இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை!

(எஸ். ஹமீத்.)
கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது.
”என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள். அப்போது அவரால் என்னை மீண்டும் பார்க்க முடியும்!”
இந்த வேண்டுகோள் உலகின் இதயத்தை உலுக்கி விட்டிருந்தது. ஆனாலும் அவளது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது.

(“இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை!” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்

ஜனநாயக வழிப் போராட்டங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருப்பதால் பலருடைய வேலைகளையும் அது பாதிக்கிறது. பலரால் தொடர்ந்தும் அதில் இயங்க முடியவில்லை. குறைந்த பட்சம் அக்கறையாயும் இருக்க முடியவில்லை.

(“கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்

(பா.செயப்பிரகாசம்)

(இந்தியா பெரிய தேசம். பல அரசுகள். நிறையக் கலாசாரங்கள் இந்த உப கண்டத்தில். சில கலாசாரங்கள் விரும்பத்தக்கன, வேறு சில வெறுக்கத்தக்கன. காளை விளையாட்டைத் தமிழ் நாட்டில் தடுத்த நீதிமன்றம், ஏன் இங்கு சாதி வெறி விளையாட்டுகளைத் தடுக்கவில்லை? ஜல்லிக்கட்டு விவகாரம் இளம் சந்ததியைக் கொதிக்கச் செய்து மெரீனாவுக்கும் அழைத்துள்ளது. இந்த விவகாரம் இப்போது தீர்வைத் தேடி. தமிழின் சிறப்பான எழுத்தாளரும், இந்து மொழித் திணிப்பின் தலைமைப் போராளியாகவுமிருந்த பா. செயப்பிரகாசம் இந்த விவகாரம் மீது “காக்கைச் சிறகினிலே” எனும் காத்திரமான இதழில் மாசி மாதம் எழுதிய கட்டுரை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.)

(“வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்” தொடர்ந்து வாசிக்க…)

சீமானின் சாதியில்லா தமிழ் தேசியம்..

காவல்துறை அடக்குமுறைக்கு எதிரா நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் பேசியத இப்ப தான் பாத்தேன்.. பயங்கரமா ஹிப் ஹாப் தமிழா ஆதியவும் லாரன்ஸயும் மேடைல திட்டுறாரு.. கேட்டா ஆதி இஸ்லாமியர்கள தப்பா பேசிட்டாராம்.. அட எங்க எதுல தப்பா பேசுனார்னு கேட்டா எந்த டம்ளர்ஸ் கிட்டயும் பதில் இல்ல… கருணாஸ் அரசியலுக்கு வரும்போது வரவேத்த வாயி இன்னைக்கி லாரன்ஸ் வரேன்னு சொன்னா எதுக்குதுனா நீ எவ்ளோ பெரிய சாதி வெறியனா இருப்ப.

(“சீமானின் சாதியில்லா தமிழ் தேசியம்..” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கில் நாம் அறியவிரும்பாத மாற்றங்கள்…..

(இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களில் எமக்கு முழுமையான உடன்பாடு இல்லை. ஆனாலும் இன்று கிழக்கில் தமிழர் முஸ்லீங்கள் இடையேயான விரிசல்கள் எந்தளவிற்கு வளர்ச்சியடைந்து செல்கின்றது இது தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சகோதர உணர்வுகளும் உறவுகளும் ஏற்படுதப்படவேண்டும் என்பதற்காக இதனை பதிவு செய்கின்றோம் – ஆர்)

முப்பது வருட போர் முடிவடைந்து இத்துடன் சுமார் பத்து ஆண்டுகள் கழிந்த இவ்வேளையில் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மற்றைய இனத்தவர்கள் மிகவும் மும்மூரமாக ஈடுபடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  அங்கு தமிழர்களுக்கு எதிராக மிகவும் நூதனமான வேலைத்திட்டங்கள், மறைமுகமாகமாகவும், மற்றவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

(“கிழக்கில் நாம் அறியவிரும்பாத மாற்றங்கள்…..” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுர் கொலைகரர்களுக்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுகப்படவேண்டும்

அரியலூர் (திருச்சி) அருகே தலித் பெண் நந்தினியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து படுகொலை செய்திருக்கிறார் இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன். அத்துடன் நந்தினியின் பெண் உறுப்பை பிளேடால் அறுத்து 5 மாத சிசுவை வெளியே எடுத்து வீசிய கொடூரத்தையும் மணிகண்டன் செய்திருக்கிறார். அரியலூரை அடுத்த செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. தந்தையை இழந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த நந்தினி சித்தாள் வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

(“உள்ளுர் கொலைகரர்களுக்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுகப்படவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 99 )

யாழ் குடாநாடு வழமைக்குத் திரும்பியது.புலிகள் குடாநாட்டை விட்டு வன்னிக்கு தப்பி ஓடிவிட்டனர்.கிழக்கைச் சேர்ந்த பல புலிகள் எங்கும் போக முடியாமல் தடுமாறி ஒழித்து வாழ்ந்தனர்.இந்திய இராணுவ நடமாட்டம் அதிகரித்தது.பயப்படும்படியாக எதுவும் தெரியவில்லை.
அரச அலுவலகங்கள் வழமைபோல இயங்கத் தொடங்கின.சில நாட்களின் பின் யாழ்ப்பாண நகர தளபதி ஒரு அதிகாரிகள் மகாநாடு ஒன்றை ஒழுங்குபடுத்தினார்.இதற்கு பற்குணம் சென்றவேளை யாழ் நகர மையப்பகுதியில் புலிகள் கைக்குண்டு ஒன்றை வீசி தப்பி ஓடிவிட்டனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 99 )” தொடர்ந்து வாசிக்க…)

‘மஹிந்தவை நாடி நிற்கிறோம்’

“நிரந்தரத் தீர்வுக்கான பயணத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தொகுதி திறப்புவிழா, நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

(“‘மஹிந்தவை நாடி நிற்கிறோம்’” தொடர்ந்து வாசிக்க…)

2017 ஆம் ஆண்டின் சிறந்த மாகாண சபையாக மத்திய மாகாண சபை மலர வேண்டும்

இந்த 2017 ஆம் ஆண்டில் நாட்டின் தலை சிறந்த மாகாண சபையாக மத்திய மாகாண சபை மலர வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார் இம்மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். எம். உவைஸ். மத்திய மாகாண சபையின் இந்த ஆண்டின் கன்னி அமர்வு எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பம் ஆகின்றது. இந்நிலையிலேயே மேற்கண்டவாறு வாழ்த்தி உள்ள உவைஸ் இதற்காக இம்மாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து செயற்பட வேண்டும் என்று பகிரங்கமாக கோரி உள்ளார். கடந்த காலத்தை திரும்பி பார்க்கின்றபோது மக்களுக்கு இன்னமும் நாம் செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது என்றும் தெரிவித்த இவர் இதனால் இந்த வருடத்தை மக்கள் சேவைக்கான வருடமாக இம்மாகாண சபை உறுப்பினர்கள் பிரகடனப்படுத்த வேண்டும் என்றார். இதுவே வாக்களித்த மக்களுக்கு செலுத்துகின்ற நன்றி கடன் ஆகும் என்றும் கூறினார்.

முல்லைத்தீவு- கோப்பாபுலவு மக்கள்

தங்கள் காணிகளை ராணுவமும் வனவள துறையினரும் அபகரித்ததை கண்டித்தும் அதை விடுவிக்கவும் கோரி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முற்பட்ட வேளையில் அந்த மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர் இராணுவத்தினர் .
பின்னர் மின்சாரத்தை துண்டித்தனர் . எனினும் மக்கள் நடு ரோட்டில் விறகுகள் கொண்டு தீ மூட்டி அந்த வெளிச்சத்தில் இருந்து போராடினார்கள். இதை கண்ட இராணுவம் கைதட்டி சிரிச்சுதாம். ஆனால் காலையில் அயல் கிராம மக்கள் அங்கே குவிய தொடங்கி உள்ளார்கள். இந்த மக்களின் கோரிக்கை வெற்றியடைய அங்கே பக்கத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் அங்கே அவர்களுக்காக அவர்களுடன் இணையுங்கள். எங்களுக்கான குரலை நாங்களே எழுப்புவோம்!

(“முல்லைத்தீவு- கோப்பாபுலவு மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)