என் மீது விமர்சனம் மட்டுமல்ல திட்டுகள் சேறுபூசல்கள் வசைபாடல் என வரிசைகட்டி வரும் என்ற பயம் இன்றி, என் மனதில் சரி என பட்டதை பதிவு செய்கிறேன். சினிமா ஒரு சாக்கடை என விமர்சித்த எழுத்து சித்தர் ஜெயகாந்தன் தானும் அதில் இறங்கியபோது வந்த விமர்சனத்துக்கு கூறிய விளக்கம் நான் சாக்கடையை சுத்தம் செய்ய வந்தேன் என்பதே. யாருக்காக அழுதான்? சிலநேரங்களில் சில மனிதர்கள்! ஒருநடிகை நாடகம் பார்க்கிறாள்! என தொடர்ந்த அவரின் சாக்கடை சுத்திகரிப்பு சாதித்தது என்ன? என்ற கேள்விக்கு ரஜனிகாந்தின் கபாலி வரை பதில் இல்லை. கூவம் ஆற்றை சுத்திகரிக்கும் செயலுக்கு ஆன்மீகவாதியான சத்திய சாயி பாபா, நாத்திகவாதியான கலைஞர் கருணாநிதி வீட்டு படியேறி கொடுத்த கோடான கோடி பணம் அதை சாதிக்காது, தன்னை கடந்து செல்லும் பயணிகள் தம் மூக்கை பொத்திக்கொள்ளும் நிலையில் இன்றும் நாறிக்கிடக்கிறது.
(“கறையான்களும்! கருநாகங்களும்?” தொடர்ந்து வாசிக்க…)