இன்று தேசிய எதிர்ப்பு தினம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

புதிய வருமான வரி திருத்தத்தை மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று தேசிய எதிர்ப்பு தினத்தை செயற்படுத்துவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன் பிரதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையில் 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.