மிருசுவில் படுகொலை: கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட  குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம்  வெளிநாட்டு பயணத்தடையை வியாழக்கிழமை (20) விதித்துள்ளது.

நாற்றமெடுக்கும் ஸ்ரீலங்காவின்கடந்தகால அரசியலும்,உலகளாவ மணக்கும் அநுரகுமாரவின் சமகால அரசியலும்!

அசோக ஹந்தகமவின் ‘ராணி’: நமது வரலாற்றின் ஓர் இருண்ட கால கட்டத்தின் சித்திரம்!கடந்த இரண்டு வாரங்களாக ஒட்டுமொத்த சிங்கள சமூக ஊடகங்களும் கொண்டாடி வரும் அசோக ஹந்தகமவின் ‘ராணி’ திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘Biopic’ வகையைச் சேர்ந்த ஒரு படைப்பு.

அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்…!

(சட்டத்தரணி பாத்திமா சஸ்னா)

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சமீபகாலமாக பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் பெண்களுக்கு எதிரான பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.அது தொடர்பில் அவருக்கு எதிரான கண்டங்கள் அதிகரித்து வரும் நிலையில். அவர் தொடர்பிலும் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான பாத்திமா சஸ்னா தனது கண்டனத்தினை தெரித்துள்ளார்.

சீனாவில் ஆளில்லா சரக்கு விமானம்

சீனாவில் ஒரு தொன் எடையை ஏற்றிச்செல்லக் கூடிய பெரிய ரக ஆளில்லா சரக்குவிமானம்  தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

போர் நிறுத்தம்: புட்டின் – ட்ரம்ப் இன்று பேச்சு

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

வரி செலுத்தத் தவறிய மூவருக்கு சிறை

கந்தானையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிகரெட் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்ட மூன்று பணிப்பாளர்களுக்கு, 233 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பெறுமதி சேர் வரியை (VAT) செலுத்தத் தவறியதற்காக 06 மாதங்கள் வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எட்டு பொருட்களின் விலைகள் குறைப்பு

எட்டு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம்  குறைத்துள்ளது.  அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும். ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய் ஆகும். 

“திருடப்படும் உர மானியப் பணம்”

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது என்றும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

வவுனியாவில் 600 நோயாளர்கள் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பகுதியினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டு யானைகளால் சிறுபோகத்திற்கு தடை

அம்பாறை மாவட்டத்தின்  மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பலபிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்களில் சிறு போகம் செய்வதற்குரிய ஆரம்பவேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலைதெரிவிக்கின்றனர்.