Contact us at: sooddram@gmail.com

தமிழ் கட்சிகளின் ஒன்றியம் உருவானது! ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஐக்கியப்பட வேண்டும்! வடக்கு வழமைக்கு திரும்புகின்றது! கிழக்கு அபிவிருத்தி பாதையில் முன்னேறுகின்றது! 'எம்மை அடக்கி ஆள நினைப்பவர்களுடன் சமரசத்திற்கு நாம் தயாராக இல்லை'

 

Sooddram.com

(ஆக்கங்களின் கருத்துக்களுக்கு ஆக்கங்களை ஆக்கியவர்களே பொறுப்பு)

தமிழர்களின் போராட்ட வாழ்வின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்வுகளை வாய்மை வழி நின்று பதியவே இந்த இணையத்தளம் - உண்மையான வரலாற்றைத் தேடுவோர்களுக்கு இது ஒரு களம்

*********************************************************

தேர்தல் முறமைக்கான அரசியலமைப்பு திருத்தம்  

அரசுக்கான ஆதரவு பாராளுமன்றத்தில் பெருகி வருகின்றது

(சாகரன்)

தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கான அரசியமைப்பு திருத்தம் முதன்மையாக இருக்கும் போது அதனைப் புறம் தள்ளிவிட்டு தேர்தல் முறமையில் கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கும் ஜனநாக சக்திகளுக்கும் நம்பிக்கையீனத்தை வலுப்படுத்தவே செய்கின்றது. சிங்கள கடும் கோட்பாளர்களை பரீட்சித்து பார்க்க முதலில் தேர்தல் முறமையில் மூன்றில் இரண்டை பரீட்சிப்பது பின்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் இதனை உபயோகித்தல் என்ற வகையில் மகிந்தாவின் தந்திரோபாயம் அமையுமாயின் இது வரவேற்கப்பட வேண்டியதே. எல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்க்கும் பலவீனமான நிலையில் தமிழ் மக்கள் தரப்பை புலிகள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று இருக்கின்றார்கள் என்பதே யதார்த்த நிலை. (மேலும்...)

புரட்டாதி 03, 2010

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திருமதி நிருபமா ராவ் உடன்

தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகள் பற்றி ஆராய்வு

இன்று காலை (செப்2)தமிழ் கட்சிகளின் அரங்கம்   இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திருமதி நிருபமா ராவ் அவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியது இந்திய உயர்ஸ்தானிகர் திரு அசோக் கே காந்தா, துணை ஸ்தானிகர் விக்ரம் மிஸ்றி அரசியல் செயலர் திரு அனுரக் ஸ்ரீவத்சவா ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்தனர். இச் சந்திப்பில் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்புச்செயலாளர் திரு ராஜ்குமார், பத்மநபா ஈபிஆர்எல்எப் இன் செயலாளர் ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் செயலாளர் சதானந்தன், ஒபர் புனர்வாழ்வமைப்பின் தலைவர் திரு.சந்திரஹாசன், திரு பேரின்பநாயகம் தமிழ் தேசியவிடுதலை முன்னணியின் தலைவர் திரு சிவாஜிலிங்கம், ஸ்ரீரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயராசா, திரு சுரேந்திரன், ஈழவர் விடுதலை முன்னணியின் தலைவர் பிரபாகரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் நல்லையா குருபரன் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர். (மேலும்...)

புரட்டாதி 03, 2010

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தெரிவு 

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 4-ஆவது தடவையாகவும் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியாகும் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி எம்.பி. (வயது 63) பதவி வகித்து வருகிறார். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. முதன் முதலாக கடந்த 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியாகாந்தி, அதன் பிறகு 2002 மற்றும் 2006ஆம் ஆண்டுகளிலும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (மேலும்...)

புரட்டாதி 03, 2010

Sri Lanka, China Form Strategic Shield against the West

On a steamy afternoon in the Sri Lankan capital, if you glance across the water at Colombo's legendary Galle Face Green seaside promenade, past the spray of the Indian Ocean, you can make out a milky line of giant cargo ships at the point where the sky blends with the sea. That ocean traffic on the horizon, those dashes of gray steel, glide along the world's busiest sea lane, navigated by anywhere from 100 to 200 ships every day. This is the maritime pipeline that makes it possible for China to remain the world's fastest-growing economy. It is also the visible explanation for China's generosity toward Sri Lanka and a centerpiece of this country's vision for the future. (more...)

புரட்டாதி 03, 2010

சோம்பல்

எதையாவது மிகவும் மதித்தால், அது நமக்குக் கைவரப்பட்டால், பல நன்மைகளும் லாபங்களும் அதனால் மகிழ்ச்சியும் நிச்சயம் உண்டு என்றால், அதைப் பெறுவதற்கு பெறு முயற்சி எடுப்போம். நமது வாழ்க்கை, நல்ல எதிர்காலம், மனத்திருப்தி, மனமகிழ்ச்சியைவிட மதிப்புக்கு உரியது என்ன இருக்க முடியும்? இவை நமக்குக் கிடைக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்துக் கட்டுவது மிக முக்கியமானது. ஆகவே, பெரு முயற்சி எடுத்து சோம்பல் விலங்கை உடைத்து வெளியே வருவோம். (மேலும்...)

புரட்டாதி 03, 2010

Please join us on the 138th Annual Toronto Labour Day Parade

Workers' Solidarity and Union Democracy Coalition is invited to participate in Toronto's Annual Labour Day Parade as part of the contingent organized by the Toronto Local of the Canadian Union of Postal Workers. Socialist Action, along with the Toronto Substitute Teachers' Action Caucus, plus several other labour and community groups, helped to found the Workers' Solidarity Coalition in the Fall of 2004. It is very important to show that rank and file activists are present on Labour Day.  It is important to demonstrate that we continue to fight for a pro-worker alternative to the employers' agenda.  It is important to emphasize that workers did not create the global economic crisis and that we refuse to pay for it. (more...)

புரட்டாதி 03, 2010

மிடுக்குடன் மீண்டெழுகிறது யாழ். உள்ளூர் பொருளாதாரம்

யாழ். குடா மக்களின் பொருளாதார நிலைமையானது கடந்த கால் நூற்றாண்டு காலமாக புலம்பெயர் மக்களின் உழைப்பிலேயே தங்கியிருந்ததெனலாம். இந்நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. உள்ளூர் உற்பத்திகளுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மக்கள் தங்களது சொந்த உழைப்பின் மூலமே பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதுவே நிலைத்திருக்கக் கூடிய ஜீவனோபாய முயற்சியுமாகும். (மேலும்...)

புரட்டாதி 03, 2010

ரமழான் மாதத்தின் கடைசி வெள் ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினம்

பலஸ்தீனையும் பைத்துல் முகத்தஸையும் மீட்கும் உயர் லட்சியக் கோட்பாட்டின் மீது கொண்ட பற்றுறுதியும் அர்ப்பணசிந்தையுமே ஸியோனிஸவாதிகளால் தமது தாய்நாடு ஆக்கிரமிக்கப்பட்ட நாள்தொட்டு இன்றுவரை பலஸ் தீனர்களின் வலிமைக்கும் இடைவிடாத போராட்டங்களுக்கும் உயிரூட்டி வளர்த்து வருகின்றது. இவ்வுயரிய லட்சியமே, பல்வேறு பிரிவுகளாக, பல்வேறு சித்தாந்த நோக்குகளைக் கொண்டிருந்த அனைத்து இயக்கங்களும் ஒரு சீரான இயக்கமாக அமைய இறுதியில் வழி வகுத்தது. (மேலும்...)

புரட்டாதி 03, 2010

ஆசிரியர்களும் சிறுவர்களாகி.....!

(ஜீவிதன்)

பொதுவாகவே பிள்ளைகள் கண்டிக்கப்படக்கூடாது. அன்புடன் அரவணைக்கப்பட வேண்டும். அதன்மூலமே சிறுவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பது ஆய்வறிவாளர்களின் கருத்து. மேல்நாடு என்றாலும் கீழ்நாடு என்றாலும் சிறுவர்கள் சிறுவர்கள் தான். எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் அன்பு செலுத்தப்படவேண்டும். தனி அறையில் வைத்துத் தனிமைப்படுத்துவதை விடுத்து அவர்களை சமூகமயப்படுத்தி வளர்க்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள். சிறுவர்களுக்கு மனதில் எந்த வலியும் ஏற்படுத்தாமல் அவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதுதான் சாலச் சிறந்தது என்பதே அவர்களின் அறிவுரை. இதனை கொழும்பில் உள்ள முக்கிய கல்லூரிகளின் அதிபர், ஆசிரியர்களும் நன்கு உணர்வார்கள். (மேலும்...)

புரட்டாதி 03, 2010

பாகிஸ்தானில் சீன இராணுவம் ?

சீனாவுக்கான பாகிஸ்தான் தூதுவர்  மறுப்பு

கில்கிட் பகுதியில் சீன இராணுவம் இருபதாக கூறப்படுவது கட்டுக்கதை. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உதவுவதற்காக சீன மீட்புக் குழு மட்டும் தான் பணியாற்றி வருகிறது’ என, சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் தெரிவித்து ள்ளார். கடந்த ஓகஸ்ட் 28ம் திகதி, ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்- பால்திஸ்தான் பகுதியில், சீனா தன் 11 ஆயிரம் படை வீரர்களைக் குவித்து வைத்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதி நிலவரம் குறித்து ஆராய்ந்து வருவதாக இந்தியா கூறியிருந்தது. (மேலும்...)

புரட்டாதி 03, 2010

வாக்களித்த மக்களின் மனதை புண்படுத்தும் எண்ணம் இல்லை

- வே. இராதாகிருஷ்ணன்

இராதாகிருஷ்ணன் எம்.பி. மலையக மக்கள் முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார் என  வெளியான செய்தி குறித்தே அவர் இந்த விளக்கத்தை அளித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கை தொழி லாளர் காங்கிரஸில் அதிருப்தியுற்ற நிலையில் இராதாகிருஷ்ணன் எம்.பி. மலையக மக்கள் முன்னணியில் இணையப் போவதாகத் தகவல் வெளியாகியது.  ஆனால் இறுதி நேரத்தில் அந்த முயற்சி தடைப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் அவரை ஓரங்கட்டியிருப்பதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.(மேலும்...)

புரட்டாதி 03, 2010

அமைச்சர் டக்ளஸ் சாட்சியம்

நல்லிணக்க ஆணைக் குழுவின் செப்டெம்பர் அமர்வு இன்று

கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் செப்டெம்பர் மாத அமர்வு இன்று (03) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. பாரம்பரிய கைத்தொழில், சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்றார். ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் கொழும்பு 7, ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெறும் விசாரணையில் இன்று மாலை 4 மணிக்கு எம். ஐ. எம். மொஹிதீன் சாட்சியமளிக்கின்றார். இதேவேளை எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் ஆணைக்குழுவின் விசாரணை கிளிநொச்சியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. பொதுமக்கள் சாட்சிய மளிப்பதற்கான ஏற்பாடுகளை கிளி நொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். மாவட் டச் செயலகத்திலும் பிரதேச செயலகங் களிலும் பொதுமக்கள் சாட்சியமளிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

புரட்டாதி 03, 2010

மறு குடியேற்றம் தொடர்பான பணிகள் திருப்தி: நிருபமா

மறு குடியேற்றம், மறுசீரமைப்பு, மறுவாழ்வுப் பணிகள் திருப்திகரமாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். இலங்கை சென்ற நிருபமா ராவ், வவுனியா, கிளி நொச்சி, யாழ்ப்பாணம், திரிகோணமலை, முல்லைத்தீவு ஆகிய தமிழர் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் இறுதியாக ஜனாதிபதி ராஜபக்சேவை சந்தித் துப் பேசினார். அப்போது மறுகுடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக அவர் ராஜபக்சேவிடம் தெரிவித்தார். (மேலும்...)

புரட்டாதி 02, 2010

கிழக்கு மாகாண காணிகளை வெளிமாவட்டத்தில் உள்ளோருக்கு வழங்கமுடியாது

தற்போது கிழக்க மாகாணத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மாகாணத்தின் காணிகள் கிழக்கு மாகாணம் அல்லாத வெளிமாவட்டத்தாருக்கு குத்தகை அடிப்படையிலும் வேறு பல முறைகளிலும் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது அதாவது 30வருட காலமாக யுத்தத்தில் சிக்கி கிடந்த கிழக்கு மாகாணம் தற்போது யுத்தநிலை நீங்கியபின்னர் அபிவிருத்தி கண்டு வருகின்றது. இவ் அபிவிருத்தியின் பங்காளிகளாகா கிழக்கு மாகாணத்தில் வசிக்கம் மூவின மக்களுமே இருக்க வேண்டும். (மேலும்....)

புரட்டாதி 02, 2010

மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம்

இன்றைய முக்கிய தேவையாக இருக்கின்ற இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், வீட்டுப்பிரச்சினைகள், வேலைவாய்ப்பு சம்பந்தமமான பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. அதே வேளை இந்தியா வழங்கவுள்ள 50ஆயிரம் வீடுகள் பற்றியும் ஆராயப்பட்டது. முக்கியமாக திருமலை மாவட்டத்தின் மூதூர், சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பேசுகையில், அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அண்மையிலேயே குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.
எல்லோரும் அரத்த மாவையே திரும்ப அரைக்கின்றனர். ஆனால் தமக்கிடையேயான ஈகோ காரணமாக தனித்தனியே சந்தித்து தனித்தனியாக அரைக்கின்றனர் என்று அரசியல் அவதானிகள் நிருபமாவுடனான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்புகள் பற்றி கருத்து தெரிவிக்கின்றனர். (மேலும்....)

புரட்டாதி 02, 2010

Lankan army to return lands of Tamils of Indian origin: Nirupama Rao

Sri Lanka has assured New Delhi that its army will return the land of the displaced Tamils of Indian origin in the country's northern Vavuniya district, foreign secretary Nirupama Rao said today. Rao, who ended her three-day trip to Sri Lanka today, said she had taken up the issue with the top leadership in the country. "They are basically IDPs of Indian origin who had been resettled in Vavuniya area after 1977 riots. They had been cultivating their lands there and now after the war they had been shifted to the Menik farm IDP camp,” the foreign secretary said. There are today two groups of Tamils in Sri Lanka. The first are the Sri Lankan Tamils, who either descend from the Tamils of the old Jaffna kingdom or who migrated to the East coast. Unlike Sri Lankan Tamils who were born here, the Tamils of Indian origin were brought to the country by the Britishers to work on the coffee, tea and rubber plantations in the late 19th century. (more...)

புரட்டாதி 02, 2010

கண்கள் குளமாகும்...

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு எந்த வகையிலும் குறையாத அளவிலேயே எமது மலையக குழந்தைகள் ‘வேலைக்காரப் பிள்ளைகள்’ என்று வேலைக்கு அமர்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர், படுகின்றனர். அவர்களின் வறுமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த கொடுமைகள் இலங்கையிலும் நடைபெறுகின்றன. இதன் அடிப்படையிலேயும் இக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. – சாகரன்

குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பெற்றோரின் கடனுக்காக கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இந்த குழந் தைகள் தினசரி சுமார் 11 மணிநேரத்திற்கு குறை யாமல் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். 6வயது குழந்தை கூட இக்கொடு மையில் இருந்து தப்பவில்லை. இதற்கான காரணங்கள் பல. மேலே சுட்டிக் காட்டிய பள்ளிக் கூடத்தில் காட்டப்படும் சாதிய பாகுபாடு ஒரு காரணம். இன்னொரு காரணம் குடும்பத்தா ரின் வறுமையும், கடன் சுமையும் ஆகும். (மேலும்....)

 

புரட்டாதி 02, 2010

எமது சுகாதார நலன்களுகேற்ப விதைகளை நாம் உற்பத்தி செய்யவேண்டும்.

விவசாயத்தில் தன்னிறைவு காணும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும்

- ஜனாதிபதி

 

தன்னிறைவு காணும் பொருளாதாரம் எமக்கு மிகவும் அவசியம். எமக்குப் பல்வேறு தடைகள் உள்ளன. அரச நிறு வனங்கள் தொடர்பில் பல்வேறு கண்ணோ ட்டங்கள் நிலவுகின்றன. எனினும் நாம் எமது விவசாய உற்பத்தியில் கூடிய அவதானம் செலுத்தவேண்யுள்ளது. எமக்கான பயிர் விதைகளை நாமே உற்பத்தி செய்யும் நிலை உருவாக வேண்டும். தனியார் துறையினரால் மட்டுமே முடியும், எம்மிடம் நிதி இல்லை என நாம் எந்நாளும் கூறிக் கொண்டிருக்க முடியாது. யுத்தம் செய்வதற்கும் நிதி இல்லை யென்றே ஒரு காலத்தில் காரணம் கூறப்பட்டது. ஆனால் புலிகளுக்கும் திறைசேரியிலிருந்து நிதி வழங்கியதையும் குறிப்பிடவேண்டும். எமது சுகாதார நலன்களுகேற்ப விதைகளை நாம் உற்பத்தி செய்யவேண்டும். “அதிக விளைச்சல் பெரும் இலாபம்” என்ற நோக்கில் நாம் விசமூட்டப்பட்ட விதைகளை உபயோகிப்பது நிறுத்தப்பட வேண்டும். (மேலும்....)

 

புரட்டாதி 02, 2010

 

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புட்டின்

ரஷ்யாவில் 2012ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புட்டின் தெரிவித்தார். பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் மீண்டும் ஜனாதிபதியாக தான் விரும்புவதாகக் கூறினார். 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாக கடமையாற்றினார். அந்நாட்டு அரசியலமைப்பின்படி தொடர்ச்சியாக இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது. இடையில் சேவைக்காலம் உடைக்கப்பட்ட பின்னரே மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும். இதனால் 2008ல் நடந்த தேர்தலில் மெத்விடிவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் ஜனாதிபதிக்கான பதவிக் காலத்தை நான்கு ஆண்டுகளிலிருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டுமாறு மெத்டிவைக் கோரினார். இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக முடியாதென்ற சட்டத்தையும் இல்லாமல் செய்யப்பட்டது. இதனால் 2012 தேர்தலில் போட்டியிட புட்டின் எண்ணியுள்ளார்.

புரட்டாதி 02, 2010

 

வடபிரதேச மக்களின் உண்மையான பிரதிநிதிகள்

ஒப்பீட்டளவில் வடபகுதி இன்று மிகவும் பின்தங் கிய நிலையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அபிவிருத்தியில் பின்னடைவு. இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்தில் பின்னடைவு. நிர்வாகக் கட்டமைப்பிலும் பின்னடைவு. அண்மைக்கால யுத்தமே இந்த நிலைக்குக் காரணம் என்று பொதுவாகக் கூறப்படுகின்றபோதிலும் இப்பிரதேசத்திலி ருந்து காலத்துக்குக் காலம் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளின் தூர நோக்கற்ற செயற்பாடுகளே பிரதான காரணம். (மேலும்....)

 

புரட்டாதி 02, 2010

 

தென்னாபிரிக்காவில் வேலைநிறுத்தம் இயல்புநிலை பெரிதும் பாதிப்பு

தென்னாபிரிக்காவில் தொடரும் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அந்நாட்டின் ஜனாதிபதி ஜகோப்சுயுமா வேண்டிக்கொண்டதற்கிணங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. அரசாங்கத்துக்கும், தொழிலாளர் யூனியனுக்குமிடையே இப் பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம் நடந்தன. தொழிலாளர்களின் ஊதியத்தை ஒருவீதத்தால் அதிகரிப்பதென்றும் வீட்டுத் திட்டத்துக்கான மாதாந்த நன்கொடைகளை உயர்த்துவதென்றும் பேச்சுவார்த்தையின் போது முடிவுசெய்யப்பட்டது. (மேலும்....)

 

புரட்டாதி 02, 2010

தலைமைப் பொறுப்பை ஏற்க

இ.தொ.கா. எம்.பி. இராதாகிருஷ்ணன் ம.ம. முன்னணியில் இணைவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுள் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியில் இணைவது உறுதியாகியுள்ளது. முன்னணியில் இணைந்து தலைமைத் துவத்தை ஏற்பதற்கு அவர் ஏற்கனவே மேற்கொண்ட முயற்சி தடைப்பட்ட போதிலும், தற்போது மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் வெகு விரைவில் மலையக மக்கள் முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக மலையகத்தின் நம்பகரமான அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. (மேலும்....)

 

புரட்டாதி 02, 2010

முகாம்களில் உள்ளோரின் மீள்குடியமர்வு நிறைவு

உறவினருடன் வசிப்போருக்கு அவசர அழைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த பெருமளவானோர் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாகவும், எஞ்சியவர்களை அடுத்த வாரமளவில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். முகாம்களில் இன்னமும் 730 குடும்பங்கள் மட்டுமே மீளக்குடியமர எஞ்சியுள்ளன. இந்தக் குடும்பங்களும் அடுத்த வாரமளவில் சொந்த இடங்களுக்குத் திரும்பிவிடுவர். இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 659 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் துரிதமான மீள்குடியேற்ற நடவடிக்கை காரணமாக யாழ். மாவட்டத்தில் 58 அகதிகளே மீள்குடியமர்த்த எஞ்சியுள்ளதாக வும், அவர்கள் ஒரு வாரத்திற்குள் மீள்குடியமர்த்தப்படுவர்

(மேலும்....)

 

புரட்டாதி 02, 2010

அமெரிக்கா, ஆப்கான் மக்களுக்கு நன்மை தராத யுத்தத்தைத் தொடர்வதில் அர்த்தமில்லை

ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறும் என்ற தனது அறிவிப்பை மீளவும் உறுதி செய்த ஜனாதிபதி களநிலவரங்களைப் பொறுத்து படை விலகல் நடவடிக்கைகள் அமையுமென்றும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப்படைகள் 2011 ஓகஸ்ட் மாதத்திலிருந்து லிலக்கிக் கொள்ளப்படுமென முன்னர் ஒபாமா கூறினார். இவ்வாறு படைகளை விலக்கிக் கொள்வது தலிபான்களைப் பலப்படுத்தும் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கார்ஸாயி உட்படப் பலர் நிலைமைகளை விளக்கிக் கூறினர். இது தவிர தலிபான்களின் தாக்குதல்கள் அண்மைக் காலமாக குறைந்த பாடில்லை. இதனால் தனது படை விலக்கல் திட்டம் அன்றைய நிலைமைகளைப் பொறுத்து அமையும் எனத் தெரிவித்தார். எனினும் எவ்வாறாயினும் படைகளை விலக்கிக் கொள்ளவே ஒபாமா விரும்புவதை அவரது அறிக்கைகள் காட்டுகின்றன. (மேலும்....)

 

புரட்டாதி 02, 2010

 

எரியூட்டப்பட்ட நிலையில் புலம்பெயர் தமிழரின் உழைப்பு...?

கரியமுள்ளிவாய்க்கா லில் புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டன

கரியமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நேற்று இலங்கை விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட சில விமான உதிரிப்பாகங்களை மீட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். கொள்கலன் ஒன்றினுள் விமான உதரிரிப்பாகங்கள் இடப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையிலேயே அவை மீட்கப்பட்டுள்ளன. முன்னாள் புலி உறுப்பினர்கள் வழிகாட்டியதையடுத்தே விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்று உதிரிப்பாக ங்களை மீட்டுள்ளனர். (மேலும்....)

 

புரட்டாதி 02, 2010

வடபகுதியில் உயிர் இரசாயனத்துறை ஆராய்ச்சி கடந்த காலத்தில் அபாரவெற்றி

வட மாகாணத்தில் மூன்று தசாப்த காலமாக யுத்தமும் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற போதிலும் உயிர் இரசாயனவியல் துறை தொடர்பான ஆராய்ச்சி தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக உயிர் இரசாயனவியல்துறை பேராசிரியரான பொன்னுச்சாமி நவரட்ணம் தெரிவித்தார். “சாவகச்சேரி, அல்லாரையில் பனங்கள்ளை பியராக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டோம். கண்டாவளையில் பதநீரை போத்தலில் அடைக்கும் முயற்சியில் வெற்றி கிட்டியது. யாழ்ப்பாணம் திராட்சையில் இருந்து தரமான ‘வைன்’ தயாரிக்க முடிந்தது. இவையெல் லாம் உயிர் இரசாயனவியல் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கிடைத்த வெற்றிகளாகும்” எனவும் பேராசிரியர் பொன்னுச்சாமி நவரட்ணம் விபரித்தார். (மேலும்....)

 

புரட்டாதி 01, 2010

 

உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தமிழ்க்கட்சிகளுடனும் பேச்சு

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்திற்கோ மக்களின் இறைமைக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாது. எதிர்க் கட்சி மற்றும் ஐ.ம.சு.மு. வில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதற்கு ஐ.தே.க. தனது ஆதரவை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். அரசியலமைப்பில் கட்டமைப்பு ரீதியான திருத்தங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர்கள் கூறினர். (மேலும்...)

புரட்டாதி 01, 2010

அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் மாற்றம்
அரசியலமைப்பு சபைக்கு பதிலாக பாராளுமன்ற சபை

சகல இனங்களும் பிரதிநிதித்துவ மாகும் வகையில் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கும் உறுப்பினர்களை நீக்கும் வகையிலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் காலத்திலும் பாராளுமன்ற சபை இயங்கும் வகையிலும் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபையொன்றை அமைக்கும் வகையில் அரசியலமைப்பில் 41 (அ) என புதிதாக ஒரு ஷரத்து சேர்க்கப்பட வுள்ளது. (மேலும்...)

புரட்டாதி 01, 2010

சுமார் 2 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மனிக்பாம் முகாமில் இப்போது 28 ஆயிரம் பேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கின்றார்கள். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் அவர்களது அழிந்த வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும், வடபகுதியின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் இந்திய அரசாங்கம் உதவி செய்வதற்கு முன்வந்துள்ளது. இந்தியா உறுதியளித்துள்ள 50 ஆயிரம் வீடுகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் முன்னோடித் திட்டமாக வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி வீட்டு வடிவத்தை இலங்கை அராசங்கத்துடன் இணைந்து இந்தியா முடிவுசெய்துள்ளது. இதேவேளைஇ மதவாச்சியில் இருந்து மன்னார் வரையிலான ரயில் பாதையையும்இ ஓமந்தையில் இருந்து பளை வரையிலான ரயில் பாதையையும் அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது. (மேலும்...)

புரட்டாதி 01, 2010

ஜனாதிபதியின் பதவிக் காலம்

இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிப்பதற்குத் தடையாக உள்ள சரத்தை நீக்குவதை எதிர்ப்பதற்கு அறிவார்ந்த காரணம் எதையும் கூற முடியாது. இரண்டு தடவைகள் மாத்திரம் எனக் கட்டுப்பாடு விதிப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மறுதலிப்பதற்குச் சமன். ஒருவரை ஒரு தடவை தெரிவு செய்வதோ அல்லது தொடர்ந்து சில தடவைகள் தெரிவு செய்வதோ மக்களுக்கு உள்ள அடிப்படை ஜனநாயக உரிமை. இத்தனை தடவைகள் மாத்திரம் பதவி வகிக்கலாம் எனக் கட்டுப்பாடு விதிப்பது மக்களின் அந்த உரிமைக்கு விலங்கு போடுவதாகிவிடும். ஒருவர் எத்தனை தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்பதை மக்களிடம் விட்டுவிடுவதே உண்மையான ஜனநாயகம். மக்கள் தங்கள் முடிவைத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள். (மேலும்...)

புரட்டாதி 01, 2010

மண்பானைக் குடிநீர்

ல்வேறு பானைகளில் இருக்கும் நீரைத்தான் நாம் குடிக்க பயன்படுத்துறோம். ஆனால், அது பாதுகாப்பானதா என்று நாம் சோதனை செய்வதில்லை. எந்த பாத்திரத்தில் உள்ள குடிநீர் நல்லது என்று ஹைதராபாத்தில் இருக்கும் தேசிய ஊட்ட உணவுக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டது. இதற்காக அவர்கள் அலுமினியம், எஃகு, மண்பானை பாத்திரங்களை ஆய்வுக்கு எடுத்தனர். மூன்று பானைகளிலும் நீரை நிரப்பினர். முதல் மூன்று மணி நேரம் வரை, மூன்று பானைகளிலும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. நீரில் உள்ள நுண்ணிய துகள்கள் அடியில் தங்குவதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர். ஆனால் அதற்குப் பிறகு எஃகு மற்றும் அலுமினியப் பானைகளில் உள்ள நீரில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகியபடி இருந்தது. மண்பானையில் உள்ள நீரில் மட்டும் பாக்டீரியாவின் அளவு குறைவாக இருந்தது. பக்டீரியாக்களை களிமண் உறிஞ்சிக் கொள்வது தான் இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்தனர். எனவே மண்பானைத் தண்ணீர் தான் குடிக்க பாதுகாப்பானது என்று அறிவித்தனர்.

புரட்டாதி 01, 2010

முப்பதாவது நினைவுதினம் இன்று அனுஷ்டிப்பு

காலத்தால் அழியாத தமிழறிஞர் தவத்திரு தனிநாயகம் அடிகளார்

ழத்தில் தமிழ் மொழியை உண்மையாக வளர்த்தவர் களின் பெருமைகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்பவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ளவேண்டியது மிக முக்கியமானதொன்றாகும். இருக்கும் போது பெரியவர்களின் பெருமைகளை பாராட்டாமல் விட்டுவிட்டு அவர்கள் இல்லாத போது அவர்களின் இழப்புக்கள் உணரப்படும் சமுதாயமாக ஈழத்துச் சமுதாயம் உள்ளமை யாரும் மறுக்க முடியாத ஒரு உண்மையே. தமிழர்கள் என்றால் யார்? அவர்கள் எவ்வாறு தமிழர்கள் எனப்படுகின்றனர். தமிழ் மொழியின் சீரியங்கள் என்ன என்பவை குறித்து எப்போதோ வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. பல ஈழத்துபெரியவர்களும் இதைச் சர்வதேச ரீதியில் கொண்டுசென்று மற்ற மொழிக்காரர்களுக்கும் தமிழ் மொழியினை பற்றி ஆராய்ச்சிகளை சமர்ப்பித்து புரியவைத்து, ஏனைய மொழி அறிஞர்கள் தமிழ் மொழி, தமிழர்கள் ஆகிய விடயங்கள் பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு தமிழ் மொழியின் சீர்மைகளை தொகுத்து தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளனர். (மேலும்...)

புரட்டாதி 01, 2010

வட பகுதி மக்கள் தென் பகுதிக்கு சுற்றுலா

தென் பகுதியிலிருந்து வட பகுதிக்கு மக்கள் தற்போது சுற்றுலாப் பயணம் மேற்கொள்வது போல் வட பகுதியைச் சேர்ந்தோரும் தென் பகுதிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வட பகுதியைச் சேர்ந்த பல பாட சாலைகளின் மாணவ, மாணவிகள் கல் விச் சுற்றுலாவை மேற்கொண்டு கொழும்பு உட்பட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு புறக்கோட்டையில் பொருட்கள் கொள்முதல் செய்வதையும் காணக் கூடியதாக உள்ளது. அண்மையில் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்ட சாவகச்சேரி மட்டுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், விகார மகாதேவி பூங்கா உட்பட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர்.

ஆவணி, 31, 2010

கனடா நோக்கி மேலும் ஒரு கப்பல் பயணம்

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நோக்கில் மேலும் ஒரு கப்பல் தாய்லாந்தில் இருந்து கனடா நோக்கி பயணிக்க இருப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது. 'கிளோப் அன்ட் மெயில்"என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், அந்த கப்பலில் பயணிக்க இருப்பவர்களின் பெரும் பாலானோர் இலங்கை தமிழர்கள் எனவும் தெரிவித்துள்ளது. தாய்லாந்திற்கான இரண்டு வார கால சுற்றுலா வீஸா பெற்று பாக்கோக் வரும் இலங்கையர்கள், பின்னர் அங்கிருந்து கனடா நோக்கி, சட்ட வீரோத ஆட் கடத்தல் படகு மூலம் செல்வதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்...)

ஆவணி, 31, 2010

சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 8ஆம் திகதி

உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேற்படி திருத்தச் சட்ட மூலத்திற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதோடு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய யாப்பு திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதியொருவர் இரு தடவைக்கு மேல் பதவிவகிக்க முடியாது என்ற சரத்து நீக்கப்பட்டு வரையறையின்றி எத்தனை தடவையும் போட்டியிட முடியும் என திருத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயம் பாராளு மன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் யாப்பு திருத் தப்படவுள்ளதோடு அரசியல மைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். (மேலும்...)

ஆவணி, 31, 2010

வடமாகாண விவசாய அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்

வட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால் நடைகள், மீன்பிடி மற்றும் காணி அமைச்சும், அதன் கீழுள்ள சகல திணைக் களங்களும் நாளை (1) முதல் கிளிநொச்சி நகருக்கு இடமாற்றப்படுகின்றது. இதற்கமைய நாளை புதன்கிழமை தொடக்கம் குறித்த அமைச்சும் அதன் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களும் கிளிநொச்சியிலிருந்து செயற்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். (மேலும்...)

ஆவணி, 31, 2010

பெண்ணின் உடலில் ஆணி செலுத்திய சவூதி தம்பதியர் கைது

இலங்கைப் பணிப் பெண்ணான ஆரியவதியின் உடலில் ஆணி செலுத்தி துன்புறுத்திய தம்பதியர், சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைப் பணிப்பெண் மீது 24 ஆணிகளை அடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டு, மேற்படி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் பணி புரிந்த வீட்டுச் சொந்தக்காரரான 35 வயது ஆணையும் 29 வயதான அவரது மனைவியையுமே இவ்வாறு சவூதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 28ம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண்மணிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பெண் வாக்குமூலம் அளிப்பதற்காக சவூதி அரேபியா செல்வார் எனவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித் துள்ளது.

ஆவணி, 31, 2010

ஒரு புறத்தில் சீனத் தூதுக்குழு மறுபுறத்தில் இந்திய தூதுக்குழு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அடங்களான உயர் மட்டக் குழுவினர் இன்று வட பகுதிக்கு விஜயம் செய்து, அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட உள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் அடங்களாக குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர். நிருபமா ராவ் இன்று வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறார். மெனிக்பாம் முகாமிற்கு சென்று இடம்பெயர்ந்த மக்களின் நலன்குறித்து நேரில் பார்வையிட உள்ள அவர், பின்னர் மகிழங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அவதானிக்க உள்ளார். யாழ், கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கும் செல்ல உள்ள அவர் அப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அபி விருத்திப் பணிகளையும் பார்வையிடுவார். நாளை திருகோணமலைக்குச் செல்ல உள்ள நிருபமா ராவ் நாளை மறுதினம் ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திப்பார்.

ஆவணி, 31, 2010

சீனாவின் 200 பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் கின் குவான்ரொங்க் தலைமையில் இரு நூறு பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இன்று 31ம் திகதி இலங்கைக்கு வருகை தருகின்றது. கொழும்பில் நடைபெறவி ருக்கும் வர்த்தகக் கண்காட்சியில் பங்குபற்றுவ தற்காக வருகை தருகின்ற இக்குழுவினர் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுடன் நாளை முதலாம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர். இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான நற்புறவை மேலும் மேம்படுத்தல் மற்றும் பொரு ளாதார, அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவிருப்பதாக பிரதமர் அலுவலக அதிகாரியொருவர் கூறினார். இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இலங்கைக்குப் பெரிதும் பயனளிக்கக் கூடிய நான்கு புரிந்துணர்வு உடன்படிக் கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. மின்சக்தி, எரிசக்தி, உயர் கல்வி, விவ சாயம், தொலைத் தொடர்பு சேவை ஆகிய துறைகள் தொடர்பாகவே இப்புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆவணி, 31, 2010

அமெரிக்கப்படைகளின் வெளியேற்றம் தலிபான்களைப் பலப்படுத்தும்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ளும் பராக் ஒபாமாவின் தீர்மானத்தால் தலிபான்கள் புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி தெரிவித்தார். அமெ ரிக்க அதிகாரிகளை காபூலில் சந்தித்த வேளை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இதைக் கவலையுடன் கூறினார். 2011ம் ஆண்டு ஜுலை மாதமளவில் ஆப்கானிஸ் தானிலுள்ள அமெரிக்கப்படைகளை வாபஸ்பெற ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இந்த ஒன்பதாண்டு யுத்தத்தில் இலட்சியம் எதுவும் நிறைவேறவில்லை. தலிபான்களின் உறைவிடமாகவும் புகலிடமாகவும் அயல் நாடுகள் உள்ளன. அவர்களின் வன்முறைகள் தொடர்வதால் பொதுமக்களை நாளாந்தம் இழந்து வருகின்றோம். (மேலும்...)

ஆவணி, 31, 2010

இது நிஜம், திகிலூட்டும் திரைப்படம் அல்ல

சுரங்கத்துக்குள் அகப்பட்டோரை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்

சிலியின் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளோருடன் உறவினர்கள் பேச வானொலிக்கருவிகள் செலுத்தப்படுவதைக் காணலாம்.

சிலியில் சுரங்கத்துக்குள் மாட்டிக் கொண்டோருடன் உறவினர்கள் வானொலிக் கருவி மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். மனைவிமார், குழந்தைகள், உறவினர்கள் எனப் பெருந்தொகையானோர் சுரங்கத்துக்குக்குள் அகப்பட்டோருடன் பேசுவதற்கு முண்டியடித்துக் கொண்டனர். 24 நாட்களாக 33 சுரங்க தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் மாட்டியுள்ளனர். இவர்களை வெளியே மீட்டெடுக்க நான்கு மாதங்கள் தேவைப்படுமென முன்னர் கூறப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இவர்களை வெளியே கொண்டுவர முயற்சிகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன. எழுநூறு மீற்றர் ஆழத்தில் இவர்கள் உள்ளனர். நவீன கருவிகள் மூலம் சுரங்கப் பாதையைத் தோண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. துளைகளுடாக கொக் கப்பட்ட வானொலிக் கருவிகளை கொண்டு இவர்கள் சுரங்கத்திற்குள்ளோரிடம் பேசினர். (மேலும்...)

ஆவணி, 31, 2010

வீட்டுப் பணிப்பெண்களுக்கு பாதுகாப்பும் காப்புறுதியும்

வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்றிருக்கும் இலங்கைப் பெண்களின் பாதுகாப்பையும் அவர்கள் மனிதாபி மான முறையில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத் தும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. அவர்கள் மூலம் இலங்கைக்கு அந்நியச் செலாவணி கிடைக் கின்றது என்பதனால் மாத்திரமன்றி, அவர்கள் இலங் கைப் பிரசைகள் என்பதனாலும் அரசாங்கத்துக்கு இக்கடப்பாடு உண்டு. வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களை அனுப்பும் முகவர் நிலையங்கள் வலுவான சட்டக் கட்டுப் பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம். பணிபுரியும் நாடுகளில் இப் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அதே போல காப்புறுதியும் வேண்டும். இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்தது.(மேலும்...)

ஆவணி, 31, 2010

தர்மபுரி பஸ் எரிப்பு

மூவருக்கு இன்று தூக்குத்தண்டனை உறுதி

2000ஆம் ஆண்டில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பஸ் ஒன்றை, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து எரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு இன்று தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆந் திகதி கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்வருமான ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து நீதிமன்றில் தீர்ப்பு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் ஓரங்கமாகவே இந்த பஸ் எரிப்பும் நிகழ்ந்தது. பஸ் எரிப்பில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். (மேலும்...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of theL.T.T.E’smost potent weapons. Friendship with theL.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

,yq;ifapd; 7 tJ ghuhSkd;wj; Nju;jy;! elf;Fk; vd;whu; ele;J tpl;lJ! elf;fhJ vd;whu; ,dp ele;JtpLkh?

(rhfud;)

nty;yg;NghtJ ahu;…..? ghuhSkd;wj; Nju;jy; 2010

(rhfud;)

ghuhSkd;wj; Nju;jy; 2010

Nju;jy; tpQ;Qhgdk;  - gj;kehgh <okf;fs; Gul;rpfu tpLjiy Kd;dzp

1990 Kjy; 2009 tiu ml;ilfspd; (Gypfspd;) Ml;rpapy;……

ele;j td;nfhLikfs;! (fpNwrpad;> ehthe;Jiw)

rkudpd; xU ifjpapd; tuyhW

“MAjq;fs; Nky; fhjy; nfhz;l kdNehahspfs;.” ntF tpiutpy;…

kPir itr;r rpq;fstDk; Mir itr;r jkpoDk;

(rhfud;)

,yq;ifapy;

‘,uhZt’ Ml;rp Ntz;b epw;Fk; Nkw;Fyfk;>  Jiz nra;af; fhj;jpUf;Fk;; ruj; nghd;Nrfh $l;lk;

(rhfud;)

[dhjpgjp NjHjy;

vkJ njhpT vt;thW mika Ntz;Lk;?

-gj;kehgh <gpMu;vy;vt;

[dhjpgjpj; Nju;jy;

Miz ,l;l mjpgu; ‘if’> Ntl;L itj;j n[duy; ‘Jg;ghf;fp’  ….. ahu; nty;thu;fs;?

(rhfud;)

rk;ge;jNu! cq;fsplk; rpy re;Njfq;fs;.

(Nrfu;)

midj;J ,yq;ifj; jkpoh;fSk; xw;Wikahd ,yq;if jkJ jhafk; vd kdg;G+h;tkhf chpikNahL czUk; epiy Vw;gl Ntz;Lk;.

(m. tujuh[g;ngUkhs;)

njhlUk; 60 tUlfhy fhl;bf; nfhLg;G

[dhjpgjpj; Nju;jypy; jkpo; kf;fs; ghlk; Gfl;Lthu;fsh?

(rhfud;)

[dthp ,Ugj;jhW!

tpUk;gpNah tpUk;ghkNyh ,U fl;rpfSf;Fs; xd;iw jkpo; NgRk; kf;fs; Njh;e;njLf;f Ntz;Lk;…..?

(Nkhfd;)

2009 tpilngWfpd;wJ! 2010 tuNtw;fpd;wJ!!

‘<oj; jkpo; NgRk; kf;fs; kj;jpapy; ghrprj;jpd; cjpu;Tk;> [dehafj;jpd; vOr;rpAk;’

(rhfud;)

rgh\; rupahd Nghl;b.

kfpe;j  uh[gf;\ Vs ruj; nghd;Nrfh.

(a`pah th]pj;;)

$j;jikg;G $j;jhbfSk; khw;W jkpo; murpay; jiyikfSk;!

(rjh. [P.)

jkpo; NgRk; kf;fspd; Gjpa murpay; jiyik

kPz;Lk; jpUk;Gk; 35 tUlfhy murpay; Row;rp! jkpo; NgRk; kf;fSf;F tpbT fpl;Lkh?

(rhfud;)

fg;gNyhl;ba jkpoDk;> mfjp (fg;gy;) jkpoDk;

(rhfud;)

#upr; kfhehL

(G+l;ba) ,Ul;L miwapy; fWg;G G+idia NjLk; Kaw;rp

(rhfud;)

gphpNthk;! re;jpg;Nghk;!! kPz;Lk; re;jpg;Nghk;! gphpNthk;!!

(Nkhfd;)

jkpo; Njrpa $l;likg;Gld; cwT

ghk;Gf;F ghy; thu;f;Fk; gopr; nray;

(rhfud;)

,yq;if murpd; Kjy; Nfhzy; Kw;Wk; Nfhzyhf khWk; mghak;

rhfud;

<o tpLiyg; Nghuhl;lKk;> Clfj;Jiw ju;kKk; - rhfud;

mLj;j fl;lkhd mjpfhug;gfph;T Kd;Ndw;wkhdJ 13tJ jpUj;jj;jpypUe;J Kd;Ndhf;fp ce;jpg; ghAk; xU tplaNk 

- m.tujuh[g;ngUkhs;

kiyafk; je;j ghlk;

tlf;F fpof;F kf;fs; fw;Wf;nfhs;thu;fsh?  - rhfud;

xU gpusak; fle;J xU Afk; Kbe;jJ Nghy; rk;gtq;fs; ele;J Kbe;Js;sd.! - m.tujuh[g;ngUkhs;

 

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com