(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.)
சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம்.
சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது. எங்கள் வீட்டுப் பெட்டைநாய் டெய்ஸி; தன் குட்டிகளுடன் வாழைமரத் தோட்டத்தில் நிழல் தேடியது.போனகிழமை,குஞ்சுகள் பொரித்த வெள்ளைக்கோழி,பல நிறங்கள் படைத்த தனது பத்துக் குஞ்சுகளுக்குக் கடமையுணர்வுடன் இரை தேடிக் கொண்டிருந்தது.