தாழும் கப்பல் கரைசேராது

(கே.எல்.ரி.யுதாஜித்)
“யுத்தம் என்பது, அழிவில்லாமல் நடைபெறுவதொன்றல்ல. நாட்டில் இடம்பெற்ற  ஜே.வி.பி கிளர்ச்சியின்போது, 80 ஆயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள். மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும் அவர்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே, காலத்தின் தேவையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், இறுதி யுத்தகாலத்தில், அமெரிக்கா வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. அதேபோல்தான், த.தே.கூ.வினர் இப்போது, பிரிட்டன் வரும், ஜெனீவா  காப்பாற்றும், வேறு நாடு வரும் என்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அவர்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறாது” என, கருணா அம்மான் எனப்படும் வி.முரளிதரன் தெரிவித்தார்.

(“தாழும் கப்பல் கரைசேராது” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 105 )

1988 டிசம்பரில் நடைபெற்ற ஜனதிபதி தேர்தலில் பிரேமதாசா வெற்றி பெற்றார்.எனது திருமணம் 1989 ஜனவரியில் நடந்தது.இந்த திருமணம் மகரகம அண்மித்த கொடிகமுவ என்னும் கிராமத்தில் நடந்தது.இதன் பின் நான்,மனைவி, மாமனார் குடும்பம் எல்லோரும் அந்த வீட்டில் வாழ்ந்தோம்.அயலவர்களான சிங்கள மக்கள் எந்த பிரச்சினைகளும் தரவில்லை.

(“பற்குணம் (பகுதி 105 )” தொடர்ந்து வாசிக்க…)

மாடேறி மிதிக்கும் கதை

(முகம்மது தம்பி மரைக்கார்)

வசதி வாய்ப்புகளோடு இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளும், கண்ணீர்க் கதைகளும் உள்ளன. ஒரு கால கட்டத்தில் பணக்காரர்களாகவும் வாகனங்களோடும் இருந்தவர்கள், அனைத்தையும் இழந்து நிற்கின்றமையினைக் காண்பது கவலையளிக்கும் விடயமாகும்.இந்நிலைமை, தங்கள் சகாக்கள் சிலருக்கு ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றார் பஸ் உரிமையாளரான எம்.எஸ். பைறூஸ்.

(“மாடேறி மிதிக்கும் கதை” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தமிழருக்கான அரசியல் தீர்வு ஏற்படுமா…?

இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிஷாரால் நூறு வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்யப்பட்ட நாடுகள். சுதந்திரம் கிடைத்தாலும் இந்த நாடுகளை பிரிட்டன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே இன்று விரும்புகிறது. இலங்கையில் தமிழர்-சிங்களவர் பிரச்சனை, இந்தியாவில், முஸ்லிம்-இந்து பிரச்சனை என்பன யாவும் வெளியாட்களால் இயக்காப்படும் செயல்பாடுகள். 1971இல் பங்களாதேஷ் பிறந்ததையடுத்து பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டதும் அமெரிக்க நவீன ஆயுதங்கள் அனைத்தும் சோவியத் ஆயதங்களின் முன்னால் சுருண்டு போனதும் இந்த யுத்தத்தில்தான்.

(“இலங்கை தமிழருக்கான அரசியல் தீர்வு ஏற்படுமா…?” தொடர்ந்து வாசிக்க…)

யார் குற்றவாளிகள்

வங்கி மோசடிகள் என்பவை மிகவும் ஒரு சாதாரண விசயங்களாக யாழ்ப்பாண தமிழர்களின் கலாச்சாரமாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.ஆரம்ப காலங்களில் சமூக நலக் கொடுப்பனவு நிதிகளில் தொடங்கி கள்ள பாஸ்போர்ட் சீட்டு என ஆரம்பித்து இது பாரிய மோசடிகளாக வளர்ந்துவிட்டது. இது கனடாவில் தொடங்கியதல்ல.யாழ்ப்பாண தமிழர்களிடம் தொடங்கிய லஞ்சம் அவர்கள் உலகம் முழுவதும் பரவ அது பல்வேறு வடிவங்களாக பரிணாம வளர்ச்சி கண்டுவிட்டது.போதைப் பொருட்கள் கடத்தலும் இதற்குள் அடங்கும்.இந்த விசயங்களுக்காக யாழ்ப்பாண தமிழ் சமூகம் ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை.வருந்தியதும் இல்லை.

(“யார் குற்றவாளிகள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 11)

வழக்கமாக எப்பொழுதும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் இருக்கும் எனது 8 வயது மகள் அன்று நான் மதிய உணவுக்காக இரண்டு மணியளவில் வீடு சென்ற போது செந்தளிப்பான அவளின் முகத்தில் கவலை படர்ந்திருப்பதைக்கண்டு ஆச்சரியமடைந்தேன்.
“என்ன குட்டி ஒரு மாதிரியாக இருக்கிறாய்” என்று கரிசனையுடன் கேட்டவாறே அவளை வாஞ்சையுடன் தூக்கினேன்.
உடனே அவள் “மாவீரர் நாளுக்கு என்னை புலியாக நடிக்கட்டாம் எனக்கு விருப்பம் இல்லை அப்பா” என்றாள் என்னைக் கட்டியணைத்தவாறே. எனது குரல் கேட்டு அவசரமாக வந்த மனைவி நடந்தவற்றை விபரமாக்கூறினாள். “நான் சொன்னனான் அப்பா வந்தவுடன் பிரின்ஸ்சிப்பலுடன் போய்க்கதைப்பார் நீ ஒண்டுக்கும் பயப்படாதை என்று, ஆனால் அவள் கேக்கிறாள் இல்லை. அதால அப்பாவுக்கு புலிகளாலை பிரச்சனை வருமோ எண்டு பிள்ளை சரியாய் பயப்படுது” என்றாள்.

(“முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 11)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 104 )

பற்குணம் மாகாண சபையில் பணியாற்றியதால் சில நேரங்களில் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் என்னை அறிந்திருந்தார்கள்.சில நேரங்களில் என்னை சந்திப்பது வழக்கம்.இவர்கள் புலிகள் மீதான பயம் காரணமாக மாகாண சபையில் பணிபுரிவதாக சொல்வதில்லை. யூ.சி இல் வேலை செய்வதாகவே கூறுவார்கள்.மேலும் சிறு ஊழல் மோசடிகளும் செய்தார்கள்.கொழும்பு வந்தால், வந்த வேலையை உடனே முடிக்க விரும்புவதில்லை .லொட்ஜ் வாடகை,வாகன தரிப்பிட வாடகை என பற்றுசீட்டுகளை வாங்கி மாகாண சபையில் பணம் வசூலிப்பார்கள்.

இதுபற்றி பற்குணத்திடம் சொன்னேன்.அவர் சொன்னார் இன்னமும் சரியான நிர்வாகம் அமையவில்லை.பலர் மாகாணசபையில் இணையத் தயங்கும்வேளையில் தூய நிர்வாகத்தை அமுல்படுத்துவது மாகாண சபையை செயலற்றதாக்கும்.எனவே கால அவகாசம் தேவை.இந்த மாகாண சபையில் அதிகமானோர் இடதுசாரி தத்துவத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்.அவர்கள் இலகுவில் மாறமாட்டார்கள் .பொறுமையாக இருப்போம் என்றார்.

சில நாட்களின் பின் சிலர் சமையல் வாயு கொள்வனவு செய்ய சிலரை பற்குணம் அனுப்பியிருந்தார் .ஆனால் அவர்கள் இளைஞர்களாகவும் ஏராளமான சிலிண்டர் வாயு கொள்வனவு செய்ய வந்ததால் அவர்களுக்கு அந்த நிறுவனம் அதைக் கொடுக்கவில்லை .இதை அவர்கள் பற்குணத்துக்கு அறிவித்தனர்.ஆனால் பற்குணம் நான் சொன்ன கதைகளை வைத்து சிலவேளை அவர்கள் பொய் சொல்லலாம் என கருதி எனக்கு விசயத்தை சொன்னார்.என்னை விசாரிக்கும்படி கூறினார்.

அதன்பின்னர் நான் தனியாகவே அங்கே சென்று காஸ் கிடைக்குமா எனக் கேட்டேன். அவர்கள் தரலாம் என்றனர்.அதன் பின்னர் மாகாண சபை ஊழியர்களின் விசயத்தை கூறிக் கேட்டேன் .அதன் பின்னர் அவர்கள் மாகாண சபை ஊழியர்கள்தான்.நீங்கள் தாராளமாக வழங்கலாம் என்றேன்.அத்தோடு பற்குணம்,முதலமைச்சர் ஆகியோர் தொலைபேசி இலக்கங்கள் என்னிடம் இருந்தன. அதை தரவா எனக் கேட்க வேண்டாம் எனக் கூறி வாயு சிலிண்டர்களை வழங்க ஒத்துக் கொண்டனர்.

மற்றவர்கள் ஊழல்களை கண்டு கொள்ளாவிட்டாலும் தனக்கு கீழே உள்ளவர்களை கவனித்துக்கொண்டிருந்தார்.அதன் பின் அந்த நிறுவனத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று வாயு சிலிண்டர்களை பெற்றுக் கொடுத்தேன்.

இக்காலத்தில் எனக்கும் வெளிநாடு செல்லும் எண்ணம் துளிர்விட்டது.பற்குணத்தின் மருமகன் பெறாமகன் ஆகியோர் எனக்கு உதவ முன்வந்தனர்.ஆனால் பற்குணம் எனக்கான திருமண ஏற்பாட்டில் இறங்கினார்.

(தொடரும்….)

(“பற்குணம் (பகுதி 104 )” தொடர்ந்து வாசிக்க…)

மதுரை விமான நிலையத்தில் இருந்து அகதிகள் நாயகம் திரும்பினர்.

கப்பல் சேவையை எதிர்பார்த்து பலர் தாயகம் திரும்ப காத்திருக்கின்றனர்.
தமிழக முகாம்களில் உள்ள அகதிகள் நாடு திரும்புதல் அதிகதித்துள்ள நிலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆண்கள்,15 பெண்கள் என 32 பேர் மதுரை விமான நிலையத்தில் இருந்து 17.2.17 அன்று மாலை 4.30 இற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் உதவியுடன் தாயகம் திரும்பினர். 1990 மற்றும் 2009 காலப்பகுதியில் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்ற இவர்கள் சிவங்கை மாவட்டம் மூங்கில்ஊரணி,மதுரை மாவட்டம் உச்சப்பட்டி, ஆனையூர், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம், விருதுநகர் மாவட்டம் தாப்பாத்தி முகாம்களைச் சேர்ந்தவர்களாகும்.

(“மதுரை விமான நிலையத்தில் இருந்து அகதிகள் நாயகம் திரும்பினர்.” தொடர்ந்து வாசிக்க…)

பாஞ்சாலி சபதம்! காவியம் கலந்த நிகழ்கால நிலைமை!

ஏய்! அருச்சுனா என் சுயம்பரத்தில், அன்று தமிழரசு கட்சி தன் உணர்ச்சிகர பேச்சால் தமிழ் மக்கள் வாக்குகளை கவர்ந்தது போலவே, உன் வில்வீரம் காட்டி என்னை உனக்கு  மாலையிட வைத்தாய்.   தமிழ் காங்கிரஸ் மலையக மக்கள் விடயத்தில் தவறான் முடிவு எடுத்ததால், தமிழ் மக்கள் அதனை நிராகரித்தது போலவே, கர்ணன் வளர்ந்த குலத்தை சாட்டியே சபையினர் அவனை போட்டியில் இருந்து விலகவைத்தனர்.

(“பாஞ்சாலி சபதம்! காவியம் கலந்த நிகழ்கால நிலைமை!” தொடர்ந்து வாசிக்க…)

ஈராக்: மக்கள் எழுச்சிக்கான ஒத்திகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சிதைக்கப்பட்ட தேசங்களின் கதை கொடுமையானது. அவ்வாறு சிதைக்கப்பட்ட தேசங்களின் மீளுகை, இலகுவில் நடந்துவிடக் கூடியதல்ல. ஒருபுறம் ஒரு தேசத்தைச் சிதைத்ததன் பின்னணியில் செயற்பட்ட சக்திகள், சிதைத்ததற்கான காரணங்களையும் தாண்டிச் செல்வாக்குச் செலுத்துகின்றன. மறுபக்கமாக, சிதைக்கப்பட்டதன் விளைவால் புதிய சக்திகள் அரங்காடிகளாகவும் ஆதிக்க சக்திகளாகவும் தோற்றம் பெறுகின்றன. இவற்றுக்கிடையிலான அதிகாரப் போட்டியும் அதிகாரத்துக்கான அவாவும் அத்தேசத்தின் எதிர்காலத்தை எதுவித ஜயத்துக்கும் இடமின்றிக் கேள்விக்குறியாக்கின்றன.

(“ஈராக்: மக்கள் எழுச்சிக்கான ஒத்திகை” தொடர்ந்து வாசிக்க…)