சேனையூர், கட்டைபறிச்சான் பிரதேசங்களில் பட்டிப் பொங்கலும் மஞ்சு விரட்டும்

தமிழர்களின் தனித்துவ திருநாள் பொங்கல் அதிலும் தை இரண்டாம் நாள் நடை பெறும் மாட்டுப் பொங்கல் எங்கள் பிரதேசத்தில் பட்டிப் பொங்கல் எனவே அழைக்கப் படும். அன்றைய நாட்களில் ஒவொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்டளவுக்கு மாடுகள் இருந்தன மேய்ச்சல் நிலம் அதிகம் உள்ள எங்கள் ஊரில் வீட்டுக் காலையில் அடைக்கப் படும் மாடுகள் காலையில் திறந்து விட அவை மேய்ச்சல் நிலத்துக்கு போய் மாலையில் தானாகவே திரும்பி வரும்.

(“சேனையூர், கட்டைபறிச்சான் பிரதேசங்களில் பட்டிப் பொங்கலும் மஞ்சு விரட்டும்” தொடர்ந்து வாசிக்க…)

ஊரில் உழாத மாடு

யூதரான Henry Kissinger இஸ்ரேலுக்கு விஜயம் செய்த போது அவருக்கு கோட் சூட் தைக்க யூதர்கள் நல்லதொரு துணியொன்றை பரிசளித்தார்களாம். சந்தோசத்துடன் அதை வாங்கிய கிஸ்சின்ஜர் அமேரிக்கா திரும்பியதும் அதை தைக்க டெய்லரிடம் போனால் துணி பத்தாது என்றுவிட்டார். பிறகு கிஸ்சின்ஜர் தனது பிறந்த நாடான ஜெர்மனுக்கு அதை கொண்டு போனால் அங்கும் கோட்டுக்கும் சூட்டுக்கும் உது போதாது என்றுவிட்டார்கள்.

(“ஊரில் உழாத மாடு” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 6)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

எமதுவாகனதொடரணிபுலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்து சேர நன்றாக இருண்டுவிட்டது. வழமைபோல் உட்பிரவேசிக்கும் வரிசையில் பதிவுசெய்வதற்காகநானும் காத்துநின்றேன். எனக்குமுன்னால் நின்றகிறிஸ்தவபாதிரியார் தனதுமுறைவரபதிவுசெய்பவரிடம் அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டு அவனின் கேள்விகட்குபதிலளிக்க ஆரம்பித்தார். ‘உங்கள் பிரயாணத்தின் நோக்கம்”“தேவபணி” என்றார் அந்தப்பாதிரியார்.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 6)” தொடர்ந்து வாசிக்க…)

சமூக ஊடக அரசியல்: உடையும் மோடியின் குட்டு

(மீனா)

பா.ஜ.கவின் டிஜிட்டல் பிரிவில் பணிபுரிந்த எழுத்தாளரும் பட இயக்குனருமான சாத்வி கோஸ்லா. ஊடகவியலாளர் சுவாதி சதுர்வேதியின் “I am a troll” புத்தகம் பி.ஜே.பியுடைய டிஜிட்டல் படையின் ரகசியங்களை அம்பலப்படுத்தி மோடியின் குட்டை உடைத்திருக்கிறது. இந்நூலில் முக்கிய சாட்சியமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பவர், பி.ஜே.பி.யில் தன்னை ஒரு தன்னார்வலராக இணைத்துக்கொண்டு அவர்களின் சமூக ஊடக மையமான NDOC (National Digital Operations Centre)இல் பணியாற்றிய சாத்வி கோஸ்லா. அவருடைய நேர்காணலொன்று கேரவன் இதழில் வெளிவந்திருக்கிறது. தான் அமைப்பில் இணைந்தது பற்றியும் அவர்களோடு முரண்பட்டு வெளியேற நேர்ந்ததைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

(“சமூக ஊடக அரசியல்: உடையும் மோடியின் குட்டு” தொடர்ந்து வாசிக்க…)

செல்லாக் காசாக்கல்: அமெரிக்கா தீர்மானித்த இந்தியா

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாட்டுமக்கள் விரும்புவதை அரசாங்கங்கள் செய்வது மிகக்குறைவு. அதேபோல அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்கள் ஆதரவை வேண்டி நிற்பதில்லை. ஆனால் மக்கள் விரும்பாத, ஆதரவு தராத செயல்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கள் செய்கின்றன. இது ஒருவகை முரண்நகை.

(“செல்லாக் காசாக்கல்: அமெரிக்கா தீர்மானித்த இந்தியா” தொடர்ந்து வாசிக்க…)

இனிக்கும் பொங்கல் இனி எமக்கு எப்போது?

தை மாதப் பிறப்பு என்பது மண்ணை நம்மி வாழும் விவசாய பெருமக்கள், தம் நன்றிக்கடனை சூரியனுக்கு பொங்கலிட்டும், மறுநாள் உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளுக்கும், பயிருக்கு உரமான எருவை தந்த தமது பட்டி மாடுகளுக்கும், அனைத்துக்கும் மேலாக பயிர்கள் விளைந்து பலன் தரும்வரை தம்மை தக்கவைக்க, பால் தந்த பசுவுக்கும் நன்றி செலுத்தும் நாள்.

(“இனிக்கும் பொங்கல் இனி எமக்கு எப்போது?” தொடர்ந்து வாசிக்க…)

நாட்டிற்கு ஏற்பட்ட,ஏற்படக்கூடிய இழப்புகள்

இவ்வளவுநாட்களாக மோடி அரசு பணமதிப்பு நீக்கம் ரிசர்வ் வங்கியின் முடிவு என்று சொல்லிவந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி இது அரசின் முடிவு என்கிறது. இது நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று வெளியில் செல்வதற்கு கூட தைரியமற்ற பிரதமர் தான் 56″ நெஞ்சு பற்றி (தற்)பெருமை பேசுகிறார். கோடிக்கணக்கான மக்களை ,ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய முடிவை எவ்வித பொறுப்பும்,சிந்தனையும் இல்லாமல் மக்கள் அடையக்கூடிய இன்னல்கள்,தேசத்திற்கு ஏற்படக் கூடிய இழப்பைப் பற்றி எவ்வித அக்கறையும்,புரிதலும் இல்லாமல் சம்பந்தப்பட்ட அமைப்பை ,பொருளாதார நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவை இந்தியா மட்டுமல்ல இன்று உலகமே விமர்சிக்கிறது.

(“நாட்டிற்கு ஏற்பட்ட,ஏற்படக்கூடிய இழப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண முதல் அமைச்சரிடம் ஒரு கேள்வி…! அது எழுப்பியிருக்கும் பொறி!!

(சாகரன்)

‘A single spark can start a prairie fire’ என்று கூறினார் சீனப் புரட்சியின் தந்தை மாவோ சே துங். கனடா வந்திருக்கும் இலங்கை வடமாகாண சபையின் முதல் அமைச்சர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மொதம் 18 கேள்விகள் ஊடகவியலாளர்கள், அமைப்புகளால் கேட்கப்பட்டன. இதில் 17 கேள்விகளும் வடமாகாணப சபையின் முதல்வரை சிந்திக்க வைப்பதற்கு பதிலாக அவரை சந்தோஷத்திற்குள் உள்ளாக்க முன்வைத்த அரசவை புலவர்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பொற்காசு பெறும் கேள்வி என்ற வரையறைக்குள் இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தன. தற்போதைய வடமாகாண சபையின் யதார்த்த செயற்பாட்டை கேள்விகளுக்குள் உள்ளாக்கும் நோக்கில் வைக்கப்பட்டன அல்ல.

(“வடமாகாண முதல் அமைச்சரிடம் ஒரு கேள்வி…! அது எழுப்பியிருக்கும் பொறி!!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சங்கர் ராஜி என்ற விடுதலை ஆளுமை…!

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டம் சாராம்சத்தில் இரு அம்சங்களின் அடிப்படையில் ஆரம்பமானது என்பதே உண்மைநிலை ஒன்று வெறும் தேசியவாதம்(வெறி என்று கூறுவது சிறப்பாக இருக்கும்) அடிப்படையில் உருவாக்கம் பெற்றது இது தமிழர் விடுதலைக் கூட்டணியால உசுப்பேத்தப்பட்டு மரம்பழுத்தால் வெளவால் வரும் என்பதை நம்பி ஆமாற்து துப்பாக்கி தூக்கிய நிலை .ந்த போக்கை புலிகள் ரெலோ புலிகளில் இரந்தபிரிந்த புளொட் என்பன பெரிதும் தமக்குள் கொண்டிருந்தன.(புளொட் என்ற அமைப்பின் தோற்றத்தின் பின்பு(இடதுசாரி சிந்தனையாளர் சிலர் இதற்குள் உள்வாங்கப்பட்டது உண்மைதான்).

(“தோழர் சங்கர் ராஜி என்ற விடுதலை ஆளுமை…!” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு

(முதலாவது ஈழவிடுதலைப் போராட்டக்குழுக்களிடையே ஐக்கியம் என்பது இல்லை என்பதைவிட ஏகபோகத் தலமையின் விருப்பால் புலிகள் ஏனையவிடுதலை அமைப்புக்கள் மீது தாக்குதல் நடத்தி தடை செய்தனர் என்ற விடயம் திரிபுபடுத்திக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது கருணாவின் பிரிவு அவரின் கருத்தியல் அடிப்படையில்(இது சரியா பிழையா என்பது வேறு விடயம்) ஏற்பட்டது இதனை பிரபாகரன் மீண்டும் தனது ஆயுத வன்முறை மூலம் கருணாவை இல்லாது ஒழிக்க முற்பட்டார் என்பது ஏதோ கருணா தான்தோன்றித்தனமாக பிச்சுக் கொண்டு வெளியேறியதாக திரித்துக் கூறப்பட்டுள்ளது – ஆர்)

(காரை துர்க்கா)

இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதப் படைப்பு மகத்தானது. ஆனாலும் மனிதன் நற்பண்புகளை கொண்டிருப்பது போல, தீய பண்புகளையும் கொண்டிருப்பதால் அவனுக்குள் சண்டைகள், சச்சரவுகள் என ஏராளமான துன்பங்கள். நாடுகளுக்கிடையே பிணக்குகள்; ஒரு நாட்டு இனங்களுக்கிடையே பிணக்குகள். அவ்வகையிலேயே இலங்கைத் தீவில் அழுகிய பிணக்காக இனப்பிணக்கு பல தசாப்தங்களைக் கடந்து, நாறிக் கொண்டிருக்கின்றது.

(“கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)