சுபஸ்ரீ மரணம்: என் நிகழ்ச்சியில் கட் அவுட் வைக்கவேண்டாம்: சூர்யா உருக்கமான வேண்டுகோள்

என்னை கட்-அவுட், பேனர் வைத்துதான் சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள் அரசாங்க பள்ளிகளுக்கு செய்யும் உதவிகள், ரத்ததான நிகழ்ச்சிகள் என நடத்துவதே போதுமானது என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

விக்ரமின் சமிக்ஞை: இழப்பைக் கடந்து தொடரட்டும் சந்திரயானின் சாதனை

சமீப நாட்களாக நிலவுக்கான தரையிறங்கு கலம் ‘விக்ரம்’ பற்றிய கவலை இந்தியர்களை ஆக்கிரமித்திருக்கிறது. நிலவை ஆராயும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முயற்சியில், இந்தக் கலம் சற்று வேகமாக விடுபட்டு, நிலவின் தரையில் சாய்ந்ததுடன் தகவல் தொடர்பையும் இழந்துள்ளது. மற்றபடி, நிலவை ஆராயும் முயற்சி வெற்றிகரமாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. விக்ரமிடமிருந்து சமிக்ஞைகள் பெறுவதுகூடச் சாத்தியம்தான் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளில் ஒருசிலருக்கு இருக்கிறது.

‘தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் சமூக மாற்றத்தை நோக்கி பயணித்திருக்கலாம்’

“மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டகையோடு கிடைத்திருக்கவேண்டிய உரிமைகளைக்கூட தமிழ் முற்போக்கு கூட்டணியே தற்போது பெற்றுக்கொடுத்துவருகின்றது. எனவே, மலையக அரசியல் தலைமைகள் அன்று தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் இந்நேரம் முழுமையானதொரு சமூக மாற்றத்தை நோக்கி பயணித்திருக்கலாம்.’’ என, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரன்

(Subamangala Saththiyamoorthy)

இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் முததையா முரளிதரன் விடுதலைப் புலிகள் பற்றிக் கூறிய கருத்து அந்த இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது இயல்பானதுதான்.
முரளிதரன் இத்தகைய ஒரு கருத்தை விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு 10 வருடங்கள் கழிந்த நிலையில், அதுவும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச பங்குபற்றிய ஒரு நிகழ்ச்சியில் வைத்து ஏன் கூறினார் என்பது சிந்தனைக்குரியதுதான்.

விமான நிலையத்தில் அதிக நெரிசல்

வருடாந்த போரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகைதந்திருந்த போரா குழுவினர் இன்று தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன நரா லோகேஷ் மற்றும் அவரது தெலுங்கு தேசக் கட்சியின் சில தலைவர்கள், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் வைஸ்.எஸ் ஜகன் மோகன் ரெட்டியின் அரசாங்கத்துக்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் பங்குபற்றுவதலிருந்து தடுக்கப்படுவதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாயகத்தை விட்டு துரத்துவோம்…..

(Sritharan Thirunavukarsu)

காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களின் உறவுகளின் பேரில் போராடுபவர்கள் மானிட அடையாளத்தை முன்நிறுத்த வேண்டும். தமிழ்பாசிச அடையாளத்தை அல்ல. காணமல் ஆக்கப்பட்டு இதுவரை வீடு திரும்பாதோர் 2009 வரையிலான 30 வருடங்களில் பல்லாயிரம். ஒருசிலர் அல்ல. தாயகத்தை விட்டு துரத்துவோம் ஒரிசாவிற்கு ஓட்டுவோம் என்ற உருட்டல் மிரட்டல் காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டது .

நிலவுக்கு அருகே செல்லும் சந்திரயான் 2 ஆர்பிட்டர்?

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, சந்திரயான் 2-இன் ஆர்ப்பிட்டர், நிலவைச் சுற்றும் தொலைவை, 50 கிலோ மீட்டராகக் குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.