மாமிசம் மனித உணவா?

(இதை எழுதியவர் யார் என்று தெரியாது. ஓரளவு உண்மை போல தெரிகிறது. அந்த முகம் தெரியாத நபருக்கு நன்றி. நான் ஒன்றும் ‘சுத்த சைவம்’ கிடையாது. முடிந்த வரை சைவமாக இருக்க ஆசைப்படுபவன். அவ்வளவே. படியுங்கள், உங்கள் பகுத்தறிவு ஏற்றுக் கொண்டால் அதன்படி நடவுங்கள்.)

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?
இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.
அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

(“மாமிசம் மனித உணவா?” தொடர்ந்து வாசிக்க…)

மீனாட்சிபுரத்திலிருந்து புழல் சிறை வரை…

(ஷங்கர்ராமசுப்ரமணியன்)
ராம்குமாரை புழல் சிறை வரைக்கும் மரணம் தொடர்ந்து துரத்தியிருக்கிறது. ஒட்டுமொத்தச் சமூகமும் வேடிக்கை பார்க்க சுவாதியின் கொலை வழக்கு, அதற்குப் பின்னாலுள்ள எத்தனையோ ரகசிய முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதற்குச் சாத்தியப்படாமலேயே முடிந்துவிட்டது. 2012-ம் ஆண்டு வங்கிக் கொள்ளையர்கள் என்று சொல்லப்பட்டு, ஐந்து பிஹார் இளைஞர்கள் சென்னை வேளச்சேரியில் கொல்லப்பட்ட சம்பவம் உடனடியாக ஞாபகத்துக்கு வருகிறது. சம்பவம் நடந்து சில நாட்கள் தொடர்ந்த சலசலப்புகள், ஊடகச் செய்திகள் மற்றும் விவாதங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பொதுநினைவின் மறதியில் புதைந்துபோன பழங்கதை அது. இன்னும் எத்தனையோ என்கவுன்டர்கள் மற்றும் மர்மமான முறையில் நடந்த காவல் மரணங்கள் நமது ஞாபகத்தில் நிழலிடுகின்றன.

(“மீனாட்சிபுரத்திலிருந்து புழல் சிறை வரை…” தொடர்ந்து வாசிக்க…)

மார்க்ஸ் ஆவணப்படுத்தியது பொய்யா?

‘பணக்கார உலகுக்கான சூத்திரம் எது? சமத்துவம், சுதந்திரம், நீதி!’ எனும் கட்டுரையில், கார்ல் மார்க்ஸ் காலத்திலிருந்தே மனித இனத்தின் முன்னேற்றத்துக்கான உலகாயதமான காரணங்களையே நாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம் என்கிறார் தெய்ர்த்ரே என்.மெக்கிளாஸ்கி. அப்படியென்றால், மார்க்ஸ் காலத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள உழைப்புச் சுரண்டல்கள் யாவும் பொய்யானவையா?

(“மார்க்ஸ் ஆவணப்படுத்தியது பொய்யா?” தொடர்ந்து வாசிக்க…)

சகோதரிகளின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்கள்தெனிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய வீடமைப்புத்திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, மேற்படி மண்சரிவில் பாதிக்கப்பட்ட இரண்டு சகோதரிகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

(“சகோதரிகளின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

சிரியாவில் தொண்டு நிறுவன வாகனங்கள் மீது தாக்குதல்

சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் தொண்டு நிறுவனம் ஒன்றின் லாரிகள் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் டிரைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 12 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தியில், “போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக சிரியா ராணும் அறிவித்த சில மணி நேரத்தில், அலெப்போ நகருக்கு அருகில் உரும் அல்-குப்ரா பகுதியில் ரெட் கிரெஸென்ட் தொண்டு நிறுவன லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் லாரி டிரைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 12 பேர் உயிரிழந்தனர். சிரியா அல்லது ரஷ்ய போர் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதல் தொடர்பாக சிரியா அரசு தகவல் அளிக்க மறுத்துவிட்டது.

(“சிரியாவில் தொண்டு நிறுவன வாகனங்கள் மீது தாக்குதல்” தொடர்ந்து வாசிக்க…)

‘எழுக தமிழ்’ மூலம் யார் எழவேண்டும்?

(தெய்வீகன்)

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று அறைகூவி விட்டு பன்னிருநாள் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை அர்ப்பணித்த தியாகி திலீபனின் அறப்போராட்ட ஞாபகார்த்த காலப்பகுதியில் ‘எழுக தமிழ்’ என்ற மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு ‘தமிழ் மக்கள் பேரவை’ அழைப்பு விடுத்திருக்கிறது.

(“‘எழுக தமிழ்’ மூலம் யார் எழவேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

‘புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த செயற்படுகிறது’

‘அமெரிக்காவிலுள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு, நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது, நாட்டை அபிவிருத்திச் செய்வதற்கான செயற்பாடல்ல பலவீனப்படுத்தும் செயற்பாட்டாகும்.’ என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹம்மட் முஸமில் தெரிவித்தார்.

(“‘புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த செயற்படுகிறது’” தொடர்ந்து வாசிக்க…)

WADA தரவுக் கசிவுகள் ‘WADA-வின் பாசாங்கை வெளிப்படுத்துகின்றன’

ஊக்கமருந்துக்கெதிரான உலக முகவராண்மையின் (WADA) தரவுத்தளத்திலிருந்து, மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த ஹக்கினை, ரஷ்யர்களே மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்படுவதோடு, இதை நிறுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு, ரஷ்ய அரசாங்கத்திடம் WADA-இனால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

(“WADA தரவுக் கசிவுகள் ‘WADA-வின் பாசாங்கை வெளிப்படுத்துகின்றன’” தொடர்ந்து வாசிக்க…)

‘27,603 மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகினர்’

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில், 27,603 மாணவர்கள், இவ்வருடம், பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட இது 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு – யாழ்ப்பாணம்

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 18.09.2016 (ஞாயிறு) பி.ப. 3.30 மணியளவில் இல. 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர்கூடத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் திரு க. ஆனந்தகுமாரசுவாமி அவர்களுடைய தலைமையில் இடம்பெறவுள்ளது.

(“சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு – யாழ்ப்பாணம்” தொடர்ந்து வாசிக்க…)