மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்-கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி

மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீ.நிகால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுடன் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (6) காலை நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினர்

(ஜனகன் முத்துக்குமார்)

அஸாம் என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். இது கிழக்கு இமயமலைக்கு தெற்கே பிரம்மபுத்ரா மற்றும் பராக் நதி பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ளது. 78,438 கிலோ மீற்றர் பரப்பளவு மற்றும் சுமார் 32 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இம்மாநிலத்தின் வடக்கே பூட்டான் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லையாக உள்ளன. கிழக்கில் நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, மிசோரமும், தெற்கே பங்களாதேஷ், மேற்கு வங்கமும், மேற்கில் சிலிகுரியும் காணப்படுகின்றன.

இடைத்தரகர்களிடம் சிக்கித் தவிக்கப்போகும் விவசாயம்

(அனுதினன் சுதந்திரநாதன்)
இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் சகலவிதமான தொழில்முறையும் வணிகமயப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு, பாரம்பரியமான விவசாயமுறையும் விதிவிலக்கல்ல. விவசாய செயற்பாடுகள் காலகாலமாக பல்வேறு தொழில்நுட்பங்களின் அறிமுகத்தினால், வேறுபட்டவகையில் விருத்தியடைந்து வந்திருந்தாலும், அதன் வர்த்தக முறையில் தற்காலத்தில்தான் மிகப்பெரும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவிருந்தாலும், விவசாயத்துறையும் ஏனைய துறைகளைப்போல இடைத்தரகர்களிடம் சிக்கித்தவிக்கும் துறையாக மாறிவருகின்ற துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

‘இரத்தினபுரி மாவட்ட சிங்கள பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் அதிகம்’

இரத்தினபுரி மாவட்டத்தில், பெரும்பாலான தோட்ட மாணவர்கள், சிங்கள மொழி மூல பாடசாலையில் அனுமதிக்கப்பட்டு கல்வி கற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பெல்மதுளை, இரத்தினபுரி, கலவான பகுதியிலுள்ள தோட்டத்துக்கு அணமையிலுள்ள பாடசாலைகளிலேயே, தமிழ் மாணவர்கள் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர்.

சந்திரயான் -2 : முன்னணி அயல்நாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?

சந்திரயான் 2 லேண்டர் தொடர்பை இழந்ததையடுத்து பல தரப்புகளிலிருந்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பெரு முயற்சிகளை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிற துறையைச் சார்ந்த பிரபலங்களும் பலதரப்புகளிலிருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தந்து வருகின்றனர்.

நிலவின் தென் துருவ பகுதியில் மர்மம் 

பூமியின் துணைக்கோளான நிலா இரவில் பார்ப்பதற்கு ரம்மியாக காட்சியளித்தாலும், அது தனக்குள் பல்வேறு மர்மங்களை உள்ளடக்கியது. குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் சுமார் 100 பில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் படாத அநேக பள்ளங்களும், குகைகளும் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்தால் சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்து பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கும். மேலும், அங்குள்ள பள்ளங்களில் உறைநிலையில் 80 மில்லியன் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதுடன், அதிக ஆற்றல் வாய்ந்த ஹீலியம், ஹைட்ரஜன், மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன. இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்தபடியாக எரிபொருள் தேவைதான் உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, கதிர்வீச்சு அபாயமில்லாத அதிக ஆற்றல் கொண்ட ஹீலியம் மூலக்கூறுகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வதங்கிடுமே வாழைச்சேனை – பெருகிவரும் ஐஸ் தொழிற்சாலைகள்

(Je Tha)

மட்டக்களப்பு மாவட்டத்தின் நுழைவாசலில் அமைந்துள்ளது இந்த வாழைச்சேனை பட்டினம். நீர்வளமும் நில வளமும் மிக்க கல்குடா பிரதேசத்தின் மைய நகர் இதுவாகும். இங்கு நிறைந்து விளையும் வாழைத்தோட்டங்கள் காரணமாகவே இது வாழைச்சேனை எனப் பெயர் பெற்றது. இந்தக் கல்குடா தொகுதியானது பெருந்தலைவர் நல்லையா மற்றும் தேவநாயகம் போன்றோர் பிரநிநிதித்துவம் செய்த தொகுதியாகும். அதேபோன்று கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் சந்திரகாந்தன் கூட இந்த தொகுதியின் பிரதிநிதியாகவே அரசியலில் காலடி பதித்தார்.

’பேச்சுவார்த்தை வெற்றிப்பெற்றால் வேட்பாளர் இல்லை’

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் தனித்து வேட்பாளரை களமிறக்கும் சு.க.வின் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார்.