கன் இரானுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பிக்க முயன்றவேளையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். தோழர் விமல்(அருமைறஞ்சன்) மன்னார் மாவட்டத்தின் முருங்கனிலுள்ள பரியாரிக்கண்டலை பிறப்பிடமாகக் கொண்டவர்.
தண்டி யாத்திரையும் தண்டிக்கப்பட்டவர்களுக்கான யாத்திரையும்
(சிவா முருகுப்பிள்ளை)
இரண்டு வருடத்திற் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக மக்கள் விடாப்பிடியாக போராடி வருகின்றனர். எந்த வகையிலும் தமது உறவுகள் இலங்கை அரச படையிடம் 2009 மே மாதம் 18ம் திகதியளவில் ஒப்படைக்கப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டதற்குள் உள்ளாகி இன்றுவரை திரும்பி வராதவர்களுக்கான நியாயங்களை கோரிப் போராட்டம் செய்வதும் நியாயமானதே. உறவுகளைத் தொலைத்து போராடும் மக்களின் உணர்வுகள் புரியப்படக் கூடியது நியாயமானது, இதற்கு நாம் ஆதரவு வழங்கு வேண்டும்.