இலங்கை அரச பல்கலைக் கழகங்களில் பட்டதாரிகளை உருவாக்க அரசின் செலவினம்? இத்தனை கலைப் பட்டதாரிகள் நாட்டுக்கு தேவையா?

(By: Dr Ziyad Aia)
பாராளுமன்ற தெரிவுக்குளு August மாதம் சமர்ப்பித்த அறிக்கையின்படி (Dated 21st, July 2023)
2021 பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டில்
26.2% கலைப்பிரிவுக்கும்
18.2% வணிகம்
மற்றும் இதர துறைகளுக்கான (படத்தை பார்க்க) இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகம் முன்னெபோதையும் விட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம்

எண்ணெய்க்காகவும் உலகளாவிய ஆயுத வியாபாரத்திற்காகவும் உலகை பங்கு போட்டு சுரண்டுவதற்காகவும் உலகம் வாழ முடியாத இடமாக மாற்றப்பட்டிருக்கிறது.அண்மைய துருக்கி இப்போதைய மொரோக்கோவின் பூகம்பமும் லிபியாவின் சூறாவளியும் பெருவெள்ளம் பல்லாயிரம் மக்களை சில நொடிகளில் காவு கொண்டிருக்கின்றன.

பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில்

(Ramanathan Lambotharan)

மிக நியாயமான விளக்கம். விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் வாய்ப்பு அரிது என்பது முதலில் இருந்தே கவனிக்கக்கூடியதாக உள்ளது. Cannula போடப்பட்டதால் கை அகற்றவேண்டி வந்தது என்பதும் antibiotic மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட வேண்டி வந்தது என்பதும் மருத்துவ ரீதியாக நம்ப்பக்கூடியதாக இல்லை. கையுக்கு இரண்டு வேறுபட்ட radial artery, ulnar artery என்ற இரத்தக்குழாய்களினூடாக குருதியோட்டம் வருவதாலும், அவை இரண்டும் வட்ட வடிவமாக இணைந்து கிளைத்து இரத்தோட்டத்தை வழங்குவதாலும் ஊசி தறுதலாகப் போட்டு ஒரு இரத்தக்குழாய் பாதிக்கப்பட்டது என்று ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் இரத்தோட்டம் துண்டிக்கப்பட முடியாது.
ஒவ்வொரு சம்பவத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் தாதிய உத்தியோகத்தரின் தன்னிலை விளக்கம்..

அது இல்லாவிட்டாலும் கோட்டா வென்றிருப்பார்

கத்தோலிக்க வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்தில் தான் சனல்-4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள புனையப்பட்ட காணொளி தொடர்பில் சர்வவேச விசாரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோருவதாகவும், குறித்த நிறுவனம் கோட்டாபயவுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்கள, பௌத்தத்துக்கு எதிராகவே பொய்பிரசாரம் செய்வதாகவும் தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

மொராக்கோ நிலநடுக்கம்: பலியானோர் 1,037 ஆக அதிகரிப்பு

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளது.  மேலும் ஆயிரத்து 204 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.  அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது.  இதில், பல உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர், இதனை முன்னிட்டு டெல்லி விழாக்கோலம் காட்சியளிக்கிறது.

நிறைவேறியது சட்டமூலம்

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக  103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.  

ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி போராட்டம்

கிளிநொச்சி  பூநகரி வேரவில் இந்து மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வி பிரிவிற்கு போதிய ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்களால் இன்று (07) பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் கோரல்

2022 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.