ஆடு நனைகிறதென்று…

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சொற்கள் பொருளழியுங் காலத்தில், பொருள்கோடல் சொற்களை மேலும் பொருளற்றதாக்குகிறது. அது சொற்களின் பெறுமதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மனித உரிமைகள் என்ற சொல்லாடல் இன்றைய உலக அரசியலின் திசைவழியில் வலிய சொல்லாகியிருக்கிறது. அது யாருக்கானது அல்லது யாருக்கு எதிரானது என்பது அதன் வலிமையைத் தீர்மானிக்கிறது. இப்போது ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளும் அதில் இலங்கையின் மீதான அக்கறையும் ஒருபுறம் கவனத்தை ஈர்க்கையில், மறுபுறம் பேரவையின் முக்கியமான குழுவுக்கான தலைமையை ஐ.நா. சவூதி அரேபியாவுக்கு வழங்கியிருப்பது கடும் விமர்சனத்துக்குட்பட்டுள்ளது.

(“ஆடு நனைகிறதென்று…” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் ஜப்பான் இலங்கையில் கடை விரிக்கின்றது

இலங்கை – ஜப்பான் உறவை கட்டியெழுப்ப இருநாடுகளுக்கான அமைச்சர்கள் மட்ட உயர்குழு
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சமூக, பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முழுமையான தொடர்பாடலை வலுப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த உயர்மட்ட அமைச்சர்களையும், அதிகாரிகளையும் உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் தீர்மானித்துள்ளனர்.

(“மீண்டும் ஜப்பான் இலங்கையில் கடை விரிக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

சினிமா ஊடாக வீட்டுக்குள் வந்து சேருகின்ற பேராபத்து!

திரைப்படம் இனிமேல் சிறுவருக்கு உகந்ததல்ல

எனது வீட்டைப் பொறுத்தவரையில் அப்பாவோ கணவரோ சிகரட் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்கள். என்றபோதும் எனது நான்கரை வயதேயான குட்டி மகன் பல்குத்தும் குச்சியை அடிக்கடி எடுத்து விளையாடும் போது தனது வாயில் ஒரு பக்கத்தில் வைத்து கொள்வதை என்னால் அவதானிக்க முடிந்தது. அது ஆபத்தானது என்பதனால் அதனை கண்காணாத இடத்தில் ஒழித்து வைத்தேன். ஆனால் என் மகனோ அதைக் கேட்டு அழுது அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

(“சினிமா ஊடாக வீட்டுக்குள் வந்து சேருகின்ற பேராபத்து!” தொடர்ந்து வாசிக்க…)

இந்தோனேசியாவில் இனப்படுகொலை

இந்தோனேசியாவில், பல இலட்சம் கம்யூனிச சந்தேகநபர்கள் அழிக்கப் பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவணப்படும் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இனப்படுகொலையில் பங்கெடுப்பதற்காக, கத்தோலிக்க இளைஞர்களை அணிதிரட்டிய, டச்சு – கத்தோலிக்க பாதிரியார் பற்றி அதிலே அதிக கவனம் செலுத்தப் பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த எசுயிஸ்ட் பாதிரியார் யோப் பேக் (Joop Beek) சர்வாதிகாரி சுகார்த்டோவுக்கு நெருக்கமானவராக இருந்தார். கத்தோலிக்க மாணவர்களை அணிதிரட்டி கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான இனப்படுகொலையில் பங்கெடுக்கச் செய்தார்.

(“இந்தோனேசியாவில் இனப்படுகொலை” தொடர்ந்து வாசிக்க…)

இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ?

(மாதவன் சஞ்சயன்)

இந்தக் கேள்வியை கேட்பவர்கள் வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும். வாய் வீரம் பேசுபவர்களும், விதாண்ட வாதம் புரிபவர்களும், இனப் பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும், நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை கூறி மக்களை பலிக்கடா ஆக்கி நடைபவனி, கையெழுத்து வேட்டை என நடத்தி தம்மை பிரபலப்படுத்தி, அதில் கலந்து கொண்டவரை, ஜெயக்குமாரி போல் சிறைக்கும் பருவமடையாத அவர் மகளை சிறுவர் காப்பகத்துக்கு அனுப்புபவர்களும் ஆடும் நாடகம் தெரியவரும்.

(“இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ?” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளை நம்பியோர் கொல்லப்படுவார்…….?

சமாதான காலத்தில் சரிக்கப்பட்ட தோழர் சுபத்திரன்.(றொபேட்) சுபத்திரனின் தந்தையார் தம்பிராஜா இலங்கைப் பொலிசில் கடமையாற்றியவர். புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுபத்திரன் ஈ பி ஆர் எல் எஃப் என்ற காரணத்தால் அவரது குடும்பம் புலிகளால் நாடு கடத்தப்பட்டது. சுபத்திரனின் தாயார் கனடாவில் காலமானார். சமாதான காலத்தில் சுபத்திரன் புலிகளின் தளபதியான இளம்பரிதியுடன் உறவாக இருந்தார். இளம்பரிதி(முன்னாள் ஆஞ்சினேயர்) தனது ஊரை சேர்ந்தவர் என்பதால் தன்னை கொல்லமாட்டார்கள் என்று தோழர் சுபத்திரன் நம்பி விட்டார். ஆனால் புலியை நம்பியது சுபத்திரனின் தவறு. யாழ் வேம்படி மகளிரி கல்லூரிக்கு அருகாமையில் வசித்த சுபத்திரன் தந்து வீட்டு மொட்டை மாடியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வேம்படி மகளிர் கல்லூரி மாடியிலிருந்து சினைப்பர் தாக்குதல் மூலம் புலிகளால் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை நிகழ்த்தியவன் புலிகளின் யாழ் பொறுப்பாளர் ஈஸ்வரன்.

(Rahu Rahu Kathiravelu)

கடவுளே!

(சனிக்கிழமை சம்பவம்.)

இப்படி ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து மோட்டார் சைக்கிள் டயரை கழுத்தில் மாட்டி மண்ணெண்னை ஊற்றி உயிருடன் எரித்ததை எனது சிறுவயதில் பார்க்க நேர்ந்தது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஒரு சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இந்த கொடூரம் நிகழ்தப்பட்டது. ஏன்? எதற்காக? யார் எரித்தார்கள்? என்பது எனக்கு அவ்வளவாக அப்போது விளங்கவில்லை. ஆனால் பின்னாளில் எனக்கு நன்றாகவே புரிந்தது.

(“கடவுளே!” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 06 பேர் மயக்கம்

கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக மூன்றம்சக் கோரிக்கையை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகளில் 06 பேர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, திருகோணமலை தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் அமைப்பின் செயலாளர் பி.தட்சாயன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (02) 04 பேரும் சனிக்கிழமை (03) 02 பேரும் மயக்கமடைந்ததாகவும் அவர் கூறினார். பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கவேண்டும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வேலை வழங்கவேண்டும், அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பட்டதாரிகள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண் கொள்ளை ஒரு தொடர் கதை

இயக்கத் தேவைகளுக்காக புளொட் அமைபின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் மண் வியாபாரம் செய்து கொண்டிருந்தனா. புலிகளும் மண் வியாபாரம் செய்தனர். புளொட் அமைப்பின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர் ரவிமூர்த்தியும், இன்னொரு உறுப்பினரும் அரியாலைக்கு மண் அள்ளச் சென்றனர். அப்போது அங்கு அங்கு வந்தார் ரிச்சார்ட். “நாம் மட்டுமே இதனை எடுக்கமுடியும்” நீங்கள் வேறெங்காவது சென்று பாருங்கள்” என்றார் ரிசார்ட். ரவிமூர்த்தி கேட்கவில்லை. பிரச்சனைப்பட்டார். ரிச்சார்ட்டுக்கு பொறுக்கவில்லை. பிஸ்டலை எடுத்து ரவிமூர்த்தியை சுட்டு விட்டார்.மற்றொரு புளொட் உறுப்பினரையும் சுட்டார். இருவரும் அதே இடத்தில் கொலை செய்யப்பட்டனர். பின்பு 2009 மே மாதத்தின்பின்பு மண் கொள்ளையில் புலிகளின் விண்ணன் என்பவர் ஈபிடிபி இன் மகேஸ்வரி நிதியத்திற்காக மண் கொள்ளையில் ஈடுபட்டார். இலங்கைத் தமிழ் மக்களின் மண்ணைக் கொள்ளை செய்வதில் பேரினவாத அரசுகள் தொடர்ந்தும் ஈடுபட்டும் வருகின்றனர். இதனை எதிர்த்து மூர்கத்தனமாக போராடிய விடுதலை அமைப்புக்களே பின்பு மண் கொள்ளையிலும் ஈடுபட்டனர்.எனவே மண் கொள்ளை என்பது ஒரு தொடர் கதை.

Sun Sea கப்பலில் போர்க் குற்றவாளிகள்

எம்.வீ.சன்.சீ.கப்பலின் மூலம் கனடாவுக்கு அகதிகளாக சென்ற இரண்டு பேர் யுத்தக்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு 500 இலங்கை அகதிகள் வரையில் இந்த கப்பலில் கனடாவைச் சென்றடைந்தனர். இந்த கப்பலில் உள்ள அகதிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், கடினமான விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது இரண்டு பேர் யுத்தக்குற்றங்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் குடிவரவு சபையை மேற்கோள்காட்டி, அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது