’முழு நாடுமே ஒன்றாக’ வட மாகாண நிகழ்ச்சி

அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், எந்தப் பிரஜை, நகரம், கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவும் இந்த  போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் என்றும், அது  ஒருபோதும் பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

’கிரீன்லாந்து அமெரிக்காவுக்குத் தேவை’

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டத்திற்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான வட்ட மேசை மாநாட்டின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சாரதிகளுக்கு ’குறைப்புப் புள்ளிகள்’

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ‘குறைப்புப் புள்ளிகள்’ வழங்கும் முறையை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இதை தெரிவித்துள்ளார். GovPay ஊடாக அபராதப் பணத்தைச் செலுத்தும் முறைமை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படுவதோடு, இந்தப் புள்ளி வழங்கும் முறைமையும் ஆரம்பிக்கப்படும் என அவர் விளக்கமளித்தார்.

இந்தோனேசிய விமானம் மாயம்

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு இன்று மதியம் சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, இரு பிள்ளைகள் படுகாயம்

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, இரு பிள்ளைகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. முழு விபரம் கடலோர காவல் பிரிவு ஜிந்துபிட்டிய பகுதியில் 16.01.2026 அன்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இறந்தார்.

கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது கை வைத்தால் விளைவு மோசமாகும்: ரஷியா

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களைச் சாக்காக வைத்து அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தளங்கள் மீது பதில் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த அறிவிப்பு

அமெரிக்காவில் பொது நலத்திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில்,
75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

(விக்னேஸ்வரன் கோபிகா,
கல்வியில் சிறப்பு கற்கை
)

இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும்.