Contact us at: sooddram@gmail.com

 

Sooddram.com

(ஆக்கங்களின் கருத்துக்களுக்கு ஆக்கங்களை ஆக்கியவர்களே பொறுப்பு)

தமிழர்களின் போராட்ட வாழ்வின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்வுகளை வாய்மை வழி நின்று பதியவே இந்த இணையத்தளம்

உண்மையான வரலாற்றைத் தேடுவோர்களுக்கு இது ஒரு களம்

********************************************************

வைகாசி 18, 2013

வேடிக்கையான காணி, பொலிஸ் அதிகாரங்கள்

'தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது புலிகளின் தேவைக்கேற்ப கொண்டுவரப்பட்ட திருத்தம் ஒன்றின் மூலமே அரசாங்கத்திற்கு மாகாண சபையை கலைக்கும் அதிகாரம் கிடைத்தது.'

1989 ஆம் ஆண்டுகளில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்த காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எப்) முதலான கூட்டணியொன்றே வடக்கு கிழக்கு மாகாண சபையை நிர்வகித்தது. வரதராஜப் பெருமாளே முதலமைச்சராகவிருந்தார். எனவே இந்த மாகாண சபையை கலைத்து விடுமாறு புலிகள் பிரேமதாசவிற்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இருக்கவில்லை. மாகாண அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்கும் அதிகாரம் இருந்த போதிலும் மாகாண சபையை கலைக்க அதிகாரம் இருக்கவில்லை. எனவே மாகாண சபைகளை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் மாகாண சபை சட்டத்திற்கு திருத்தம் ஒன்று 1990ஆம் ஆண்டு முற்பகுதியில் வகுக்கப்பட்டது. அச்சட்டம் நிறைவேற்றப்படும் முன்னரே, அதாவது 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி புலிகள் மீண்டும் போரை ஆரம்பித்தனர். ஆனால் புலிகளை மீண்டும் வளைத்தெடுக்க அரசாங்கம் முயற்சி செய்தது. மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள கிடைத்த இந்த வாய்ப்பை கைவிடவும் அரசாங்கம் விரும்பவில்லை. எனவே போர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களில் இந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நறைவேற்றப்பட்டது.
(மேலும்.....)

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டாம் -  இந்தியா

இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னதாக நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள இந்திய 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியபோதே மேற்கண்டவாறு வலியுத்தியுள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 26 பேரையும்விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலையில் பலத்த பாதுகாப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரே இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்திலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதேவேளை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றுக் காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இவ்வஞ்சலி நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தீபமேற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். எனினும், இவ்வஞ்சலி நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராசிரியர்கள் பலர் சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

UNPers given special training

(By Manoj Prasanna)

The Friedrich Naumann Foundation, a Germany-based International Non-Government Organization (INGO), has held a two-day special workshop for United National Party (UNP) Members of Parliament, Local Government bodies and Provincial Councils, at the official residence of the Mayor in Colombo on ‘how to defeat the present government and bring the UNP back into power.’The workshop was conducted on 14 and 15 May. The chief speakers at the workshop included Manfred Risher, former Mayor of Germany and a senior Liberal Party committee member. It is especially significant to note that despite Colombo Mayor, A.J.M. Muzammil, repeatedly telling the party leadership the Mayor’s residence is an official residence given by the government, and a political workshop of this kind cannot be conducted there, Party Leader Ranil Wickremesinghe has given permission to the Fredrich Neumann Foundation to conduct the workshop aimed at overthrowing the government. At the same time, it is also noteworthy the UNP Leader, who made announcements in Parliament and outside of it that public property is being misused by the government to win elections held in the past, is now using government property to plan the overthrow of the government, a UNP MP quipped. It is learnt the Fredrich Neumann Foundation had agreed to provide the necessary plans, funds and advice to oust the present government in power, and install a UNP government.

வடக்கு கிழக்கு மக்களின் இதயம் எனக்கு தெரியும் - ஜனாதிபதி

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற  வைபவத்தில் அதிதிகளின் வருகைக்கு பின்னர் குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகள் புடைச்சூழ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் பிரதான மேடைக்கு வருதைதந்தனர். அதற்கு பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை கேட்டால் வடக்கு தேர்தலை நடத்த முடியாது - வாசுதேவ நாணயக்கார

குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை கேட்கப்போனால் இன்னும் பல வருடங்களுக்கு வட மாகாணசபை தேர்தல் நடத்த முடியாமல் போகும். எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடக்கில் தேர்தலை நடத்தி அம் மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்ற நிர்வாக முறையை ஏற்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீள்குடியமர்த்தி விட்டு தேர்தலை நடத்தப்போனால் தமிழ் மக்களும் அதே கோரிக்கையினையே அரசிற்கும் சர்வதேசத்திற்கும் முன் வைப்பார்கள். இந்தியாவில் மாத்திரம் 40,000 இலங்கை தமிழர்கள் முகாம்களில் வாழ்கின்றனர். ஆகவே உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள வட மாகாணத்தைச் சேர்ந்த மூவின மக்களுக்கும் வாக்களிக்கக்கூடிய புதிய சட்டத்தை அரசு கொண்டுவர உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனவு காண்கின்றார் மீண்டும் சிவாஜிலிங்கம்

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (மேலும்.....)

வடபகுதியில் பணிபுரிந்த டாக்டர் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம்

தமிழர் யுத்தத்தின் பின்னர் கெளரவமாக நாட்டில் எந்தப் பகுதியிலும் வாழ்கிறார்கள். தமிழர்கள் இராணுவத்தினரைப் பாராட்டுகிறார்கள். வடமாகாணத்தில் பெருமதிப்புக்குரிய வைத்திய நிபுணராக இருக்கும் டாக்டர் பி.சிவபாலன் இந்திய பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்த கடிதம் ஒன்றில் 2009 ம் ஆண்டில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்கள் நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், இலங்கை அரசியல் சாசனத்தில் தமிழர்கள் இப்போது சம உரிமைகளை அனுபவிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். நான் ஒரு தமிழன் என்ற முறையில் தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக அனுபவித்த வேதனைகளை நேரில் பார்த்து இருக்கிறேன். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தமிழர்களாகிய எங்களுக்கு கெளரவமாக வாழ்க்கை நடத்துவதற்கு வழியமைக்கப்பட்டிருக்கிறது என்று நான் உறுதிபட கூற விரும்புகிறோன். (மேலும்.....)

வைகாசி 17, 2013

தேவைதானா இது.....?

காலி முகத்திடலில் இன்று யுத்த வெற்றி விழா அணிவகுப்பு

யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் காலை 8.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும், தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் மாலை 4.00 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.

பிரிவினைவாத செயற்பாடுகளுக்கு எவருமே இனிமேல் உதவி வழங்கக் கூடாது!

‘முன்னாள் புலி உறுப்பினர்கள் பலரும் தற்போது அரசுக்கு விசுவாசியாக மாறி வருகின்றனர்’

2007.09.05 ம் திகதி பயங் கரவாத விசாரணைகள் பிரிவினால் கைது செய்யப்பட்ட அயர்லாந்து நாட்டின் பிரஜாவுரிமை பெற்ற குணசுந்தரம் ஜெயசுந்தரம் எனும் சந்தேக நபர் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட விசாரணையின்போது இவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாடசாலை வயதுக்காலம் முதல் ஒரே வகுப்பில் கல்வி கற்ற நீண்டகால நண்பன் எனவும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்துகொண்டு எல். ரீ. ரீ.ஈ. இயக்கத்திற்குத் தேவையான யுத்த உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வன்னிக்கு அனுப்பியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்திற்காக கப்பல் ஒன்றினை விலைக்கு வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்களை வெளியிட்டார். இந்த சந்தேக நபரை கைது செய்யும்போது அவரிடமிருந்த மடிக்கணனியில் மேற்படி விடயங்களை நிரூபிக்கக் கூடிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (மேலும்.....)

பிரபாகரன் குடும்பத்தினர் மறைந்திருந்த ஆனந்தபுரம் வீடு கண்டுபிடிப்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முற்றுகைப் போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் கடந்த 1996ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் வசித்து வந்ததாகவும் இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

புலம்பெயர் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொதுபல சேனா

விடுதலைப் புலிகளின் சிறந்த புலம்பெயர் தரப்பினருடனே தாம் நோர்வேயில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தாம் சிறந்த புலம்பெயர் பிரதிநிதிகளிடம் ஏற்படுத்தி கொண்ட இணக்கப்பாடுகளை புலம் பெயர் புலிகள் சீர்குலைத்து விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.  அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுக்ள இந்த நாட்டில் எந்தளவுக்கான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் அறிவோம். இதனால் நாங்கள் நேரடியாக புலிகளுடன் தொடர்பில்லாத, பிரிவினைவாததுடன் தொடர்பில்லாத புலம்பெயர் குழுவொன்றுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த நாங்கள தீரமானித்தோம். அந்த குழுவுடன் இணைந்து செயற்பட முடியுமாக இருந்தால், கிடைக்கும் நிதியுதவிகளை நேரடியாக மக்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு செல்ல முடியும்.  எனினும் துரதிஷ்டவசமாக உண்மையான புலிகள் சிறந்த புலம்பெயர் பிரதிநிதிகளுடனான வேலைத்திட்டத்தை எதிர்த்தனர். அத்துடன் அந்த முன்னெடுப்புகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

பிரபாகரனின் வகுப்பு நண்பனுக்கு 15 மாத சிறை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வகுப்பு நண்பன் ஒருவருக்கு 15 மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவு பற்றிய தகவலை வெளிப்படுத்தாமை உட்பட 15 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்தே அவருக்கு 15 மாதகால சிறைத்தண்டனை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. குணசுந்தரம் ஜேசுதாஸன் என்பருக்கே இவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 15 குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஒரு மாதமென 15 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 15 மாதகால சிறைத்தண்டயையும் இவர் ஒரே சமயத்தில் அனுபவிக்கமுடியும். எனவே, இவர் ஒருமாதகாலத்திற்கு மட்டுமே சிறையிலிருப்பார். அதன் பின்னர் அவர் ஒருவருடகாலத்திற்கு புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார். அப்படியாயின் 1 மாதத்திற்கு பின்பு கேபி உடன் அல்லது தமிழினியுடன் இணைந்து இலங்கை அரசுக்கு விசுவாசமாக செயற்படுவார் என்று கூறுங்கள்.

சிவசக்தி ஆனந்தன் எம்.பியையும் 4 ஆம் மாடிக்கு அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும் எந்தவிடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தனக்கு அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு சிறிதரன் எம்பி உம் கடந்த மாதம் சுரேஸ் பிரேமசந்திரன் எம்பி உம் இதேபோல் பயங்கரவாத தடைச்சட்டத்தன் கீழ் 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. புலிகளின் பிரசன்ன காலத்தில் புலிகளுடன் இணைந்து மக்களுக்கு எதிராகவும் மாற்றுக் கருத்தாளர்களுக்கு எதிராக செய்பட்டும் புலிகளின் கொலைகளுக்கு உடந்தையாக இவர்கள் செயற்பட்ட போது இவர்கள் உண்மையில் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக தற்போது அரசு இவர்கள் விடயத்தில் விசாரணை என்று புறப்படுவது த.தே. கூட்டமைப்பின் ஆதிக்க சக்தி தமிழரசுக்கட்சியின் வருப்புக்களை நிறைவேற்ற அரசு விளைவதாவே பார்க்கப்படுகின்றது. மேலே கூறிய மூவர மட்டும் அல்ல த.தே. கூட்டமைப்பு யாவரும் மக்கள் மன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களே. இன்று இது நடைபெறாவிட்டாலும் வரலாறு இவர்களைத் தண்டித்தே தீரும்.

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா ரத்து

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புடையதாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிட்னி பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 21 வயதான தக்சன் செல்வராஜா என்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரின் வீசா இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளருக்கு தற்காலி வீசா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டக் காரணத்தினால் வீசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

யாழில். மக்கள் முன்னணியின் சுவரொட்டிகள்

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.ஆஸ்பத்திரி வீதி மற்றும் யாழ்.நகரப் பகுதிகளிலேயே இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முன்னணி உரிமை கோரியுள்ளது.

 

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 32 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 32 பேர் சிலாபம் முன்னேஸ்வரம் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது இன்று சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும்,23 ஆண்களும் உள்ளடங்குவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலீஸார் தெரிவித்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் குருநகர் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை கடல் மாரக்கமாக அனுப்புவதற்கு அழைத்து வந்ததாக கூறப்படும் நபர் குறித்த விபரங்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை இந்தப் பயணத்திற்காக பல இலட்சம் ரூபாவரை முகவர் அறவிட்டுள்ளதாக பொலிஸாரிடம் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படத்தப்பட்டுள்ளவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவித்த பொலிஸார், விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் விசாரணையின் பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பழம்பொருட்களில் கிடைத்த ‘கொகா கோலா’ தயாரிப்பு ரகசியத்தை ஏலத்தில் விட முயற்சி

புகழ் பெற்ற குளிர்பானமான கொக்கா கோலா செய் முறை ரகசியம் அடங்கிய ஆவணத்தை கண்டறிந்ததாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அதனை பாரிய தொகைக்கு ஏலத்தில் விடவும் முயற்சித்து வருகிறார். ஜோர்ஜியாவைச் சேர்ந்த கிளிப் கிளுகெ என்ற நபர் ஈபே இணையதளத்தின் ஊடே ஏலத்தில் விட திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு பண்ணையில் உள்ள பழங்கால பொருட்களை நானும் எனது மனைவி அர்லெனும் ஏலத்தில் எடுத்தோம். அந்த பொருட்களில் ஒரு மரப்பெட்டியும் இருந்தது. பெட்டிக்குள் இருந்த கடிதங்களில் கொக்கா கோலா தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப் பொருட்கள், தயாரிக்கும் முறை தொடர்பான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. இந்த குறிப்பு எனக்கு கிடைத்துள்ளது என கொக்கா கோலா நிறுவனத்திடம் நான் தெரிவித்தேன். 10 நாட்களுக்குள் என்னை தொடர்பு கொள்வதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் சொன்ன வார்த்தையை அவர்கள் காப்பாற்றவில்லை. எனவே அந்த தயாரிப்பு ரகசியத்தை இணையதளம் மூலம் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளேன். ஆரம்ப விலையாக 5 மில்லியன் டொலர்களை முன்னர் அறிவித்தேன். இப்போது 15 மில்லியன் டொலர்களாக உயர்த்திவிட்டேன். விருப்பம் உள்ளவர்கள் மேற்கொண்டு கேட்டு ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என கிளிப் கிளுகெ குறிப்பிட்டுள்ளார். மனித குலத்தின் நலத்திற்கு கேடான ஒரு பானத்தின் ரெசிப்பியை யாருக்கும் தெரியவராமல் அழித்துவிடுவதே சரியான முடிவாக அமையும். செய்வார்களா இதனை...?

இனி, விவசாயம் இளைஞர்கள் வசம்!”

(டி.அருள் எழிலன்)

''தண்ணீர் அதிக அளவு தேவைப்படாத, நிதி வசதி அதிகம் தேவைப்படாத, ஏகமாக தொழிலாளர்கள் தேவைப்படாத விவசாய முறையே நம் இயற்கை விவசாயம். நிலம் வாங்கியோ அல்லது குத்தகைக்கு எடுத்தோ, இன்று இளைஞர்கள் விவசாயம் செய்ய வருகிறார்கள். இயற்கை நெல் ரகங்களைப் பொறுத்தவரை வருடம் முழுக்கத் தண்ணீர் தேவை இல்லை.  நிலம் வெடித்துப் பாளம் ஆகாமல் ஈரமாக இருக்கும் அளவுக்கு ஈரப்பதம் இருந்தாலே போதும். மாப்பிள்ளைச் சம்பா, சம்பா மோசனம், மடு முழுங்கி, காட்டுயானம், சீரகச் சம்பா என சுமார் 63 ரகங்கள் இப்போது இருக்கின்றன. பசுமைப் புரட்சிக்கு முன்னர் பல லட்சம் இயற்கைப் பயிர் வகைகள் இந்தியாவில் இருந்தன. இந்த இயற்கை விதைகளைத் திருடித்தான் ரசாயனப் பயிர்களான வைக்கோல் இல்லாத முக்கால் அடி உயரப் பயிர் ரகங்களை உருவாக்கினார்கள். ரசாயன மருந்து தெளித்து விளைவிக்கப்பட்ட பயிர்கள் நோய்களைப் பெருக்கிவரும் நிலையில், இப்போது இயற்கை உணவுகளுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ரசாயன விவசாயத்தைவிட இயற்கை விவசாயம்தான் இன்றைய தேதியில் லாபமானது. (மேலும்.....)

கல்லால அடிச்சுக் கொன்னுட்டாங்களே பாவிங்க!

‘தொடரும் மரக்காணம் மரணங்கள்’

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பேருந்து தாக்குதலில் நிகழ்ந்த பயங்கரங்களுக்கு அளவே இல்லை.  விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், திருவண்ணாமலையில் பலியான ஹரியானாவைச் சேர்ந்த சக்கர் கான் ஆகியோரைத் தொடர்ந்து வாழப்பாடி அருகே செல்வம் என்ற பயணியும் கல்வீச்சுக்குப் பலியாகி இருக்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு 12.30 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து ஆத்தூர், வாழப்பாடி வழியாக சேலம் நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்து மீது வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் மர்ம நபர்கள் சிலர் கல் வீசித் தாக்கியதில் செல்வம் என்பவர் உயிரிழந்திருக்கிறார். (மேலும்.....)

வைகாசி 16, 2013

வியர்வைக் கடைகள்!

'நாம் அணிந்திருக்கும் பிராண்டட் ஆடைகளில் உலகத் தொழிலாளர்களின் உதிரம் படிந்திருக்கிறது! '

(பாரதி தம்பி)

“அம்மா, அப்பா... என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் உங்களுக்கு மருந்து வாங்கித் தர முடியாது. தம்பி... அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக்கொள்வாயா?''- தன் மீது இடிந்து விழுந்துகிடக்கும் எட்டு மாடிக் கட்டடக் குவியல்களுக்கு இடையில் சிக்கி, உயிர் பிரியும் தருணத்தில் 15 வயதுச் சிறுமி, துண்டுச் சீட்டில் எழுதிவைத்த குறிப்பு இது. அதை எழுதும்போது அவள் மனம் என்னவெல்லாம் நினைத்திருக்கும்? வலியால், வேதனையால் எப்படித் துடித்திருப்பாள்? மரணம் தொட்டுவிட்டது என்று தெரிந்ததும் இறுக்கி அணைத்தபடி உயிர்விட்ட அந்தத் தம்பதியின் மன நிலையை நம்மால் உணர முடியுமா? (மேலும்....)

(கடந்த கால பதிவுகளுக்கு....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com