(கே. சஞ்சயன்)
ஒக்டோபர் 26ஆம் திகதி – ஒரு வெள்ளிக்கிழமை; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த ஒரு பெரும் குழப்பத்துக்கு, இன்றைய நாள் – வெள்ளிக்கிழமை, முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பரவலாகக் காணப்படுகிறது. அரசமைப்பைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்தடுத்து எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வும், சிக்கல்களாகவே மாறின. மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக, நியமித்ததன் மூலம், ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நெருக்கடி, அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை முடக்குவதிலும் பின்னர், அதைக் கலைப்பதிலும் போய் முடிந்தது.