‘ரவுண்ட் அப்’ (‘சுற்றி வளைப்பு’)

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.)

சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம்.

சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது. எங்கள் வீட்டுப் பெட்டைநாய் டெய்ஸி; தன் குட்டிகளுடன் வாழைமரத் தோட்டத்தில் நிழல் தேடியது.போனகிழமை,குஞ்சுகள் பொரித்த வெள்ளைக்கோழி,பல நிறங்கள் படைத்த தனது பத்துக் குஞ்சுகளுக்குக் கடமையுணர்வுடன் இரை தேடிக் கொண்டிருந்தது.

(“‘ரவுண்ட் அப்’ (‘சுற்றி வளைப்பு’)” தொடர்ந்து வாசிக்க…)

ஆர் எஸ் எஸ் – சிவ சேனை – சைவ மகா சபை

‘ பக்கத்து வீட்டில் பேயாய் இருப்பது நம் வீட்டில் தேவதையாக மாறாது ‘

அண்மைக்காலமாக இந்த அமைப்புகள் பற்றியும் இந்துத்துவ கருத்தியலின் செயல்பாடுகள் பற்றியும் முகநூலில் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவை பற்றியும் இன்ன பிற மத அமைப்புகள் பற்றியும் ஆழமான உரையாடல் தேவை. அதற்கான சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முன் சில அடிப்படையான புரிதல்களை இந்த விவாதத்தின் போது கொண்டிருக்க வேண்டிய அவசியமிருக்கின்றது.

(“ஆர் எஸ் எஸ் – சிவ சேனை – சைவ மகா சபை” தொடர்ந்து வாசிக்க…)

இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்

 

பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும்.

(“இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்” தொடர்ந்து வாசிக்க…)

மே – 18 ஆம் திகதி என்பது எனன?

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டுமொரு தடவை முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறார். வடக்கு மாகாண சபையின் நடவடிக்கையை தவிர மிகுதி அனைத்து விடயங்களிலும் சதிராடுகின்ற தனது சம்பிரதாய கூத்துக்களில் ஒரு பகுதியாக இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளிற்குள் தனியாக நின்று காவடியாடுவதற்கு அறிவிப்பு விடுத்திருக்கிறார்.

(“மே – 18 ஆம் திகதி என்பது எனன?” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா.??? பாஜக வெற்றி பெறுமா.???

முன்பு இருந்த எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒரு காரியமாக திரு. நரேந்திர மோடி, தேர்தல் களத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் பதினைந்து பிரச்சாரத்தில் கலந்து கொள்ளப் போகின்றார். இதே தந்திரத்தைப் பயன்படுத்தி உத்திரப் பிரதேசத்தில் இருந்த சமாஜ்வாதி கட்சியினை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.
வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று தான் மோடி லோக்சபாவில் நுழைந்தார். அவருடைய இந்தி பேசும் திறமை எப்படி அவரை வெற்றியடையச் செய்ததோ அதே போல் அவருடைய கட்சியினரின் மதவாதக் கலவரங்களை உண்டாக்கும் போக்கும் அக்கட்சியினை இதுவரை வெற்றியடைய வைத்திருக்கும் காரணிகளாக காணலாம்.

(“கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா.??? பாஜக வெற்றி பெறுமா.???” தொடர்ந்து வாசிக்க…)

ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் கொல்லப்பட்ட ஏனைய சக ரெலோ போராளிகளை நினைவுகூரும் கூட்டத்தை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எஃப். உட்பட இதர பல கட்சிகளின் பங்கேற்புடன் ரெலோ நடாத்தியிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் கட்சிகளோ, உறுப்பினர்களோ குறிப்பாக ரெலோவின் முக்கிய தலைவர்களோ சிறிபாரத்தினத்தையும்,, ரெலோவின் நூற்றுக்கணக்கான போராளிகளையும் குரூரமான முறையில் கொன்றொழித்த விதம் பற்றியோ, அதைச் செய்தவர்கள் பற்றி எதையும் வெளிப்படையாகப் பேசியதாகத் தெரியவில்லை.

(தொடர்ந்து வாசிக்க…)

தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்

(ஜனகன் முத்துக்குமார்)

ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது.

(“தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

தொடங்கியது… மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மஜத தேசிய தலைவர் தேவகவுடா, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக ஆளும் 22 மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள்..!

(“தொடங்கியது… மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு ஆடை குறித்து இஸ்லாமிய சட்டவியல் – பிக்ஹு – நிலைப்பாடு என்பதாகவன்றி அதுவொரு பெண்கள் குறித்த சமூக மனோபாவமாக அர்த்தம் பெற்றிருப்பது தான் பிரச்சனை.

(“முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை

(கே. சஞ்சயன்)
யாழ்ப்பாணத்தில் இம்முறை, மே தினப் பேரணிகள் களைகட்டியிருந்தன. அத்தகைய மே தினப் பேரணியொன்றில், வெளியிடப்பட்ட கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய, அந்தக் கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்கள் வெளிப்படுத்திய கருத்துகள், இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளன. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், த.தே.ம.மு, நடத்திய மே தினப் பேரணிகளில் ஒப்பீட்டளவில் இது பெரியது.

(“பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை” தொடர்ந்து வாசிக்க…)