எனக்கு வேண்டாம் இந்த புத்தாண்டு….?

தொலைத்த உறவுகளைத் தேடும் இடையறாத போராட்டம்… தமது வாழ்விடங்களை விடுவிக்க மழை வெயில் பாராது போராட்டம்…. கற்ற படிப்பிற்கும், பெற்ற பட்டத்திற்கு வேலை வேண்டிப் போராட்டம்….. தனியார் கல்விநிறுவனங்களை உருவாக்காதே என்ற கோரிக்கைப் போராட்டம்…. மலையகத்தில் வாழ்வாதாரத்தை வேண்டி மௌனப் போராட்டம்….. வரட்சிக்கு நிவாரணம் கோரி டெல்லி வரை சென்று இடுப்பின் உடைகளை களைந்து போராட்டம்….. இதில் எதிலும் ஆளும் வர்க்கங்கள் அதிகம் அக்கறை காட்டியதாக தெரியவில்லை. போர் முரசு கொட்டும் வளைகுடாவும் போர் ஒத்திகை பார்க்கும் கிழக்கு கடலோரமும்….. சர்வதேச போர் நகர்வுகள்…. மனிதம் செத்துப் போகின்றதா..? என்ற அச்சநிலை ஆனால் இன்று பிறக்கும் தமிழ் சிங்கள வருடப் பிறப்பிற்கு மட்டும் மொழி மதம் இனம் கடந்து வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஆரவாரத்திற்கு குறைவுகள் இருக்காது…? இந்த வாழ்த்துக்களிலும் உண்மை இல்லை…. வாழ்த்தை ஏற்கும் மகிழ்வு நிலையிலும் மக்கள் இல்லை யாருக்கு வேண்டும் இந்த புதுவருடம்…? எனக்கும் வேண்டாம் இந்தக் கொண்டாட்டம்…? இது விரக்தியின் வெளிப்பாடு அல்ல விழிப்புணர்விற்கான அறைகூவல். போராடும் சக்திகளுக்கு ஆதரவழிப்போம் போராடுவதற்கான நிர்பந்தம் நாளை எங்கள் வீட்டுக்கதவையும் தட்டும் அதுவரை காத்திருந்தால் எமக்காகவும் போராட அன்று யாரும் வரப்போவது இல்லை.

மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள்

(என்.சரவணன்)

(இன்று ஜே.வி.பி. ஏப்ரல் கிளர்ச்சியின் 40வது வருட நினைவுநாள்…)

இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் 40 வது வருட நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருகின்ற இந்த வேளை அதன்போது கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. 1996ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் 25வது வருட நிகழ்வை நினைவை முன்னிட்டு சரிநிகரில் எழுதிய சிறப்புக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இக்கட்டுரை எழுதுவதற்காக கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் பெற்றோருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். ஜே.வி.பி தோழர்கள் என்னுடைய இந்த பயணத்தில் உதவினார்கள். குறிப்பாக முற்றிலும் சிங்களப் பிரதேசமான அங்கு அன்றைய சமயத்தில் தமிழர்கள் அச்சமின்றி போய் வரும் நிலை இருக்கவில்லை. என்னோடு வந்த என் சக ஜே.வி.பி. தோழர்கள் என்னுடைய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டனர்.

மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் (*1) எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 – மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் இருந்து சில நாட்களாக திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.
(“மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

வெருகல் படுகொலை

இன்று வெருகல் படுகொலை நினைவு நாள். கடந்த மாதம் 30ந் திகதி நாம் கந்தன் கருணைப் படுகொலை நினைவு நாளை நினைவு கொண்டு கடந்திருந்தோம். ஈழவிடுதலைப் போராட்டத்தின் பெயரில் விடுதலை இயக்கங்களால் செய்யப்பட்ட கூட்டுப் படுகொலைகளை கணக்கெடுக்க வேண்டிய காலம் இது. இந்தப் படுகொலைகளில்கொ ல்லப்பட்டவர்களது பெயர் விபரங்களை முழுவதுமாகத் திரட்டியே ஆக வேண்டும். இந்தச் சம்பவங்களில் பங்கு பற்றியவர்கள் மற்றும் சம்பவங்களிலிருந்து தப்பியவர்கள் என்று தற்போது எஞ்சியிருப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்களிடமிருந்து கேட்டறிவதற்கும் அவற்றைத் தகுந்த முறையில் பதிவு செய்வதற்கும் இருக்கின்ற நாட்கள் மிக மிகக் குறைவே.

(“வெருகல் படுகொலை” தொடர்ந்து வாசிக்க…)

Syria: UN Mission Report Confirms that “Opposition” Rebels Used Chemical Weapons against Civilians and Government Forces

(By Carla Stea, Global Research, April 08, 2017)

There is no basis to the Trump Administration’s accusations that the government of Bashar al Assad was involved in deliberately triggering a chemical weapons attack with a view to killing Syrian civilians. This December 2013 article by Global Research’s Correspondent Carla Stea at UN Headquarters confirms that the “Opposition” rebels were in possession of chemical weapons. According to the UN mission report, Syrian soldiers as well as civilians were the target of chemical weapons attacks led by opposition rebels.

(“Syria: UN Mission Report Confirms that “Opposition” Rebels Used Chemical Weapons against Civilians and Government Forces” தொடர்ந்து வாசிக்க…)

ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாடுகள் அளவில் சிறியதாய் இருந்தாலும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பிராந்தியத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிடும். தன்னளவில் அரசியல் ரீதியான கவனம்பெறுவதற்கு, நாட்டின் நிலப்பிரதேசத்தின் அளவோ சனத்தொகையின் அளவோ முக்கியமல்ல என்பதைப் பல உதாரணங்கள் தொடர்ந்தும் நிறுவியுள்ளன. அரசியலில் ‘அலை’ ஒரு முக்கியமான குறிகாட்டி. குறித்த ஒரு திசைவழியில் அரசியல் அலை வீசத் தொடங்குகின்ற போது, அது நாட்டின் எல்லைகளைக் கடந்து வீசும். அவ்வாறான ஒரு சூழலில் அவ்வலைக்கு எதிராகப் பயணித்தல் மிகக் கடுமையான காரியம். அதைச் செய்ய இயலுமானவர்கள், பல தருணங்களில் உலக அரங்கின் எதிர்காலத்தின் பாதையைச் செதுக்க வல்லவர்கள்.

(“ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை” தொடர்ந்து வாசிக்க…)

மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.?

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக பதிவேறுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தம்மோடு வாழ்ந்து மறைந்தவரை  நினைவு கூரல் மனித பண்புமட்டுமல்ல, அது நாலுகால் நன்றி உள்ள பிராணிக்கும் பொருந்தியதால் தான், ஹிஸ் மாஸ்டர்ஸ் வொயிஸ் HMV (His Masters Voice) என்ற இசைத்தட்டு குறியீடே உருவானது.

(“மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.?” தொடர்ந்து வாசிக்க…)

வளைகுடாவில் மீண்டும் ஆட்டம் தொடங்கிவிட்டது

(சாகரன்)
 
தந்தை அல் அசாத்தின்(Hafez al-Assad) ஆட்சியில் சமாதான பூங்காகவும் தனது நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் பலதும் இலவசமாகவும் வழங்கி நல்லாட்சி நடந்து வந்ததே சிரிய வரலாறு. கூடவே உலகெங்கும் விடுதலை வேண்டி நிற்கும் ஒடுகப்பட்ட மக்களின் விடுதலைக்கான தார்மீக ஆதரவை வழங்கி வந்ததும் இதே சிரியா. குறிப்பாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கும் அகதி வாழ்விற்கும் பக்கபலமாக நின்று உலகில் இன்றுவரை பாலதீனம் என்ற நாட்டையும் பாலஸ்தீன மக்களின் இருப்பை உறுதி செய்வதில் சிரியாவின் பங்கு மகத்தானது. சோவியத் யூனியனின் உடைவிற்கு 6 மாத காலத்தின் பின்பு தந்தையின் பொறுப்பை தனையன் ஏற்றுக்கொண்டு தந்தை வழியில் தனது ஆட்சிப் பயணத்தை தொடர்ந்தார்.

(“வளைகுடாவில் மீண்டும் ஆட்டம் தொடங்கிவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)

கனடிய  அரசியல் கட்சிகளை  நாறடிக்கும் தமிழர்கள்

தமிழர்களில் சிலர் சென்ற இடங்களில் எல்லாம் தம் கைவரிசையை காட்ட தவறுவதில்லை. அவர்களை  சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துவிட்டு கறிவேப்பிலை போல் தூக்கி எறியவும் தயங்கிய தில்லை. குறிப்பாக கட்சி தலைமைத்துவ போட்டிகளின் போதும் கட்சி நியமன தேர்தல்களின் போதும் கட்டுக்கட்டாக உறுப்பினர்களை சேர்ப்பதில் தமிழருக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது கனடிய மைய அரசியல் வாதிகளுக்கு  தெரிந்ததே.

(“கனடிய  அரசியல் கட்சிகளை  நாறடிக்கும் தமிழர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தனி ஒருவனின் தவறும்..? தலைவனின் தவறும்..??

(சாகரன்)

மாடு திருடியவனுக்கு தண்டனை என்று சும்மா விட்டுவிட்டு போக முடியவில்லை. (கொலை) வெறிபிடித்து தண்டனை வழங்குவதற்குரிய அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியவர்கள் யார். தண்டனை என்பது ஒருவன் தெளிந்து, திருந்தி, மனிதனாக வாழ்வதற்கே ஒழிய மாறாக அவனை அழித்தொழப்பதற்காக அல்ல. துன்புறுத்தலில் ஈடுபடுவதும் ஒருவகை குற்றம்தான்;. இந்த தவற்றிற்கான தண்டனை ஏற்க யார் முன் வருவார்கள். தவறு செய்வதற்காக சமூகக் காரணிகள் என்ன என்பது ஆராயப்பட்டு இந்த சமூகக் காரணிகள் களையப்பட்டு இதன் அடிப்படையில் அறிவூட்டப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒரு நல்ல பிரஜையாக வாழ வழிவகை செய்யும் அணுகு முறையே தவறுகளை களைவதற்குரிய சரியான செயற்பாடு ஆகும்.

(“தனி ஒருவனின் தவறும்..? தலைவனின் தவறும்..??” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்தமிழர்கள் எனும் புலிக்குட்டிகள்

(Kiri Shanth)
அண்மையில் சகோதரி ஒருவரின் கலங்கடிக்கும் கண்ணீர் கொட்ட வைக்கும் வாய் மூடவைக்கும் அதிர்ச்சியளிக்கும் புல்லரிக்கும் வெறி கொள்ள வைக்கும் பேச்சைக் கேட்க வேண்டி நேர்ந்தது. அதற்கு காரணம் அள்ளுக்கொள்ளையாக ஈழத்தமிழர்கள் என்றாலே கண்ணீர் வடிக்கும் கும்பலும் அதை வைத்து காசு பார்க்கும் கும்பலும் , இன்னும் சில அப்பாவி நண்பர்களும் அந்தப் பேச்சை தாறு மாறாக பகிர்ந்துகொண்டிருந்தமை தான்.

(“ஈழத்தமிழர்கள் எனும் புலிக்குட்டிகள்” தொடர்ந்து வாசிக்க…)