வடமாகாண முதல் அமைச்சரிடம் ஒரு கேள்வி…! அது எழுப்பியிருக்கும் பொறி!!

(சாகரன்)

‘A single spark can start a prairie fire’ என்று கூறினார் சீனப் புரட்சியின் தந்தை மாவோ சே துங். கனடா வந்திருக்கும் இலங்கை வடமாகாண சபையின் முதல் அமைச்சர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மொதம் 18 கேள்விகள் ஊடகவியலாளர்கள், அமைப்புகளால் கேட்கப்பட்டன. இதில் 17 கேள்விகளும் வடமாகாணப சபையின் முதல்வரை சிந்திக்க வைப்பதற்கு பதிலாக அவரை சந்தோஷத்திற்குள் உள்ளாக்க முன்வைத்த அரசவை புலவர்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பொற்காசு பெறும் கேள்வி என்ற வரையறைக்குள் இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தன. தற்போதைய வடமாகாண சபையின் யதார்த்த செயற்பாட்டை கேள்விகளுக்குள் உள்ளாக்கும் நோக்கில் வைக்கப்பட்டன அல்ல.

(“வடமாகாண முதல் அமைச்சரிடம் ஒரு கேள்வி…! அது எழுப்பியிருக்கும் பொறி!!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சங்கர் ராஜி என்ற விடுதலை ஆளுமை…!

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டம் சாராம்சத்தில் இரு அம்சங்களின் அடிப்படையில் ஆரம்பமானது என்பதே உண்மைநிலை ஒன்று வெறும் தேசியவாதம்(வெறி என்று கூறுவது சிறப்பாக இருக்கும்) அடிப்படையில் உருவாக்கம் பெற்றது இது தமிழர் விடுதலைக் கூட்டணியால உசுப்பேத்தப்பட்டு மரம்பழுத்தால் வெளவால் வரும் என்பதை நம்பி ஆமாற்து துப்பாக்கி தூக்கிய நிலை .ந்த போக்கை புலிகள் ரெலோ புலிகளில் இரந்தபிரிந்த புளொட் என்பன பெரிதும் தமக்குள் கொண்டிருந்தன.(புளொட் என்ற அமைப்பின் தோற்றத்தின் பின்பு(இடதுசாரி சிந்தனையாளர் சிலர் இதற்குள் உள்வாங்கப்பட்டது உண்மைதான்).

(“தோழர் சங்கர் ராஜி என்ற விடுதலை ஆளுமை…!” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு

(முதலாவது ஈழவிடுதலைப் போராட்டக்குழுக்களிடையே ஐக்கியம் என்பது இல்லை என்பதைவிட ஏகபோகத் தலமையின் விருப்பால் புலிகள் ஏனையவிடுதலை அமைப்புக்கள் மீது தாக்குதல் நடத்தி தடை செய்தனர் என்ற விடயம் திரிபுபடுத்திக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது கருணாவின் பிரிவு அவரின் கருத்தியல் அடிப்படையில்(இது சரியா பிழையா என்பது வேறு விடயம்) ஏற்பட்டது இதனை பிரபாகரன் மீண்டும் தனது ஆயுத வன்முறை மூலம் கருணாவை இல்லாது ஒழிக்க முற்பட்டார் என்பது ஏதோ கருணா தான்தோன்றித்தனமாக பிச்சுக் கொண்டு வெளியேறியதாக திரித்துக் கூறப்பட்டுள்ளது – ஆர்)

(காரை துர்க்கா)

இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதப் படைப்பு மகத்தானது. ஆனாலும் மனிதன் நற்பண்புகளை கொண்டிருப்பது போல, தீய பண்புகளையும் கொண்டிருப்பதால் அவனுக்குள் சண்டைகள், சச்சரவுகள் என ஏராளமான துன்பங்கள். நாடுகளுக்கிடையே பிணக்குகள்; ஒரு நாட்டு இனங்களுக்கிடையே பிணக்குகள். அவ்வகையிலேயே இலங்கைத் தீவில் அழுகிய பிணக்காக இனப்பிணக்கு பல தசாப்தங்களைக் கடந்து, நாறிக் கொண்டிருக்கின்றது.

(“கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழின் போக்கும் மஹிந்தவை எழுப்பும் சூத்திரமும்

(எழுக தமிழ் என்று சொல்லி உசுப்பேத்தும் அரசியலில் சூத்திரத்திற்கு உடன்பாடு இல்லை ஆகினும் தமிழ் மக்கள் பேரவையின் சுய ரூபத்தை அம்பலப்படுத்த இந்தக் கட்டுரையும் உதவலாம் என்பதன் அடிப்படையில் பிரசிரிக்கின்றோம்- ஆர்)

(புருஜோத்தமன் தங்கமயில்)

இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்காக மக்களைத் தயார்படுத்தும் பிரசாரப்பணிகள் குறிப்பிட்டளவில் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணியில் சுமார் 8,000 பேர் கலந்து கொண்டிருப்பார்கள். இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில், போராட்ட வடிவமொன்றில் அதிகளவான தமிழ் மக்கள் கூடிய தருணம் அது.

(“எழுக தமிழின் போக்கும் மஹிந்தவை எழுப்பும் சூத்திரமும்” தொடர்ந்து வாசிக்க…)

காணி வீட்டு உரிமை பிரச்சினை மற்றும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னேடுக்க மலையக சமூக நடவடிக்கை குழு தீர்மானம்

காணி வீட்டு உரிமை பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்வதுடன் அது தொடர்பாக மலையக மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் அரசாங்கமும், அரசாங்கம் சார்பான மலையக தலைமைகளும் செயற்பட்டு வருவதனால் மலையக மக்களின் காணி வீட்டு உரிமை பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக விழிப்பூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் மலையக சமூக நடவடிக்கைகுழுவின் மத்திய நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

(“காணி வீட்டு உரிமை பிரச்சினை மற்றும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னேடுக்க மலையக சமூக நடவடிக்கை குழு தீர்மானம்” தொடர்ந்து வாசிக்க…)

வெளிநாட்டு நீதிபதிகளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும்

அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின்போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில், பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமா என்ற சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

(“வெளிநாட்டு நீதிபதிகளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும்” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி

வட மாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த சனியன்று தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாக்குவங்கி அரசியலுக்குள் நுளைக்கப்படுவதற்கு முன்பதாக, இலங்கைப் பேரினவாத அரசின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாகச் செயற்பட்ட விக்னேஸ்வரனின் திடீர் தேசியவாதத்தின் பின்புலம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது. தெற்காசியாவில் ஏகாதிபத்தியங்களின் ஈர்ப்பு மையமாக மாறியுள்ள இலங்கை அரசியலில் ‘தமிழ்த்’ தேசியவாதத்தை விக்னேஸ்வரன் கையகப்படுத்தியுள்ளதன் பின்புலத்தில் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் பங்கையும் அவதானிக்க முடிகிறது.

(“வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி” தொடர்ந்து வாசிக்க…)

2017: காத்திருக்கும் கதைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்வுகூறல் எளிதல்ல நடக்கவுள்ள அனைத்தையும் முன்கூட்டி அறிய இயலின் அவற்றுள் பலவற்றை நடப்பதற்கு முன்னர் தவிர்க்கமுடியும். எதிர்காலத்தின் சுவை அதன் எதிர்வுகூறவியலாமையேயாகும். அதேவேளை, எதிர்காலம் வெறும் இருட்குகையல்ல. பிறந்துள்ள புதிய ஆண்டு புதிய சவால்களையும் சுவைகளையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இவ்வாண்டும் பல கதைகள் நிகழவும் சொல்லவும் காத்துள்ளன. அவற்றுள் சில கதைகளின் முகவுரையை இங்கே எழுத விழைகிறேன். கதைகளையும் முடிவுரைகளையும் விடாது எழுதுவேன் என்ற நம்பிக்கையில்….

(“2017: காத்திருக்கும் கதைகள்” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபை முதல் அமைச்சரின் கனடா விஜயமும்…..! இதன் அதிர்வலைகளும்…..!!

(பேட்டியை முழுமையாக காணெளியில் காண….)

வடக்கு மகாண முதல் அமைச்சர் நிதி திரட்டும் நோக்கோடு இரட்டை நகரம் என்பதை முன்னிலைப்படுத்தி கனடாவிற்கு வருகை தந்திருக்கின்றார் என்று பலராலும் கருதப்படும் நிலையில் புலிகளின் பல்வேறு பிரிவின் ஒரு பிரிவினர் மாத்திரம் இதற்கான ஒழுங்குகளை செய்திருப்பதாக அறிய முடிகின்றது. அபிவிருத்திக்கு இலங்கை அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை முறைப்படி முழுமையாக செலவு செய்யாமலும் செலவு செய்தவற்றில்  நிதி மோசடியையும் உடைய அமைச்சர் அவையின் தலைவர் வட மாகாண முதல் அமைச்சர். கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் நிதி திரட்டலில் ஈடுபட்டிருக்கும் முதல் அமைச்சின் முயற்சிக்கு அவ்வவ் நாடுகளில் முன்னாள் உட்டியல் குலுக்கக்காரர் சிலர் உதவ புறப்பட்டிருப்பதும் மக்களால் எச்சரிகையாக பார்க்கப்படுகின்றது.

(“வட மாகாண சபை முதல் அமைச்சரின் கனடா விஜயமும்…..! இதன் அதிர்வலைகளும்…..!!” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் முதல்வர் விக்கி..!!! – கொன்றால் பாவம் தின்றால் போய்விடும்..!!!

காலை நக்கி பாவமன்னிப்பு கேட்க பின்கதவு தட்டும் அமைப்புகள்!!

கனடாவுக்கு போகவிடாமல் பெரும்பாடுபட்டு பெட்டிசம் அடித்த அமைப்புகளில் ஒன்றான தமிழ் காங்கிரசு அமைப்பினர் தர்ப்போது – முதலவர் விக்கியை கூப்பிட்ட குழுவினரிடம் பின்கதவால் கௌரவ பிச்சை எடுக்கினமாம் என தெரியவருகிறது. சம்பந்தருடைய அரசியல் காலக் கடத்தலை விக்கி எதிர்க்கிறார் அதனால் நாங்கள் விக்கியை தூக்கி பிடிக்கமாட்டோம் எங்களுக்கு சம்பந்தன் சுமந்திரன் தான் ஏக கடவுளர் என துதி பாடின ஆக்கள் – இப்ப எல்லா தடைகளையும் தாண்டி விக்கி கனடா சென்றுவிடடார் என்றவுடன் – தங்களது விருந்துபசார நிகழ்வுக்கும் அவரை ஒருக்கா சாப்பிட விடுங்கோ – எங்கட கௌரவத்தையும் காப்பாத்துங்கோ என்கிற பாணியிலே – தமிழ் காங்கிரசார் பின்கதவு பிச்சை எடுக்கினம்மாம்.

(“கனடாவில் முதல்வர் விக்கி..!!! – கொன்றால் பாவம் தின்றால் போய்விடும்..!!!” தொடர்ந்து வாசிக்க…)