விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான நதுன் சிந்தக விக்ரமரத்ன (ஹரக் கட்டா) என்பவருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி, 50 கோடி ரூபாய் இலஞ்சமாகக் கோரி, அதனை 20 கோடியாகக் குறைத்து, இறுதியில் 12 கோடி ரூபாவை அவரது மனைவியிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வெப்ப அலை: 3,700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவில் வீசிய கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 3,700 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. காலநிலை மாற்றமே இந்த அதீத வெப்பநிலைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாச்சி உணவகம்

சேனாதிராஜா சபேசன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றைய தினம் திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்குச் சென்றிருந்தேன்.அந்த உணவகத்தை நான் விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. வீட்டுச் சுவையை நினைவூட்டும் உணவுகள், பாரம்பரிய உணவுப் பழக்கங்களைப் பேணும் முயற்சி, இயன்றவரை பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க எடுத்திருக்கும் அணுகுமுறை போன்றவை அவற்றில் முக்கியமானவை.

பதுளையில் பற்றி எரியும் வனப்பகுதி ; களஞ்சியசாலையால் அச்சம்

பதுளை, அளுகொல்ல வனப்பகுதியில் புதன்கிழமை (01) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 20 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது

வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா மாநகரசபைக்குரிய செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை ஆகியவை காணாமல் போனதாக, மாநகரசபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஜூன் 30) முறைப்பாடு செய்யப்பட்டது.

’போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிக்க செயற்பட வேண்டும்’

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

வசந்த கரன்னாகொட கைது

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

புலிப் பயங்கரவாதம்/ கரிகாலன் உங்கள் அப்பாவிடம் பேச வேண்டும்.

(நவாஸ் தாவூத்)

1990 ஜூலை 3. ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முந்தைய இரவு.ஏறாவூர் முழுவதும் இருள் மட்டுமல்ல, அச்சமும் சூழ்ந்திருந்தது. பல வாரங்களாக மின்சாரம் இல்லை புலிகள் ஏறாவூர் மின்சார விநியோகத்திற்கான ட்ரான்ஷ்போமரை வெடி வைத்து தகர்த்திருந்தனர் வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. மக்கள் பேசினாலும் ஓருவித அச்சத்தோடுதான் பேசினர். அந்தக் காலத்தில் ஒரு தவறான வார்த்தை கூட உயிரைப் பறிக்கக் கூடியதாக இருந்தது.

ஜுன் 21, 2026 கனடாவில் நடைபெற்ற நந்தன வீரரத்ன இன் ‘இலங்கையில் வன்முறை அரசின் 83 ஜுலை கலவரமும் வெலிக்கடைச் சிறைப்படுகொலையும்’ கூட்டத்தில் சிவா முருகுப்பிள்ளை ஆற்றிய உரையின் சாராம்சம்

தென் அமெரிக்காவின் சிலியின் இடதுசாரி அரசின் தலைவர் அலன்டே சல்வடோரை 1973 இல் அமெரிகாவின் சதி மூலம் கொலை செய்து உருவாக்கப்பட்ட வலதுசாரி அரசாங்கங்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு கிட்டத்தட்ட 50 வருடங்கள் தேவைப்பட்டது.

அது போறிக் கப்றியல் தலமையிலான ஜனநாயக இடதுசாரி கூட்டமைப்பு கட்சியால் 2022 இல்தான் முடிந்தது.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் வீரதீர மீட்பு

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் திட்டத்தின் (MINUSCA) கீழ் கடமையாற்றும் இலங்கை விமானப்படைப் பிரிவு, கடந்த ஜூன் 30, 2026 அன்று, மிகவும் அபாயகரமான சூழலில் ஒரு மீட்பு நடவடிக்கையை (CASEVAC) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை விமானப்படை வீரர்களின் இணையற்ற தொழில்முறைத் திறனையும், துணிச்சலையும் இந்தச் செயல் உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.