கொரோனா வைரஸ் ஐத் தொடர்ந்து சிறீ லங்காவில் உணவுத்தட்டுப்பாடு வருமா?

அண்மையில் நண்பர் Jeevan Prasad இன் முகநூல் பதிவொன்றிற்கு தனது கருத்தாக நண்பர் Seerangan Periyasamy கீழ்வரும் தகவலைத் தந்திருந்தார்.

மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி காய்கறிகள் அழிக்கப்பட்டன

ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த பலாங்கொடை நகர சபை மேயர் சாமிகா வெவகெதரா (Chamika Wewagedara), விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி அழித்துள்ளாரென பண்டாரவளையைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனாவின் ஊடாகப் பரவும் வெறுப்பை எப்படி எதிர்கொள்வது?

கரோனா ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்களிடையே இருக்கும் பிளவுகளை வலுப்படுத்துகிறது. இனமத வெறுப்புகளைப் பீறிடவைக்கிறது. வெவ்வேறு நாடுகளில் மக்கள் தமது நம்பிக்கைகளை முன்னிறுத்திக் குழுமிட மதம் முக்கியக் காரணியாக உள்ளது. கரோனா பரவிட இது உகந்த சூழலாகிறது. இக்காலத்தில், மனிதர்கள் சரீர விலகலைப் பேணாமல் அறிவியலை மறுத்து ஓரிடத்தில் குழும மதம் மட்டுமே காரணமில்லை எனினும் முக்கியக் காரணம் மதம். எல்லா மதங்களிலும் பெரும்பான்மையினர் அறிவியலைப் புறந்தள்ளுபவர்கள் அல்ல எனினும் புறந்தள்ளுவோருக்கு மத நம்பிக்கைகளே முக்கியத் தூண்டுகோலாக உள்ளன.

உயிரிழப்பு ஒரு இலட்சம் தாண்டியது

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.50 மணிவரை உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,174ஆகவும், வைரஸ் தொற்றுக்கிலக்காகியவர்களின் எண்ணிக்கை 1,639,993ஆகவும் பதிவாகியுள்ளது.

கரூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை; தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு வழங்கிய தொழிலதிபர்

கரூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து காலில் விழுந்து வணங்கி கவுரவித்த தொழிலதிபர் ஒருவர், 105 பேருக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார்.

நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் முக்கியத்துவம் வேண்டும்

கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நோயை எதிர்கொள்வதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவும் முக்கியம். கரோனா பெருவெடிப்புக் கட்டத்தில் சத்தான உணவும் சுகாதாரமான குடிநீரும் மிகவும் அவசியமானவை.

ஐ.நா.,வில் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும், 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்; 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

’நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டால் தண்டனை’

(க. அகரன்)

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள், பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்டப் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.