ஐ.நா அறிக்கையை நிராகரித்தது மியான்மார் இராணுவம்

ரோகிஞ்சா முஸ்லிம்கள் மீது, மியான்மார் இராணுவத்தினால் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று ஐக்கிய நாடுகள் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை, மியான்மார் இராணுவம், இன்று (23) நிராகரித்துள்ளது.

(“ஐ.நா அறிக்கையை நிராகரித்தது மியான்மார் இராணுவம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்பை மறுக்குமாறு கோரிய ட்ரம்ப்

தனது பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து எந்தவித ஆதாரமுமில்லை என பொதுவெளியில் தெரிவிக்குமாறு, சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் இருவரை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இவ்வாண்டு மார்ச்சில் கோரியதாக, முன்னாள், இந்நாள் அதிகாரிகளை மேற்கோள்காட்டி, வொஷிங்டன் போஸ்ட், நேற்று (22) செய்தி வெளியிட்டுள்ளது.

(“பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்பை மறுக்குமாறு கோரிய ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 4)

(அருண் நடேசன்)

இப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, ‘சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்’, ‘எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?’ என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள்.

(“மே 18 (பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)

மலையகத்தையும்தாண்டி மலையக மக்களின் அவலம்

மலையக பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான தோட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகளின் அநேகம்பேர் கொழும்பில் ஏதோ ஒரு தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள், அதில் அதிகமானவர்கள், சிற்றுண்டி சாலைகளிலும், வியாபார நிலையங்களில் சிப்பந்திகளாகவும், யுவதிகளை பொறுத்தவரை “காமெண்டுகளிலும் கடமையாற்றுகிறார்கள், ஒரு தொழிலாளிக்கு உரிமையுள்ள எட்டு மணி நேர வேலை என்பது இவர்களுக்கு எப்போதும் பகல் கனவுதான், அடிப்படை சம்பளமும் அற்ற ஒரு நிலைதான், கொழும்பு நகரில் பெரும்பாலான வியாபார ஸ்தாபனங்களில் இவர்கள் இல்லாவிட்டால் அதோ கதிதான் காரணம் இவர்களின் உழைப்பு, முதலாளி விசுவாசம், நேர்மை, கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொள்வது.

(“மலையகத்தையும்தாண்டி மலையக மக்களின் அவலம்” தொடர்ந்து வாசிக்க…)

பொய்மை இருளில்

சகோதரப் படுகொலைகள் தொடர்பாகவோ அல்லது சகோதர சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவோ பேசப்படுவதை இற்றைவரை விரும்பாதவர்கள்,முகம் சுழிப்பவர்கள் பலர் தம்மை இற்றை வரை தம்மை மார்க்சியர்கள் என்றும் முற்போக்காளர்கள் என்றும் காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.
உண்மையில் இவர்கள் நவ பாசிச சாயல் கொண்டவர்கள்.
தேச- இன- குடாநாட்டு -வட்டார குழு அடையாளங்களுக்குள் தம்மை மூழ்கடித்தவர்கள் மார்க்சியர்களாகவோ முற்போக்காளர்களாகவோ சராசரி ஜனநாயக வாதிகளனாகவோ கருதமுடியாது.
இன்று ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் படுகொலை செய்யப்பட்ட தினம். (“பொய்மை இருளில்” தொடர்ந்து வாசிக்க…)

பிரிட்டன் மன்செஸ்டரில் பயங்கர குண்டு வெடிப்பு! 19 பேர் மரணம்! 50ற்கு அதிகமானோர் படு காயம்!

நேற்றிரவு பிரித்தானிய நேரம் சுமார் 10.30 மணியளவில் மன்செஸ்டர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்த இசை நிகழ்ச்சியொன்றில் பாரிய குண்டு வெடித்து, இச் செய்தி எழுதும் வரை 19 பேர் பலியாகியுள்ளனர். 50ற்கும் அதிகமானோர் படுகாயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர்.

(“பிரிட்டன் மன்செஸ்டரில் பயங்கர குண்டு வெடிப்பு! 19 பேர் மரணம்! 50ற்கு அதிகமானோர் படு காயம்!” தொடர்ந்து வாசிக்க…)

அமைதிபடையினை அவமானமாக திருப்பி அனுப்பியதன் பலனே முள்ளிவாய்க்காலில் உலகிற்கு தெரிந்தது.

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர்.
அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றாம் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று எதிர்பார்த்தேதான் இருந்தார்.

(“அமைதிபடையினை அவமானமாக திருப்பி அனுப்பியதன் பலனே முள்ளிவாய்க்காலில் உலகிற்கு தெரிந்தது.” தொடர்ந்து வாசிக்க…)

உதவி ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்டதாக சொல்லப்பட்ட ரூபா 10000 தொடர்ந்தும் வெறும் வாக்குறுதியாகவே உள்ளது – மக்கள் ஆசிரியர் சங்கம்

ஆசிரிய உதவியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 6,000 ரூபா கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அது உடனடியாக அமுலுக்கு வரும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டிருந்தார். எனவே, இம்மாதமேனும் தங்களின் மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கும் என எண்ணிய ஆசிரிய உதவியாளர்களுக்கு வழமை போலவே ஏமாற்றமே மிஞ்சியது. இம்மாதம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக நாங்கள் சில வலய கல்விக் காரியாலய கணக்காளர்களிடம் கேட்டபோது கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பாக தங்களுக்கு எந்தவித சுற்றறிக்கையும் வரவில்லை எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட 6,000 ரூபா கொடுப்பனவே இம்மாதமும் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

(“உதவி ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்டதாக சொல்லப்பட்ட ரூபா 10000 தொடர்ந்தும் வெறும் வாக்குறுதியாகவே உள்ளது – மக்கள் ஆசிரியர் சங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் மனோகணேசன்…சிவாஜிலிங்கம் காட்டம்

தேசிய சுகவாழ்வு, நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் பொதுபலசேனாவோடு தன்னை இணைத்து பேசியதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் அமைச்சர் மனோகணேசன் நாகரிகமான முறையில் பேசுவதற்கு பழகிகொள்ள வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் மனோகணேசன்…சிவாஜிலிங்கம் காட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 3)

(அருண் நடேசன்)

ஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது. இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது.

(“மே 18 (பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)