அல்பிரட் துரையப்பா

1982 இல் தொழிற்பயிற்சிக்காக யாழ் கட்டிட திணைக்களத்தில் சேர்ந்தேன்.அப்போது நாவாந்துறை பகுதில் ஒரு பொது நூலகம் கடும் காற்றினால் சேதமடைந்ததாக தகவல்கள் வந்தன.இதைப் பார்வையிட கட்டிட திணைக்கள ஊழியர்களுடன் நானும் போனேன்.அவர்கள் பார்வையிட நான் அங்கு நின்றவரகளுடன் உரையாடினேன்.

(“அல்பிரட் துரையப்பா” தொடர்ந்து வாசிக்க…)

பேரணிப் பிரச்சினை மோசமடைகிறது துருக்கி அமைச்சர்களை தடுத்தது நெதர்லாந்து

துருக்கியின் குடிபெயர்ந்தோர் மத்தியில் துருக்கி மேற்கொண்டுவரும் அரசியல் பிரசாரம் தொடர்பான பிரச்சினையொன்றில், றொட்டர்டாமில் துருக்கி அமைச்சர்கள் நேற்று முன்தினம் (11) பேசுவதை, நெதர்லாந்து தடுத்துள்ளது. இதனையடுத்து, எஞ்சியிருக்கும் நாஸி என நெதர்லாந்தை, துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோவான் விளித்துள்ளார். றொட்டர்டாமிலுள்ள துருக்கித் துணைத் தூதரகத்துக்குள் நுழைய, துருக்கியின் குடும்ப அமைச்சர் பாத்மா பெதுல் சயான் காயா, பொலிஸாரினால் தடைசெய்யப்பட்டமையைத் தொடர்ந்தே, ஏற்கெனவெ இருந்த பிரச்சினை, பாரிய இராஜதந்திர சம்பவமாக மாறியிருந்தது.

(“பேரணிப் பிரச்சினை மோசமடைகிறது துருக்கி அமைச்சர்களை தடுத்தது நெதர்லாந்து” தொடர்ந்து வாசிக்க…)

பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம்

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதி, கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்டது. இதற்குப் பின்னர் கலப்பு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருவேறு கோணங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

(“பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம்” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக, கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுக்கவிதிகளை மீறிய மாணவர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

(“மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய கால அவகாசம் வழங்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

(“கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகும்?” தொடர்ந்து வாசிக்க…)

‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’

அடுத்த தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை அரசியல் நாற்காலியில் இருந்து கீழ் இறக்க செயற்படவுள்ளதாக கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்ப ட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். (“‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’” தொடர்ந்து வாசிக்க…)

ஐரோம் ஷர்மிளா பெயரில் இருக்கும் அழகியல் வசீகரம்

நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியதன் மூலம் மற்றைய மாநிலங்களில் அது தவறவிட்ட செய்தியை இல்லாமல் ஆக்கியிருக்கிறது பிஜேபி. இந்த வெற்றி குறித்து தெரிவிக்கப்படுவது அச்சம் என்றால், மணிப்பூரின் ‘ஐரோம் ஷர்மிளா’ வெறும் தொண்ணூறு வாக்குகள் மட்டுமே வாங்கி தோல்வியைத் தழுவியிருப்பது நாடு முழுக்க ஆழ்ந்த கசப்பை உருவாக்கிவிட்டிருக்கிறது.

(“ஐரோம் ஷர்மிளா பெயரில் இருக்கும் அழகியல் வசீகரம்” தொடர்ந்து வாசிக்க…)

ஹேரோயின் வர்த்தகம் உச்சத்தை அடைகிறது – 15 வருட ஆக்கிரமிப்பின் எதிர் விளைவு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் நிறைவடைகின்றன. அமெரிக்காவில் வாழ்வதும் மடிவதும் ஒரு அழகிய கனவு என்று அமெரிக்காவின் கொத்துக்குண்டுகளிலிருந்து தப்பிய அப்பாவிகள் முகநூலில் அங்கலாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தகவல்கள் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு இப் பதினைந்து வருடங்களில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் தான். பச்சிழம் குழந்தைகளும், முதியவர்களும் கூட…

(“ஹேரோயின் வர்த்தகம் உச்சத்தை அடைகிறது – 15 வருட ஆக்கிரமிப்பின் எதிர் விளைவு” தொடர்ந்து வாசிக்க…)

ஊழல் செய்த தென் கொரிய பெண் அதிபர் அதிரடியாக வந்த ஆப்பு !

தென் கொரிய நாட்டின் அதிபராக முதன்முதலாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் பார்க் கியுன் ஹை (வயது 65). பெண்ணான இவருக்கு சோய் சூன் சில் என்ற தனது நெருங்கிய தோழியின் வாயிலாக வினை தேடி வந்தது. இந்த சோய் சூன் சில், அதிபர் பார்க்கிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தனது அறக்கட்டளைகளுக்கு பல கோடி டாலரை முன்னணி தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெற்று ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழலில் பார்க் கியுன் ஹைக்கு நேரடி தொடர்பு இருந்தது; அதிலும் குறிப்பாக அவர் தனது அலுவலகத்தில் ஏற்கத்தகாத வகையில் தோழிக்கு சகல உரிமைகளையும் வழங்கி இருந்தார் என்று கூறப்படுகிறது.

(“ஊழல் செய்த தென் கொரிய பெண் அதிபர் அதிரடியாக வந்த ஆப்பு !” தொடர்ந்து வாசிக்க…)

இயற்கையுடன் வாழ்ந்த மூக்குப்பேணியர்!

அந்தப் பெரியவர் தன் 95 வயதில் இயற்கை எய்தினார் என்ற சோகச் செய்தி இன்று கிடைத்தது. அன்று அவர் உண்ட தேனில் ஊறிய காட்டு மாடு, மான் மரை வத்தல், உடன் பிடித்து சமைத்த உடும்பு கறி, கைக்குத்தல் அரிசிச் சோறு, அவரது தோட்டத்து மரக்கறி, பூநகரி கடலில் பிடித்த குட்டன் மீன், கணவாய், இறால், நண்டு, திருக்கை, சுறா, கூடவே உளுத்தம்மா கழி, அவித்த பனங்கிழங்கு, எள் உருண்டை, ராசவள்ளி அவியல், என அத்தனையும் உண்ட  பலத்தால்,

(“இயற்கையுடன் வாழ்ந்த மூக்குப்பேணியர்!” தொடர்ந்து வாசிக்க…)