கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்தமை மற்றும் சம்பள உயர்வு வழங்காமை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 
கொழும்பு – கோட்டை ரயில்  நிலையத்துக்கு முன்பாக நாளை  வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் கறுப்புப்பட்டி அணிந்து கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply