தீவகப் பகுதியில், கடல் உணவு உற்பத்தி சார் தொழிற்றுறைகளைக் கட்டியெழுப்பி, அதனூடாக கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றியமைக்கப்படுமென, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில், நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
’அருளர்’ நினைவேந்தல் நிகழ்வு
ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவராகவும், தமிழர் அரசியல் சார்பான ஆய்வு நூல்கள் பலவற்றின் ஆசிரியராகவும் விளங்கி அண்மையில் காலமான ‘அருளர்’ எனப் பரவலாக அறியப்படும் அருட்பிரகாசத்தின் நினைவேந்தல் நிகழ்வு, யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், நல்லூரிலுள்ள யூரோவில் மண்டபத்தில், நேற்று (21) நடைபெற்றது.
இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது? எதிர்ப்பு ஏன்? – முழுமையான அலசல்
அகதிகளாக எத்தனை வருடம்தான் வாழ்வது? எங்கள் குழந்தைகள் அகதிகளாக வாழக் கூடாது: இலங்கைத் தமிழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை
சகோதர மொழி அறிவின்மை வெட்கத்துகுரியது
மோடி அரசின் (புதிய)குடியுரிமைச் சட்டம் இலங்கை தமிழருக்கு நன்மைகளை ஏற்படுத்துமா…?
(சாகரன்)
மோடி அரசின் மத்திய உள்துறை அமைச்சர் அமிர்த்ஷா இனால் கொண்டுவரப்பட்ட இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய நாடு தழுவிய ரீதியில் எதிர்பலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. குடியுரிமை சட்டத்தில் பொதுமையாக இஸ்லாமியரை தள்ளி வைத்தல், இலங்கை தமிழருக்கு குடியுரிமை வழங்குவதை தவிர்த்தல, மியான்மார் ரோங்கிய முஸ்லீம்களை அகதிகளாகவோ அல்லது குடியுரிமை வழங்கலுக்குள் தவிர்தல் என்ற போக்குகள் உள்ளாகியிருப்பது எதிர்பலைகளுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன.
“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !
கொலம்பியா: ஆயுதங்களை கைவிடுவதன் ஆபத்துகள்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள், அவர்களது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தப் புதிரை எதிர்நோக்குகின்றன. சமாதானத்துக்கான விருப்பு, விடுதலையின் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்திய நிகழ்வுகள், வரலாறெங்கும் உண்டு.
பாரததேசத்தை அண்ணாந்துபார்த்து அகமகிழ்ந்தோம்..இன்று இந்த நிலைகண்டு
அமைச்சர் டக்ளஸ் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
(Subamangala Saththiyamoorthy)
இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடந்து ஒருமாதம் கூட ஆகாத நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை பதவி விலக வேண்டும் என தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சும(த)ந்திரன் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சா இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என கூறிவிட்டாராம்.