தமக்கு உதவி செய்ய மறுத்த பாலம் புனரமைக்கும் ஒப்பந்தக்காரர்களின் களஞ்சிய அறைகள், மணல் கொள்ளையர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவமொன்று, முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பிரதான வீதியில், நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
மனிதம் இங்கும் வாழ்கின்றது
எப்படி சொல்வது தன் மகளிடம் ..?”
– தவித்தார் அந்த தந்தை .
அவர் பெயர் அஜய் முனாட் .
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் .
அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணம் .
தேதி எல்லாம் நிச்சயிக்கப்பட்டு விட்டது .
கல்யாணத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய் . இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும்.
அஸ்ஸாமில் தீவிரமடைந்துள்ள போராட்டம்
தூக்குத் தண்டனை!
12 வருடங்களுக்குப் பின்னர் நீதித்துறை அளித்த தீர்ப்பு!
தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 75 வயதான பர்வேஸ் முஷர்ரப் பாகிஸ்தானில் 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை அந்நாட்டு ஜனாதிபதி பதவியில் இருந்தார்.
“எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதா தண்ணீரை ஊற்றி அணைப்பதா”
(கருணாகரன்)
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிறகு, கிளிநொச்சிக்குச் சில சிங்கள நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடைய வருகையின் நோக்கம், “மதக வன்னி” (Mathaka Wanni) என்ற என்னுடைய சிங்களப் புத்தகத்தைப்பற்றிய உரையாடலைச் செய்வதும் என்னைச் சந்திப்பதுமே. ஆனால், பேச்சு அரசியற்பக்கமாகவும் திரும்பியது. அப்பொழுது அவர்களிடம் கேட்டேன், “ஜனாதிபதித்தேர்தலின் முடிவுகளைப்பற்றி உங்களுடைய பார்வை என்ன? சிங்கள மக்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?” என்று.
மணற் கொள்ளையிற்கு எதிராக போராட்டம்
மத்திய தரைக்கடல் பகுதியில் பாரிய யுத்தம் ஏற்படும் அபாயம்.
(M.N. Mohamed)
துருக்கி ஐ.நா அங்கீகரித்த லிபிய அரசுடன் ஒப்பந்தம் செய்து மத்தியதரைக் கடலின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்து சில மணி நேரத்துக்குள் லிபியாவின் யுத்தப் பிரபு கலீபா ஹப்தாரின் படைகள் லிபியாவின் தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக பாரியயுத்தமொன்றை ஆரம்பித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்தம் வேண்டாம்!
“குடிமக்கள் பதிவேடு” வேண்டும்!
(ஐயா கி. வெங்கட்ராமன்,)
பொதுச்செயலாளர்,தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
இந்தியா முழுவதும் இந்தியக் குடிமக்களைக் கணக்கெடுக்கும் “தேசிய குடிமக்கள் பதிவேடு” (என்.ஆர்.சி.) செயல்படுத்தப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இங்கு வாழும் மக்களில் இந்திய நாட்டுக் குடிமக்கள் யார் என்பதற்கான பதிவேடு குடிமக்கள் பதிவேடாகும்.
மரக்கறி விலையில் திடீர் அதிகரிப்பு
மரக்கறிகளின் விலைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பெரிய வெங்காயம் கிலோகிராம் ஒன்றின் விலை 550 ரூபாயாக காணப்படுகிறது. அத்துடன், கரட் கிலோகிராம் ஒன்றின் விலை 250 ரூபாயாகும். அத்துடன், போஞ்சி உள்ளிட்ட ஏனைய மறக்கறிகளின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்துள்ளன. நிலவுகிற சீரற்ற காலநிலை காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.