குமுதினி படகு படுகொலை 32 ஆண்டுகள்

இலங்கையில் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எண்ணிலடங்காத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த சம்பவங்கள் அனைத்தும், இன்று வரையிலும் தமிழ் மக்களின் ஆழ் மனதில் பதிந்துள்ள நிலையில், 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை சம்பவம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும்.

(“குமுதினி படகு படுகொலை 32 ஆண்டுகள்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சோமு: கரைத் தொடாமல் காற்றுடன் கலந்துவிட்ட கரைப் பொறுப்பாளனே!

(தோழர் ஜேம்ஸ்)
வெலிக்கடைப் படுகொலையில் எதிரி உன் உயிரை பறிக்க முடியவில்லை. பிணக் குவியலுக்குள் பிணம் போல் படுத்துறங்கி விழித்தெழுந்தவனே. 1983 வெலிக்கடைப் படுகொலையை சர்வதேசம் எங்கும் உன் பதிவு மூலம் பதிய வைத்தவன் நீ. ஈழவிடுதலைக்கான புரட்சிகர இலக்கியம் அருளரின் இலங்காராணிக்கு அடுத்ததாக உன்னுடைய வெலிக்கடைப் படுகொலை விபரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.

(“தோழர் சோமு: கரைத் தொடாமல் காற்றுடன் கலந்துவிட்ட கரைப் பொறுப்பாளனே!” தொடர்ந்து வாசிக்க…)

அடங்காத வட கொரியா நேற்றுமோர் ஏவுகணையை அனுப்பியது!

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது, ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனங்களுக்குச் செவி மடுக்காது, சீனாவின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காது, ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பலைகளைக் கவனத்திற் கொள்ளாது வட கொரியா நேற்று ஞாயிற்றுக் கிழமையும் ஓர் ஏவுகணையை வானில் செலுத்தியுள்ளது.

(“அடங்காத வட கொரியா நேற்றுமோர் ஏவுகணையை அனுப்பியது!” தொடர்ந்து வாசிக்க…)

“மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் வேண்டாம்

“மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் வேண்டாம் அல்லது மயானங்களை நவீனப்படுத்துங்கள்“ என்ற கோரிக்கையை முன்வைத்து 13.05.2017 இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தது. ஏராளமான பெண்களும் இளைய தலைமுறையினரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். பலரிடமும் இந்தப் பிரச்சினை தொடர்பான தெளிவான புரிதல் இருந்தது. புதிய சனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (New-Democratic Marxist-Leninist Party, NDMLP) யின் செயலாளர் சி. கா. செந்தில்வேல், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலர் சுகு ஸ்ரீதரன் ஆகியோர் உள்பட பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசினார்கள்.

(““மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் வேண்டாம்” தொடர்ந்து வாசிக்க…)

போரின் மடியில்

14.05.2009 போரின் போது முள்ளிவாய்க்காலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிச் செல்லும் போது புலிகளின் குண்டுத் தாக்குதலுக்கு பலியான எனது பெறாமகள் சர்மியா . முள்ளிவாய்க்காலிருந்து வட்டுவாகல் வந்து நீரேரியைக் கடக்க மரத்தின் கீழ் இருக்கும் போது புலிகளின் குண்டுகள் தப்பிச் செல்லும் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது.அப்போது இவளின் பின் மண்டையில் குண்டு பாய்ந்து மூளை சிதறி சாகடிக்கப்பட்டாள். உடலை அந்த இடத்திலேயே போட்டு விட்டு ஏனைய உயிர்களைக் காப்பாற்ற சில நிமிடங்களே தாய் மடியில் வைத்து அழுதுவிட்டு கடைசியாக தனது மகளை மரத்தினடியில் போட்டு விட்டு தப்பியோடி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை .அந்த நேரத்தில் பல உயிர்கள் சாகடிக்கப்பட்டு அப்படியே உடல்கள் ஆங்காங்கே கைவிடப்பட்டன. போர் தந்த சிறந்த பாடம் தமிழ் மக்களுக்கு .அவளின் நினைவு தினம் இன்று.

(Kala)

இலங்கையில் மோடியை வேவு பார்த்த மர்ம இளைஞர்…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த வாகன பேரணியில் யாருக்கும் தெரியாமல் தானும் கலந்து கொண்டு அவரைப் பின் தொடர்ந்து வேவு பார்த்தவரென நம்பப்படும் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நரேந்திர மோடியுடன் பயணித்த பிரபுக்களுக்கான பாதுகாப்பு பிரிவு மோட்டார் சைக்கிள்களுடன் தானும் இணைந்து சந்தேகத்திற்கிடமாக பயணித்த அந்த இளைஞர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அவரது பெயர் W.A.D. டில்ஷான் என்றும் தெரிய வருகிறது. அந்த மர்ம இளைஞர் இளைஞர் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 25 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசப்பிதா நடேசையரின் கனவு நனவாகிறது – மனோ கணேசன்

மலையகத்தில் சொந்த காணியுடன் கூடிய புதிய மலையக கிராமங்கள் உருவாக வேண்டும் என்று, 75 ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்டு, பிரசாரம் செய்து போராடிய, மலையக தேசப்பிதா நடேசையரின் தேசிய கனவு, இன்று படிபடியாக நிறைவேறி வருகிறது என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட சந்திப்பு குறித்து, வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“தேசப்பிதா நடேசையரின் கனவு நனவாகிறது – மனோ கணேசன்” தொடர்ந்து வாசிக்க…)

ஆனாரூனாவும் நல்லகண்ணுவின் காரும்!

(இளவேனில்)

தமிழ்,தமிழர் நலனோடு தம் வாழ்வைப் பிணைத்துக்கொண்ட நா.அருணாசலம், ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’, ‘தந்தை பெரியார் தமிழிசை மன்றம்’ உள்ளிட்ட அமைப்புகளை நிறுவியவர். தமிழிசை மன்றத்தின் சார்பாக ஆண்டுதோறும் மார்கழி இசை விழாக்களை நடத்தியவர். ‘நந்தன்’ இதழின் ஆசிரியராக இருந்தவர். இலங்கை தமிழர் விவகாரத்திலும் தமிழ்வழிக்கல்விக்காகவும் தொடர்ந்து பணியாற்றியவர். தமிழறிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஆதரித்த அருணாசலத்துக்கு இன்னொரு பெயர் இருந்தது. அதன் வாயிலாக அவரைத் தமிழகம் அறிந்திருதிருந்தது. ஆனாரூனா!

(“ஆனாரூனாவும் நல்லகண்ணுவின் காரும்!” தொடர்ந்து வாசிக்க…)

உண்மையான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இடதுசாரிய இயக்கங்களை பலப்படுத்த வேண்டும்- குமார் குணரத்தினம்

கடந்த மே 1ம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் இடம்டபெற்ற சர்வதேச தொழிலானர் தின கூட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் அமைப்பு செயலாளர் குமமர் குணரத்தினம் ஆற்றிய உரையின் சாரம்சம் இது. 131 வருடங்களுக்கு முன் உழைக்கும் மக்கள் 8 மணித்தியால வேலை நாள் கேட்டு போராடினார்கள். 131 வருடங்களுக்கு பின் இன்று 10,12 மணித்தியால வேலை செய்ய கேட்கின்றனர். இரண்டு மூன்று தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

(“உண்மையான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இடதுசாரிய இயக்கங்களை பலப்படுத்த வேண்டும்- குமார் குணரத்தினம்” தொடர்ந்து வாசிக்க…)

பலாலியை சிவில் விமான நிலையமாக மாற்ற வேண்டும்

பலாலி விமான நிலையத்தையும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் மிக விரைவில் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமையுங்கள். இதற்கான நடவடிக்கைகளை உடன் எடுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரியுள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றை வணிகர் கழகம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

(“பலாலியை சிவில் விமான நிலையமாக மாற்ற வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)