முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: திலகர் எம்.பி கண்டனம்

விஞ்ஞான அடிப்படையில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக தெரிவித்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இப்போது ஊவா மாகாண சபைக்கு மீண்டும் கல்வி அமைச்சராக சாமர சம்பத் தசாநாயக்கவை, என்ன விஞ்ஞானத்தின் அடிப்படையில் தெரிவு செய்துள்ளது? என கேள்வி எழுப்பியுள்ள திலகராஜ் எம்.பி சாமர சம்பத்தினால் பாதிப்புற்ற பெண் அதிபருக்கு அநீதி ஏற்படக்கூடாது என்பதை சுயாதீன மனித உரிமைகள் ஆணைக் குழு உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

(“முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: திலகர் எம்.பி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

‘எனது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது’

“என்னை முழங்காலிட நிர்ப்பந்தித்தமை தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு, கல்வியமைச்சர் பதவியை மீண்டும் வழங்கியமையானது எனது பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளது.” என பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானி தெரிவித்தார்.

(“‘எனது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது’” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: வடிவேல் சுரேஷ் எம்.பி கண்டனம்

பெண் என்றுக்கூட பார்க்காது பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை முழங்காலிட நிர்பந்தித்த ஊவா மாகாண முதல்வர், சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு மீண்டும் கல்வி அமைச்சு வழங்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த வடிவேல் சுரேஷ், வெளிநாடு சென்றிருக்கும் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி நாடு திரும்பியதும் அவரை நேரில் சந்தித்தது இது தொடர்பில் எடுத்துரைப்பேன் எனவும் தெரிவித்தார்.

(“முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: வடிவேல் சுரேஷ் எம்.பி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

நாங்கள் போகின்றோம்..!!

ஆம்..!! நாடோடிகளான நாங்கள் எங்களின் பூர்வீக இந்த மலை கிராமத்தைவிட்டு செல்கின்றோம்..!!

ஆமாம் “ஆசிபாவின் இறுதி சடங்குகள் உள்பட அனைத்தையும் தடை செய்துவிட்டது இந்த கிராமம்”

10 கி.மி. தூரம் சென்று அடக்கி வந்த பிறகு,அந்த ஊரின் தண்ணீர் போக்குவரத்தை பாசிச இந்த்துவம் பேச்சை கேட்டு நிறுத்திவிட்டார்கள் ஆளும் பெரும்பாண்மை இந்து சொந்தங்கள்..!!எங்களால் அந்த கிராமமும் சிரமம்படுகின்றது..!!

(“நாங்கள் போகின்றோம்..!!” தொடர்ந்து வாசிக்க…)

சிரியா மீது போர் விமானங்கள் குண்டுமழை; தாக்குதலில் இறங்கிய அமெரிக்க கூட்டுப்படை ராணுவம்: டிரம்ப் அதிரடி உத்தரவு

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும், அவரின் அரசு வைத்திருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவம் நேற்று இரவு முதல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனால் சிரியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ராணுவ விமானங்கள் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதனால் டமாஸ்கஸ் நகரமே ஒரே புகை மண்டலமாகவும், கட்டிடக் குவியல்களாகவும் காட்சி அளிக்கிறது.

(“சிரியா மீது போர் விமானங்கள் குண்டுமழை; தாக்குதலில் இறங்கிய அமெரிக்க கூட்டுப்படை ராணுவம்: டிரம்ப் அதிரடி உத்தரவு” தொடர்ந்து வாசிக்க…)

இன்று (ஏப்ரல் – 15) திருநங்கையர் தினம்: வாங்கப்பட்ட பாதை அல்ல; வழங்கப்பட்ட பாதை

கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. திருநங்கைகளை மேம்படுத்தும் வகையில் இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை, திருநங்கையர் நாள் எனக் கொண்டாட கடந்த 2011 மார்ச் 11-ல் அரசாணை பிறப்பிக்கப்பட் டது. திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைத்து அவர்களுக்கான நாள் கொண்டாடப்பட்டாலும், சமூகத்தில் இன்னும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.

(“இன்று (ஏப்ரல் – 15) திருநங்கையர் தினம்: வாங்கப்பட்ட பாதை அல்ல; வழங்கப்பட்ட பாதை” தொடர்ந்து வாசிக்க…)

“என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” – தேசிய விருது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

‘என்னுடைய அண்ணன் மணிரத்னத்துக்கு மீண்டும் நன்றி’ என்றும், ‘ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்’ என்றும் தேசிய விருது குறித்து மனம் திறந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

(““என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” – தேசிய விருது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் குத்தேரஸ் வேண்டுகோள்

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பொறுமை காக்க ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்தார். சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி போரில் ஈடுபடும் அபாயம் எழுந்துள்ளது.

(“அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் குத்தேரஸ் வேண்டுகோள்” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி

(கே. சஞ்சயன்)
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார். கூட்டமைப்பின் சார்பில் போட்டியில் நிறுத்தப்படாவிடின், விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி விடுவாரா, அல்லது வேறொரு கட்சி அல்லது கூட்டணியில் போட்டியில் குதிப்பாரா என்ற கேள்விகள் இருந்து கொண்டிருந்தன.

(“சுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க் கவி… சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்தவர்

மலையகத்தமிழர்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டது தேசப்பற்றினால் இல்லை சமூக அந்தஸ்திற்காய்… :- தமிழ்க் கவி

சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்த நீங்கள் இதைச்சொல்லக்கூடாது அன்ரி. நீங்கள் எதுக்காக இயக்கத்துக்கு போனீங்க என்று கொஞ்சம் பின்னுக்குச்சென்று பாருங்க.

உங்களைப்போல சோத்துக்காக இயக்கத்துக்கு போனவங்கள் இல்லை வன்னிப்போராளிகள். பிறந்தது முதல் சுதந்திரக்காற்றை சுவாசித்து அந்த சுதந்திரத்திற்காய் இறுதிவரை உறுதிகுன்றாது போராடியவர்கள்.

(“தமிழ்க் கவி… சோத்துக்காக இயக்கத்தை அண்டித்திரிந்தவர்” தொடர்ந்து வாசிக்க…)